Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் "வகிபாகம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் "வகிபாகம்"

வீரகேசரி இணையம் 3/28/2008 10:55:29 AM - இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இருதலை கொள்ளி எறும்பாக செயற்படுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய நடுவன் அரசின் நிலைப்பாடு தான் என்ன? ஈழத்தமிழர் பிரச்சினையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் அது எத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறது?

ஈழத்தமிழர்களின் இனரீதியான விடுதலையை அது அங்கீகரிக்கிறதா? பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் கொழும்பு அரசுக்கு அது கற்பிக்க விரும்புவது என்ன? விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அது எந்த கோணத்தில் பார்க்கிறது? இவ்வாறான கேள்விகளுடன் ஈழத்தமிழர்களின் இன விடுதலை என்ற வட்டத்துக்குள் இந்திய அரசின் பங்களிப்பை ஆராய்வோம். ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்த பெருமை இந்தியாவையே சாரும்.

ஈழத்தில் முளைவிட்ட அத்தனை போராளிக் குழுக்களுக்கும் இந்தியாவே ஆதரவு வழங்கி வந்துள்ளது. இந்தியாவின் ஒத்தாசையோடு இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருந்த தமிழ் போராளி அமைப்புகள் பிற்பட்ட காலங்களில் தங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஒன்றை ஒன்று வெட்டிகொண்டன.

இவற்றுள் விடுதலைப்புலிகள் இயக்க அமைப்பு வடகிழக்கில் இயங்கிய ஏனைய இயக்கங்களை தடைசெய்து தனியாக செயற்பட ஆரம்பித்தது.ஏனைய போராட்ட அமைபுகள் தமிழர் தாயக பகுதிகளில் இருந்து விடுதலை புலிகளால் விரட்டப்பட்டன. . இவை எல்லாம் 1987ஐ யொட்டி இடம்பெற்ற நிகழ்வுகள் ,முன்பு மறைமுகமாக தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தவந்த இந்தியா பின்பு இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட ஆரம்பித்தது.

இதன்போது ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் பகையையும் அது சம்பாதித்ததுகொண்டது.இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட சிக்கல் நிலமையை கடுமையாக்கியது.

இத்தகைய மாற்றங்களோடுதான் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்விற்க்கான பங்களிப்பில் இந்தியாவின் பயணம் தொடர்கிறது.

வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப்பகுதி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை-இந்தியா ஒப்பந்தம் அமைந்து .ஒப்பந்த்தின் படி வடகிழக்கு இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிற்பட்ட காலங்களில் மாறி மாறி ஆட்சி ஏறிய தென்னிலங்கை அரசுகள் வடகிழக்கு இணைப்பை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறிவிட்டன.

தற்போதைய ஆட்சியில் பிரிக்கப்பட்டும் விட்டது.இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான போர் உக்கிர நிலையில் இருகிறது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்ப்ட்டுவிட்டது.

அடுத்து என்ன நடக்கபோகிறது? இந்தியாவை பொருத்தவரையில் அது தன்னுடைய பிராந்திய நலனுக்கும் தேசத்தின் இறைமையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினையை கையாண்டு வருகிறது.

விடுதலைப்புலிகளின் தனி அரசு கொள்கையை அது ஏற்றுகொள்ளவில்லை.மாறாக தமிழர்களின் தாயகப்பகுதியான வட கிழக்குக்கு அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வருகிறது,

ஆனால் தென் இலங்கை அரசுகள் இதற்கும் செவிசாய்ப்பதாக இல்லை.

விடுதலைப் புலிகளை அழிப்பதையே குறியாக கொண்டு அது செயாலாற்றி வருகிறது.

இதேவேளை இந்தியா தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுப்பட்ட அனைவரையும் இனப்பிரச்சினைகான தீர்வு விடயத்தில் சேர்த்துக்கொள்ளவே விரும்புகிறது.ஆனால் விடுதலைப்புலிகள் ஏனைய தமிழ் தரப்புகளை எற்றொக்கொள்ளவில்லை.

இவ்வாறான காரணங்கள், மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை போன்றவற்றால் விசனமடைந்துள்ள இந்திய மத்திய அரசு விடுதலைப்புலிகள் தொடர்பில் தொடர்ந்தும் கடும் போக்கை கடைப்பிடித்துவருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை தமிழருக்கு ஆதரவு கிடைக்கின்ற போதும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் தென்படவில்லை. அவ்வப்போது தமிழ் மக்களுக்கு ஆதரவாக அறிக்கைகள் மட்டும் தான் விடப்படுகின்றன.

மறுபுறத்தில் இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது.இன்னொரு புறத்தில் இலங்கை ஏனைய நாடுகளிடமிருந்து ஆயுத இறக்கிமதி செய்வதை அது விரும்பவில்லை என்று கூறுகிறது.

இப்படியே அதனுடைய குத்துக்கரணம் தொடர்கிறது.இதேவேளை இலங்கை விவகாரத்தில் மேற்குலகின் அதிகபட்ச தலையீட்டையும் நிராகரிக்கிறது.

இந்தியாவின் இந்த குழப்ப நிலையால் இலங்கை தமிழர்கள் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இந்தியா

ஆமா, இலங்கைத் தமிழருக்கு நிச்சயம் தேவை. நாராயணனின் கருத்திற்கு மெருகூட்டுகிறார்கள். தமிழ. ஊடகங்களும் இப்படிப் பூடகமாகத் தொழிற்பட ஆரம்பித்து விட்டனவா?

அதென்ன நேற்றைய ஆக்கத்தில் நீறு பூத்த நெருப்பு, இன்றைய ஆக்கத்தில் உக்கிரமான போர். சுத்தமாகத் தெளிவேயில்லை.

இந்தியாவிற்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படமாட்டார்கள் என்பது இந்தியாவிற்குத் தெரியும். அதனால்தான் தம்மைக் காத்துக் கொள்வதற்கு எட்டி உதைத்தாலும் சிங்களவரின் கோவணத்தில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைக் கடந்த செயற்பாடுகளின் போதுதான் சிங்கள ஆட்சியாளரை என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கப் போகிறது இந்தியா.

நோக்கங்களில் இருந்து விலகும்போது விடுதலைப்புலிகளால் ஏனைய இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. விரட்டப்பட்டன. அதற்கான விளைவுகள்தான் இப்போது நேரடியாகத் தெரிகிறதே. இதென்ன வீரகேசரியின் வங்குரோத்துத்தனம்.

தராக்கியின் கட்டுரைகளை வெளியிட்டு பெருமை சேர்த்த வீரகேசரி இன்றைய அவலநிலையை ஏன் அடைந்தது.

இது வீரகேசரியில் வந்த ஆக்கமல்ல. வீரகேசரிக்கு வந்த குழப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.