Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்பிடிப்போம் - கனடிய தமிழர் பேரவை

Featured Replies

சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ...

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம்

சிறிலங்காவிற்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது.

தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்டது. அறவழியில் நியாயம் கேட்ட தமிழ்த் தலைவர்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். தொடர்ந்து 1958 இல் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கின்ற படலம் சிங்களவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இனப்படுகொலையின் தொடர்ச்சி வெவ்வேறு வழிமுறைகளில் வளர்ச்சி பெற்று இன்று தீவிரமான ஒருகட்டத்தை அடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தனது முப்படைகளையும் கொண்டு தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சிங்களப்பகுதிகளில் வாழும் தமிழர்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும் வகையில் அவர்களைத் தனது பாதுகாப்புப்படையினரைக் கொண்டும், கூலிப்படைகளைக் கொண்டும் கொலை செய்தும், கடத்தியும், அவர்களின் பொருளாதாரத்தைச் சூறையாடியும் வருகிறது.

தமிழர் தாயகத்தில் சிங்களப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாளாந்தம் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி சீரழிக்கப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.குடாநாட்டு மக்கள் திறந்த வெளிக்கைதிகளாக வாழ நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர். படை ஆக்கிரமிப்பற்ற வன்னிப்பகுதிகளில் நாளாந்தம் எறிகணை வீச்சுக்களினாலும் வான் தாக்குதல்களினாலும் தமிழ்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது வன்னி நிலப்பரப்பைச் சுற்றிலும் சிறிலங்காப்படையினர் பாரிய ஆயுதங்களுடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் முனைப்பில் சுற்றிவளைத்து நிற்கின்றனர்.

சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை தமிழ் மக்களின் குருதியில் குளித்து கொண்டாடும் ஆவலில் சிறிலங்காவின் சனாதிபதியும் அவரது சகாக்களும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் உடலங்களில் ஏறி நின்று சிங்கக்கொடியினை ஏற்ற அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலநாட்களே உள்ள சிறிலங்கா சுதந்திர நாளிற்கு முன்பாக வன்னியின் நிலப்பரப்புக்களை வன்பறிப்புச் செய்து அந்த வெற்றிச்செய்தியுடன் தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முனைப்பில் வன்னியின் எல்லைகளில் கடும் போரை சிறிலங்காப்படைகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

இவ்வேளையில் கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களாகிய நாம் எதிர் வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாளான சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம்.

கனடிய தமிழர் பேரவை

மூலம்: பதிவு இணையத்தளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.