Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக வடக்கில் தேவைப்படும் இராணுவ வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக வடக்கில் தேவைப்படும் இராணுவ வெற்றி

-விதுரன்-

வடக்கே கடும் மழைபெய்து வருவதால் கடந்தவாரம் அங்கு பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடும் மழையால் அனைத்து படை நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ள போதும் அங்கு தினமும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன.

கடும் மழையைத் தொடர்ந்து அங்கு வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில் படையினர் தொடர்ச்சியாக கடுமையான ஆட்லறிஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதேபோன்ற நிலையில்தான் வன்னிக் கள முனையில் விடுதலைப் புலிகளுமுள்ளனர். தற்காப்புக்காக ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களையே நடத்தி வருவதாக படைத்தரப்பு கூறுகின்றது.

மடுவையும் அடம்பனையும் இலக்கு வைத்து முன்னேற முயலும் படையினருக்கு பலத்த மழை கடும் சவாலாகவேயுள்ளது. காலம் பிந்தி வடக்கே அடை மழை பெய்கிறது. கடந்த வருட பிற்பகுதில் பெய்திருக்க வேண்டிய மழை இவ்வருட முற்பகுதியில் கொட்டுகிறது. எனினும் அடை மழைக்கு மத்தியிலும் தங்கள் படையணிகளால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென படைத்தரப்பு கூறுகிறது. எவ்வாறான கால நிலையிலும் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளும் விதத்தில் படை அதிகாரிகளும் படையினரும் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தற்போதைய இந்தக்கால நிலையானதும் அங்கு இடம்பெறும் படை நடவடிக்கையை எவ்விதத்திலும் பாதிக்கமாட்டாதென இராணுவத் தளபதி கூறியுள்ள போதிலும், படையினரால் வன்னிக்கள முனையில் எந்தவொரு பகுதியிலும் முன்நகர்வு முயற்சி எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் வழமைபோல் புலிகளின் இழப்பு குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அவர்கள் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர். மோதல்கள் நடைபெறாது இரு தரப்பும் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தி தற்காப்பு நிலைகளை மேற்கொள்கையில் அங்கு தொடர்ந்தும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் புலிகள் பலத்த இழப்புக்களை சந்தித்து வருவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் தென்பகுதி மக்களை `திருப்தி நிலையில்' வைத்திருக்க அரசு முயல்கிறது.

வடக்கே வவுனியா,மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடா களமுனைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மன்னார் களமுனையிலேயே கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் களமுனைதான் படையினருக்கு சற்று சாதகமாயுள்ளது. இதனால் மடுவையும் அடம்பனையும் கைப்பற்றி அதன் மூலம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரும் பிரசாரங்களை மேற்கொள்ள அரசு தீவிரமாக முனைகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன் இவ்விரு பகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது.

மன்னாரில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கமைய மடுவை படையினர் சுற்றிவளைத்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. முன்னேறி வரும் படையணிகள் மடுத்தேவாலயத்தை நோக்கி முக்கியமான மூன்று திசைகளில் நெருங்கிவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மடுதேவாலய பகுதியிலிருந்து புலிகளைத் தனிமைப்படுத்துவதற்காக நேரடியாகத் தேவாலயப் பகுதி நோக்கி முன்நகராது தேவாலயத்தை அடுத்திருக்கும் பாலம்பிட்டி,பெரிய பண்டிவிரிச்சான், முருங்கன் மற்றும் மாந்தைக்கு மேற்கே நகர்ந்து தேவாலய பகுதியை படையினர் சூழ்ந்து வருவதால் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் மோதல்கள் எதுவும் நடைபெறாது புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்து தேவாலயத்தையம் அதனையண்டிய பகுதிகளையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கூறுகிறது.

தற்போது தினமும் படையினர் மேற்கொள்ளும் முன்நகர்வுகள் மூலம் மடுத்தேவாலயத்தை அண்டிய, அடம்பனுக்கு கிழக்கேயும் பாலம்பிட்டிக்கும் இடையிலான புலிகளின் விநியோகப் பாதையை படையினர் முழுமையாகத் தடை செய்துவிட்டதால் புலிகள் தொடர்ந்தும் அங்கிருக்க முடியாது வெளியேறும் நிலையை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மடுத் தேவாலயப் பகுதியை நோக்கி படையினர் மேலும் மேலும் முன்னேறும் போது அப்பகுதிகளில் மோதல்கள் எதுவும் இடம்பெறாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.

மன்னார் களமுனையில் நிலைமைகள் இவ்வாறிருப்பதாக படைத்தரப்பு கூறினாலும் அப்பகுதியில் கடுமையாகப் பெய்து வரும் அடை மழையால் படை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய வீதிகள் தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருப்பதால் யுத்த டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை பிரதான வீதிகளூடாக நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. வீதிகளை விட்டு இவை தரைக்கு இறங்கினால் முன்நகர முடியாதளவுக்கு நிலம் சேறும் சகதியுமாயுள்ளது. இது படையினருக்கு தொடர்ந்தும் நெருக்கடியாகவேயுள்ளது.

மேலும் மன்னார் களமுனையில் ஏற்பட்டு வரும் அதிகளவு இழப்புகளும் படையினரின் மனோ நிலையை பெரிதும் பாதித்து வருகிறது. தொடர்ந்தும் ஒரு சில படையணிகளே இந்தக் களமுனையில் போரிட்டுக் கொண்டிருப்பதால் அவை பெரிதும் களைப்படைந்து விட்டன. எதிர்பார்த்தது போல் அல்லது படைத்தலைமைகள் கூறியது போல் யுத்தம் இல்லையென்பது போரிடும் படையினருக்கு தெரியத்தொடங்கியுள்ளது.இழப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.