Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து கருத்து தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து கருத்து தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல பழ. நெடுமாறன்

1/31/2008 6:47:16 PM

வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என உச்ச நீதிமன்றமே தெளிவாகக் கூறியுள்ளது என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச்செயல் அல்ல. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைதுசெய்யப்பட்டார்.

ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன. விடுதலைப் புலிகள் போன்ற தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதவராக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றமே தெளிவாக கூறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வும் இதை பெரும் பிரச்சினையாக்கி சட்டசபையில் விவாதம் நடத்தி வருவது தேவையற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைதுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோருவதில் நியாயம் இல்லை. இவர்களின் நெருக்குதலுக்குப் பணிந்து முதல்வர் கருணாநிதியும், புலிகளை ஆதரித்துப் பேசுவோரைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வரவும் தயார் என்று கூறியுள்ளார். இது ஜனநாயக விரோத செயல் என்பது தெள்ளத்தெளிவு என்று கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ ஆவி லோகத்தில் இந்திரா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் இதனால் சரியான சண்டையாம்.

இந்திரா காந்தி இப்போ தனது கணவர் இருந்திருந்தால் சீக்கியரை தடைசெய்து இருப்பார் என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருக்கின்றாராம் :blink:

வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என உச்ச நீதிமன்றமே தெளிவாகக் கூறியுள்ளது என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச்செயல் அல்ல. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோஇ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைதுசெய்யப்பட்டார்.

ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன. விடுதலைப் புலிகள் போன்ற தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதவராக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றமே தெளிவாக கூறிவிட்ட நிலையில்இ காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வும் இதை பெரும் பிரச்சினையாக்கி சட்டசபையில் விவாதம் நடத்தி வருவது தேவையற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைதுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோருவதில் நியாயம் இல்லை. இவர்களின் நெருக்குதலுக்குப் பணிந்து முதல்வர் கருணாநிதியும்இ புலிகளை ஆதரித்துப் பேசுவோரைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வரவும் தயார் என்று கூறியுள்ளார். இது ஜனநாயக விரோத செயல் என்பது தெள்ளத்தெளிவு என்று கூறியுள்ளார்.

புலிகளின் தடையினை நீக்கவேண்டும் என்று நான் கோரியதில் தவறில்லை - திருமாவளவன்

வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கவேண்டும் என்று நான்கோரியதில் எந்தத் தவறும் இல்லை. எந்த ஒரு அமைப்பையும் ஆதரித்தோஇ எதிர்த்தோ பேசுவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கருத்துரிமை உண்டு.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசும் பேச்சினை சட்டம் தண்டிக்குமானால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்டு மாநாட்டில் புலிகள் மீதான தடையினை நீக்கவேண்டும் என்று திருமாவளவன் கோரியிருந்தார்.

இதனையடுத்து திருமாவளவனை கைது செய்யமாறுகோரி சட்டசபையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர்மட்டக் குழு கூடி புலிகளை ஆதரிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு கச்சதீவு பகுதிக்கு அருகில்இ சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்ணி வெடிகளை புதைத்து இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பகை முற்றும் போதுதான் இதுபோன்று செய்வார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கும் நோக்கத்துடனும்இ இந்திய அரசுக்கு சவால் விடும் வகையிலும் இலங்கை அரசு நடந்து வருகிறது. போர் தொடுக்கவேண்டும் கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால் கச்சதீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் தமிழக மீனவர்களிடம் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சிங்கள அரசை இந்தியா எச்சரிக்கை செய்யாதது வேதனையளிக்கிறது. இனிமேலும் இலங்கையை இந்திய அரசு ஆதரிப்பது இந்தியாவின் ஆளுமையை கேள்விக்குறியாக்கி விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.