Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மடு"த்தலம் மகிந்தவுக்கு தூரத்துக் கோவிலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மடு"த்தலம் மகிந்தவுக்கு தூரத்துக் கோவிலா?

-சேனாதி-

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டு 2052 ஆண்டுகளும், சிறிலங்காப் படைகள் மடுவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு ஆண்டும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியோடு முடிவடைகின்றன.

2007 மார்ச் 15 காலை 9:00 மணியளவில் இரணைஇலுப்பங்குளம் பீரங்கித் தளத்தில் இருந்து முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியபண்டிவிரிச்சான் ஆகிய ஊர்களின் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு புதிய களமொன்றை நோக்கி சிறிலங்காப் படைகள் அடியெடுத்து வைத்தன. சமகாலத்தில் புளியங்ககுளத்தை நோக்கியும் பூவரசங்குளத்தில் இருந்து கணைகள் வீசப்பட்டன.

மாலையில் பாலைமோட்டைக்கு மேற்காக இருக்கும் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முன்னேறிவந்த படையினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன.

புலிகளின் காவலரண் வரிசை வரை வந்த படையினர் அதற்குமேல் முன்னேற முடியாமல் பாதுகாப்பான தொலைவிற்குப் பின்வாங்கினர். அதன் பின்னான தேடுதலின் போது படையினர் விட்டுச் சென்ற படையப் பொருட்களையும், பல படையினர் படுகாயம் அடைந்ததற்கான தடயங்களையும் விடுதலைப்புலி வீரர்கள் அவதானித்தனர்.

விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் ஒன்றைத் தாங்கள் முறியடித்த சம்பவமாக அதைத் திரித்துக் காட்டிய அரச தரப்பு, புலிகளுக்கு அதில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டது.

அரசாங்கம் அன்று அவ்வாறு நடந்துகொண்டதற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்தன.

அந்நாட்களில் போர்நிறுத்த உடன்படிக்கையை கொள்கையளவில் மதிப்பதாக பன்னாட்டுச் சமூகத்தின் முன்னால் வேடங்கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு இருந்தது. முக்கிய பன்னாட்டு நிதி ஒப்பந்தங்கள் இயங்க ஆரம்பிக்கும் வரை சமாதான நாட்டம் தமக்கு இருப்பதாகக் காட்டுவது ஒரு நோக்கம்.

அடுத்தது, நடவடிக்கை ஒன்று ஆரம்பித்தால் அதன் இலக்கு சொல்லப்பட வேண்டும். காலம் நிருணயிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு குறித்த காலத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும் என்ற நம்பிக்கை சிறிலங்காவின் படைத்தலைமைக்கோ அரச தலைமைக்கோ இருக்கவில்லை. அதனால், கௌரவமாகப் பெயர் சொல்லக்கூடிய ஒரு இடத்தை அடையும் வரை நடவடிக்கையை அறிவிப்பதில்லை என்றும், இலக்கு எய்தப்படும் வரை அதைப்பற்றிப் பேசுவதில்லை என்றும் ராஜபக்சர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இன்று, சிறிலங்கா படையினர் பெரியபண்டிவிரிச்சானிலும், தட்சணாமருதமடுவின் தென்புறக் காடுகளிலும் தங்களை நிலைப்படுத்திக்கொள்வதற்குத

இது கௌரவத்திற்கான போர். இதில் தோற்பது, அல்லது பின்வாங்குதல் என்பது மகிந்தக்களின் அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும் அபாயத்தால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தோல்வி தோல்வி என்ற நிலையிலிருந்து இப்போது புலிகள் தோற்காதிருக்கிறார்கள் என்பது தமிழர் தரப்புப் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு, அல்லது குற்றங் கூறக் காத்திருந்தவர்களுக்கு பெருத்த தலையிடிதான்.

முடிவு தான் சார்ந்த தரப்பினைக் குறை கூறும் நிலையில் சங்கடமான நிலைக்கு சர்வதேசமும் இந்தியாவும் தள்ளப்பட்டுள்ளது.

சீனா தனது நோக்கத்தில் சரியாக நிற்பது தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.