Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்நிறுத்த ஒப்பந்த விலகலும் குண்டு வெடிப்புக்களும்"

Featured Replies

சிறீலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஒரு தலைப்பட் சமாக அறிவித்த பின்பு கடந்த 16.01.2008 அன்றுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உத் தியோக பூர்வமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேறி விட்டது. சர்வதேச நாடுகளின் பின்னணியில் நோர்வேயின் அனுசரனையுடன் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திக்குமிடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் எந்த ஒரு தரப்பினரினதும் ஆலோசனையோ, சம்மதமோ இன்றி சிறீலங்கா அரசால் தான்தோன்றித் தனமாக இது கிழித்தெறியப்பட்டது.

இவ்வொப்பந்தம் காகித அளவில் மட்டுமே நீண்ட நாட்களாக உயிர் வாழ்ந்த போதிலும் போர் நிறுத் தக் குழுவின் பிரசன்னம் சிறீலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்களைப் பதிவு செய்யுமளவுக்காவது பயன்பட்டு வந்தது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றத்துடன் அந்த நிலைமையும் இல்லாமற் செய்யப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப் போனால் ஒரு நடுநிலைமையான அமைப்பால் இன்றைய சூழல் தொடர்பாக சர்வதேசத்திற்கு உள்ளூர் நிலமைகளை வெளியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இருட்டடிப்புச் செய்யப்படுவதற்கு சாதகமான ஒரு நிலைமையை உருவாக்கும் நோக்குடனேயே அரசால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை.

இதன் காரணமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியமை தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன் றியம் உட்பட்ட பல நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தன் அதிருப்த்தியை வெளியிட்டுள்ளார். இவ்வாறே ஜப்பானின் சிறப்புத்தூதுவர் யசூசி அகாசியும் சிறீலங்காவிற்கு விஜயம் செய்து இது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இப்படியான பலமுனை நெருக்கடிகள் மத்தியிலும் போர் நிறுத்த ஒப்பந்த்தினை விட்டு சிறீலங்கா அரசு உறுதியான முடிவுடன் வெளியேறி விட்டது. போர் நிறுத்தம் அமுலில் இருந்த போதே சிறீலங்கா அரசு போரை முனைப்புடன் நடத்தியே வந்தது. ஆக்கிரமிப்புப் போர் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், காரணமற்ற கைதுகள் என்பனவும் தொடர்கின்றன. போர் நிறுத்தம் அமுலில் உள்ளபோதே இப்படியான போர் நடவக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வந்தது. எனவே போர் நடவடிக்கைகளைப் பொறுத்த வரை இவ்வொப்பந்தத்திலிருந்து விலக வேண்டிய தேவை எதவு மேயில்லை. இப்படியான ஒரு நிலையில் இதற்கும் அப்பால் இவ்விலகலுக்கான காரணம் ஒன்று இருக்க வேண்டும். அது என்ன என்பதே இப்போதுள்ள கேள்வியாகும். ஏற்கனவே இவ்வொப்பந்தத்தை இரத்துச் செய்யும்படி ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.

நாடாளுமன்றத்தில் அவர்கள் எதிர்த்து வாக்களித்தால் ஆட்சியை இழக்க வேண்டிய நிலையே அரசுக்கு ஏற்படும். எனவே அவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து போக வேண்டிய ஒரு இக்கட்டு அதுக்குண்டு. சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் சர்வதேசத்திற்கு தெரியவராமல் தடுப்பதற்கு ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்பன வற்றை திருப்தி செய்வது போன்ற காரணங்களுக்காக போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியேற்றப்பட்டது என்பது வெளியே தெரிபவையாகும்.

இவ்வகையான துணைக் காரணங்களுக்கு அப்பால் ஒரு பிரதான காரணமும் உண்டு. அது சர்வதேச அரசியலுடன் சம்பந்தப்பட்ட தாகும். இலங்கைத் தீவின் அரசியலில் சர்வதேசம் தலையிடுவதை, குறிப்பாக மேற்கு நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்புவதில்லை. இத்தலையீடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து என்று இந்தியா நம்புகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது சிறீலங்காவில் மேற்குலகின் ஆதிக்கம் வலுப்படுவது வழமை. அவ்வ கையிலேயே இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளுடாக மேற்குலகம் சிறீலங்கா அரசியலில் தன் நிலையை வலுப்படுத்திக் கொண்டது.

சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பும் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் இந்த நிலை நீடித்தது. இப்பொழுது இவ்வொப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் மேற்குலகின் தலையீடு மேலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவைத் திருப்பதிப்படுத்தும் ஒரு விசயம் என்ற அளவில் இந்தியா வெளிப்படையாக இல்லாவிடினும் மறைமுகமாக வரவேற்கும் என்பதில் சந்தேகமயில்லை. எனவே, மனித உரிமை மீறல்கள் காரணமாக மேற்குலகத்தின் உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இந்தியாவின் உதவியை முழுமையாகப் பெறும் நோக்கமே இந்த ஒப்பந்த இரத்தின் முதன்மைக் காரணமாகும்.

இது அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரனாப்முகர்ஜி சிறீலங்கா அரசு ஒரு இறமையுள்ள நாடு என்ற வகையில் அதற்கு எல்லாவித உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தகருத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிலிருந்து சந்திரிகா, மகிந்த... வரையில் இப்படியான செயற்பாடுகள் மூலம் தமது தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இந்தியாவைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இன்று தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெருகிவரும் ஆதரவு சிறீலங்கா அரசின் இத் தந்திரோபாயத்தை வெற்றி பெறவைக்குமா என்பது சந்தேகத் திற்கிடமான விடயமே.

மேற்கு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழ தேசிய விடுதலைக்கு ஆதரவாக மேற்கொண்டு வரும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எவ்வாறு எமது போராட்டம் தொடர்பாக மேற்குலகில் ஒரு ஆதரவான சூழலை ஏற்படுத்தி வருகிறதோ, அவ்வாறே தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுப் போராட்டங்களும் மத்திய அரசின் போக்கில் எமக்குச் சாதகமான நிலைப்பாட்டைக் காலப்போக்கில் ஏற்படுத்த முடியும். எனினும், சிறீலங்கா அரசு மேற்குலகைப் பூரணமாகப் புறந்தள்ளி விடவும் முடியாது. புறந்தள்ளப் போவதுமில்லை.

ஏனெனில் பொருளாதார உறவுகள் என்ற அளவில் இன்னமும் சிறீலங்கா மேற்குலகி லேயே தங்கி நிற்க வேண்டியுள்ளது. சர்வதேச நாணயநிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவும் பெரும் முதலீட்டு நிறுவனங்களும் இன்னமும் மேற்குலகின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே, சிறீலங்கா போர் நிறுத்தத்தி லிருந்து விலகியமைக்கு ஏதாவது சில காரணங்களையாவது முன் வைக்க வேண்டியுள்ளது. இப்படியான ஒரு நிலையில் தான் மொனறாகல மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டிய புத்தள என்ற இடத்தில் பொது மக்கள் பயணம் செய்த பேருந்து வண்டி ஒன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 26 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 67 பேர் காயமடைந்துள்ளனர். அதே இடத்திலிருந்த சில மைல் தூரத்தில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நாலு படையினர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவங்கள் நடந்தவுடனேயே அதாவது விசாரணை எதுவும் ஆரம்பிக்கப்பட முன்பே சிறீலங்காவின் பாதுகாப்புத் தரப்பு பேச்சாளர் ஹெகலிய ரம்புல்வெல அவர்கள் இது விடுதலைப் புலிகளாலேயே மேற்கொள் ளப்பட்டது. எனக் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்பதும், படையினர் மற்றும் பொருளாதார இலக்ககள் மீதே அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதும் சகலரும் அறிந்த ஒரு விடயமாகும்.

விடுதலைப் புலிகள் கடுமையான பெரும் தாக்குதலைப் பொதுமக்கள் மீதும் மென்மையான தாக்குதலை இராணுவத்தினர் மீதும் நடத்துவார்களா? இப்படி ஒரு கேள்வி எழுகிறதல்லவா? சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதுதான் என சர்வதேசத்தை நம்ப வைத்தால் தங்கள் போர் நிறுத்தத்திலிருந்து விலகியமையை நியாயப்படுத்த முடியுமல்லவா? இப்படியான இந்தத் தாக்குதலை சிறீலங்கா அரசே ஏன் மேற்கொண்டிருக்கக்கூடாது. அதிகார பீடத்தினர் தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தங்கள் மக்களையே கொன்றுதள்ள தயங்க மாட்டார்கள் என்பதற்கு சிறீலங்காவின் வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.

1971ல் இருபத்தையாயிரம் இளைஞர்களும், 1988, 89ம் ஆண்டு களில் 70 ஆயிரம் பேரும் ஜே.வி.பி ஒழிப்பு என்ற பேரில் ஆட்சியாளர்களால், சிங்களவர்கள் என்ற போதிலும் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே, சர்வதேசத்தின் முன்பு தாம் போர் நிறுத்தத்தை மீறியமையை நியாயப்படுத்த இப்படியான பொதுமக்கள் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்திய தாகப்பிரசாரத்தை மேற்கொள்ளும் நோக்குடன் அரசாங்கமே ஏன் நடத்தியிருக்கக் கூடாது?

இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதே காரணத்திற்காக ஏன் நடத்தப்பட்டிருக்கக் கூடாது. ஒரு மூன்றாம் தரஅரசியலுக்குள் இறங்கி விட்ட அரசுகள் இப்படியான கீழ்த்தரமான விசயங்களில் இறங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? சிறீலங்கா ஆட்சி பீடத்தினரின் இப்படியான திருகுதாளங்களை சர்வதேசமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ளும்போதே இலங்கையின் இனப்பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்பட்டு ஒரு நிலையான சமாதானத்தை உருவாக்க முடியும்.

Source: http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.