Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தின் இயல்பான சுழற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் இயல்பான சுழற்சி

நான்காம் ஈழப்போர் மாவிலாற்றில் தொடங்கி சம்பூர் வாகரை வவுணதீவு கொக்கட்டிச்சோலை குடும்பிமலையூடாக வன்னிக்குள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என கொழும்பின் அனைத்துவட்டாரங்களும் வெகு சில மாதங்களுக்கு முன்னர் மார்தட்டிக்கொண்டன.

இதன் வழியாக வன்னிக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்காக நிகழ்ச்சி நிரலைக்கூட அவர்கள் வெளியிட்டும் இருந்தார்கள். இதன் உச்சமாக ஐந்து படையணிகள் (53,56,57,58,59 வது டிவிசன்கள்) வன்னிக்குள் புகுவதற்கு தயாராக இருப்பதாகவும் வெறும் 7200 ஏக்கர் நிலம்மட்டுமே புலிகளின் வசம் இருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பேசவல்லராகிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த 20ம் திகதி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன காலைச்செய்தி அறிக்கையில் முதன்மைச் செய்தியோ வேறுவிதமாக இருந்தது. நாட்டின் பாதுகாப்புக்குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் என மக்களை வேண்டிக்கொண்டதோடு தென்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 8000; படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 2000 ஊர்காவற்படையினர் நியமிக்கபடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அரசு யுத்தத்தை வடக்கிற்குள் அதிலும் வன்னிக்குள் முடக்கிவிடுவதற்கு முயற்சித்தபோதும் யுத்தம் அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனறாகல வழியாக இப்போது இரத்தினபுரி மாவட்டத்திற்குள்ளும் பிரவேசித்து விட்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்திரனபுரி மாவட்டத்திற்குட்பட்ட உடவளவை வனச்சரணாலயம் ஆயுதபாணிகள் அங்கு மறைந்திருக்கலாம் என்ற அச்சத்தையடுத்து மூடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் மூடப்பட்ட யால வனச்சரணாலயம் மீளத்திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஒரு சில நாட்களுக்குள்ளேயே இந்த வனச்சரணாலயம் மூடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. மட்டுமன்றி மொனறாகலையின் சப்ரகமுவ மாகாண எல்லையை ஒட்டிய சில கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருப்பதான தகவலும் வந்திருக்கிறது. படையினரும் அரச அதிகாரிகளும் எந்தளவுதான் மக்களை தைரியமூட்ட முயற்சித்தபோதும் அவர்கள் அவற்றை நம்பத்தயாராக இல்லை. தங்களுடைய கிராமங்களை ஒட்டிய காட்டுப்பகுதிகளுக்குள் ஆயுதபாணிகள் நடமாடுவதாகவும் அவர்களால் கொல்லப்பட்ட தமது சகாக்களின் சடலங்கள் அக்காடுகளுள் மேலும் கிடப்பதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள். பிந்திக்கிடைத்த தகவலின் படி இவ்வாறான மேலும் மூன்ற சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் திருமகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எதிர்கொள்கின்ற பாதுகாப்பு நெருக்கடிகளை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளன. குடந்த 16ம் திகதி புத்தள பகுதியில் இடம்பெற்ற மூன்று தாக்குதல் சம்பவங்களையடுத்து அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 500 கிராமவாசிகளிற்கு துப்பாக்கிகளை வழங்குவதென அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் சிபார்சிற்கு அமைய ஜனாதிபதியால் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் தமிழர் கேக்கும் குறைந்தபட்ச சமஷ்டி முறையையாவது கொடுத்தால் இதுவெல்லாம் நிகழாது என்று யாரும் மகிந்தவுக்கோ அல்லது முன்பிருந்த சிங்களத் தலைமைகளுக்கொ சொல்கிறார்களில்லையே ? தமிழனை அழிப்பதாக நினைத்துக்கொண்டு முழு இலங்கையையும் அல்லவா அழிக்கிறார்கள். எப்போதுதான் சிங்களம் திருந்தப் போகுதோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.