Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமுனையிலிருந்து படைகள் ஆனையிறவை நோக்கி நகரலாம்; போர் இப்போது உக்கிரமான கட்டத்தை நெருங்கிச் செல்கிறது கல்முனையிலிருந்து பலாலியை முடக்கமுடியும்

Featured Replies

பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இருபக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Feb 4 9:50:00 2008

வடமுனையிலிருந்து படைகள் ஆனையிறவை நோக்கி நகரலாம்; போர் இப்போது உக்கிரமான கட்டத்தை நெருங்கிச் செல்கிறது கல்முனையிலிருந்து பலாலியை முடக்கமுடியும்

"லக்பிம' ஆங்கில வார இதழின் நேற்றைய பாதுகாப்பு நிலைவரம் கட்டுரையின் தமிழாக்கம் இது.

கடந்த திங்கட்கிழமை ஜனவரி 28 முற்பகல் 9.15 மணி யளவில் ரஷ்யத் தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக வானூர்தி உயர் அதிகாரிகளுடன் பலாலியில் தரையிறங்க ஆயத்தமா கிய போது, பீரங்கி எறிகணைகள் பலாலி தளத்திற்குள் வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. யாழ்.குடாநாட்டில் உள்ள படையினரின் தலைமையகம் பலாலித் தளமாகும்.

வானூர்தியில் இருந்த உயர் அதிகாரிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஏயர் மார்சல் டொனால்ட் பெரேரா ஆகி யோர் இருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படையணியின் பதக்கம் அளிக்கும் விழாவில் கலந்து கொள் வதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

பூநகரியின் கல்முனையின் முனைப் பகுதியில் இருந்து இரு 130 மி.மீ பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகளில் 15 எறிகணைகள் பலாலித் தளத்துக்குள் விழுந்து வெடித்திருந்தன. இத்தாக்குதலில் 55 ஆவது படை யணியைச் சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டது டன் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தும்படி யாழ்.மாட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்திரசிறி உத்தரவிட்டிருந்தார். வான் படையின் வானூர்திகளும் தாக்குதலை நடத்தியிருந்தன.

எனினும் விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை நகர்த்தி யிருக்கலாம் என படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை விரைவாக நகர்த்தும் திறன் கொண்டவர்கள். உழவு இயந்திரங்களின் உதவியுடன் அவர்கள் பீரங்கிகளை தாக்குதலின் பின்னர் விரைவாக நகர்த்தி விடுவதுண்டு.

பூநகரியின் கல்முனை முனைப் புள்ளியானது விடு தலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி யாகும். அதாவது இப்புள்ளியில் இருந்து 27 கி.மீ தூர வீச்சிற் குள் யாழ்.குடாநாட்டின் பிரதான தளம் அடங்குவது குறிப் பிடத்தக்கது.

கல்முனையிலிருந்து பலாலியை முடக்க முடியும்

130 மி.மீ ரக பீரங்கியின் தூர வீச்சு 27.5 கி.மீ ஆகும் எனவே கல்முனை புள்ளியில் இருந்து விடுதலைப் புலிகளால் பலாலித்தளத்தை முடக்கமுடியும். விடுதலைப் புலிகள் வசம் நான்கு 130 மி.மீ பீரங்கிகளும் இருபது 122 மி.மீ. பீரங்கி களும், எண்பது 120 மி.மீ மோட்டார்களும் உண்டு என நம்பப்படுகின்றது.

பாதுகாப்புத்துறை உயர்அதிகாரிகளின் பயணத்தை தடுப் பதே இத்தாக்குதலின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறி யுள்ளது. எனினும் கவசத்தாக்குதல் படையணியின் விழா திட்டமிடப்பட்ட வகையில் நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதீதியாக யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி சந்திர சிறி பங்குபற்றி இருந்ததுடன், எட்டு அதிகாரிகளும் 125 படை யினரும் அணிவகுப்பு மரியாதையை வழங்கியிருந்தனர்.

கவசத்தாக்குதல் படையணியானது சரத்பொன்சேகாவின் ஆலோசனையில் உதயமாகிய உத்தியாகும். படையினரின் நகர்வுத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் இது உருவாக் கப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளுடன் ஒப்பிடும்போது அதன் சுடுதிறனும் அதிகமாகும்.

எனினும் இப்படையணிக்கு தேவையான விநியோகங் கள் அதிகமாகும். அதாவது அவர்களின் வாகனங்களை பராம ரிப்பதற்கு தேவையான படையினரும் அதிகம்.

சில படை நடவடிக்கைகளில் இலகு காலாட் படையி னரின் நகர்வுத்திறன் மிகவும் குறைவானதாகும். குறிப்பாக ""வெற்றி நிச்சயம்'' படைநடைவடிக்கையை குறிப்பிடலாம். இதன் போது விடுதலைப் புலிகளின் நேரடியற்ற சூடுகளின் அதிகளவான இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் கவசத் தாக்குதல் படையணியினரின் உருவாக்கத்தின் மூலம் இராணுவத்தினரின் இழப்புக்களைக் குறைக்க முடியும். அதா வது கவசவாகனத்தின் கவசத்தகடுகள் தாக்குதல்களில் இருந்து துருப்புக்களைக் காப்பாற்றலாம்.

கவசத் தாக்குதல் றெஜிமென்ட் ஆனது மூன்றாவது சிலோன் இலகு காலாட் படை பற்றாலியன், பத்தாவது சிங்க றெஜிமென்ட், நாலாவது கஜபா பற்றாலியன், 5ஆவது மற்றும் 6ஆவது கவசபடைப் பிரிவுகள், (இவை புதிதாக உரு வாக்கப்பட்டவை) ஆகிய பற்றாலியன்களை கொண்டது.

சென்ற வருடம் கொடிகாமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது

இப்படையணி மீது விடுதலைப் புலிகளுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் நாள் கொடிகாமத்தில் உள்ள 53ஆவது படையணி யின் தலைமையகத்தில் நடைபெற்ற கவசத் தாக்குதலில் படையணியின் ஆரம்ப விழாவின் போது விடுதலைப் புலி கள் பீரங்கித் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

விழாவை ஆரம்பிப்பதற்குரிய விளக்கை ஏற்றியவுடன் அந்தப்பகுதியில் 34 எறிகணைகள் விழுந்து வெடித்திருந் தன. அதன் போது இந்த பிரிகேட்டின் கட்டளைத்தளபதி லெப்.கேணல் ரால்ப் நுகெரா, லெப்.கேணல் சுமித், அத்தப் பத்து, மேஜர் ஹஜேந்திரா பிரீஸ் ஆகியோரும் மேலும் இரு அதிகாரிகளும் காயமடைந்தனர்.

2006ஆம் ஆண்டு முகமாலையில் நடைபெற்று தோல்வி யில் முடிந்த படை நடவடிக்கையின் போது இப்படையணி ரி 55 ரக போர் டாங்கிகள் உட்பட பல கவச வாகனங்களை இழந்திருந்தது.

இதனிடையே படையணி கடந்த புதன்கிழமை முக மாலை, நாகர்கோவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் பங்குபற்றியுள்ளது. 53 மற்றும் 55ஆவது படையணிகளின் படையினர் இந்த நடவடிக்கையை மேற் கொண்டிருந்தனர். காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப் பட்ட இந்த நடவடிக்கையில் கவசத் தாக்குதல் படையணி ரி 55 போர் தாங்கிகளைப் பயன்படுத்தி இருந்தது.

வடபோர்முனையில் தாக்குதல்கள் அதிகரிக்கலாம்

அதன் போது இரண்டு படையினர் கொல்லப்பட்டதா கவும் ஆறுக்கு அதிகமானோர் காயமடைந்ததாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது. கவசத் தாக்குதல் படையணி பயிற்சி களை முடித்துக் கொண்டு வெளியேறிள்ளதால் வட போர் முனையில் படை நடவடிக்கைகள் அதிகரிக்கலாம். படையி னர் ஆனையிறவை நோக்கி முன்நகர்வதுடன் கிளிநொச்சி யையும் கைப்பற்ற முயற்சிக்கலாம். இப்பகுதிகளில் திறந்த தரையமைப்பு கவசத் தாக்குதல்களால் படையணியின் நட வடிக்கைக்கு சிறந்தது.

இதனிடையே தென் இலங்கையில் தாக்குதல் அச்சங்கள் அதிகரித்துள்ளன. இந்த அச்சம் கடந்த சனிக்கிழமை காலை தம்புள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் மேலும் அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலில் பஸ்ஸில் இருந்த 20 பேர் கொல்லப்பட் டதுடன் 50 இற்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இடம்பெற்ற 2ஆவது குண்டுவெடிப்பு இதுவாகும் முதல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27பேர் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த வாரம் மடுப்பகுதியில் இடம் பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 11 பாடசாலை சிறுவர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

தட்சணாமருதமடுப்பகுதியில் உள்ள றோமன் கத் தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலிருந்து மாணவர் களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச்சென்ற பேருந்தே தாக்குதலில் சிக்கியது. இத்தாக்குதலில் மேலும் 8 பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். படையின ரின் ஆழ ஊருடுவும் படையினரே இத்தாக்குதலை நடத்திய தாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் நடைபெற்ற குண்டுத் தாக்கு தல்களில் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந் துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இரு பக்கங்களிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக் கடிகளைச் சந்தித்துள்ளன. *

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.