Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரபாகரன்

கலைஞன்

பிரபாகரனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பான நிலையேற்பட்டுள்ள அதேவேளை சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் முஹம்மட் ஹம்சா தொடர்பாகவும் இலங்கை துணைத் தூதரகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டுள்ளதுடன் துணைத் தூதரகத்தை சென்னையிலிருந்து அகற்றுமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சிங்கள இயக்குநரான துஷாரா பீரிஸ் என்பவர் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்குள்ள தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் நிதி மற்றும் உதவிகளுடன் இயக்கிய `பிரபாகரன்' என்னும் சிங்களத் திரைப்படமே தற்போது தமிழகத்தை கொதி நிலைக்கு தள்ளியுள்ளது.

இலங்கையில் தயாரித்து முடிக்கப்பட்ட `பிரபாகரன்' படத்தின் `பிரின்ட்' போடும் வேலைகளை செய்வதற்காக இந்தியா வந்திருந்த இயக்குநர் துஷாரா பீரிஸ் அந்தப் பணிகளை கடந்த புதன்கிழமை சென்னையிலுள்ள ஜெமினி கலர் லாப்பில் செய்து கொண்டிருந்த போது அங்கு திரண்ட தமிழின உணர்வாளர்களால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரபாகரன் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே அங்குள்ள சிங்கள ஊடகங்களில் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. பக்கச்சார்பற்ற அரசியல் கலப்படமில்லாத படம் என பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் பிரபாகரனுக்கு இலங்கை தணிக்கைக் குழு உடனடியாகவே அனுமதி வழங்கியமை அப்படம் தொடர்பான நடுநிலையை கேள்விக்குள்ளாக்கின.

அத்துடன் `பிரபாகரன்' திரைப்படத்தை அந்நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாகவும் ஊடகங்கள் முன்பக்க செய்திகளை வெளியிட்டன. இதனால் பிரபாகரன் குறித்து சிங்கள மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பும் தமிழ் மக்களிடம் கடுமையான எதிர்ப்பும் கிளப்பின. இந்நிலையிலேயே அந்தப் படத்திற்கு பிரின்ட் போடுவதற்காக அதன் இயக்குநர் துஷாரா பீரிஸ் சென்னை வந்தார்.

சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த துஷாரா பீரிஸ் பிரபாகரன் படத்துக்கு பிரின்ட் போடும் வேலைகளை தமிழகத்தில் பிரபல்யமான ஜெமினி கலர் லாப்பில் செய்வதற்காக கடந்த புதன் கிழமை அங்கு சென்றார். இதற்கிடையில் பிரபாகரன் படம் குறித்த எதிர்ப்புணர்வுகள் ஏற்கனவே தமிழகத்தில் வெளிப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் `பிரபாகரன்' இயக்குநர் சென்னை வந்துள்ள தகவலும் அவர் அப்படத்துக்கு ஜெமினி கலர் லாப்பில் பிரின்ட் போட சென்றுள்ள விடயமும் தமிழின உணர்வாளர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்தே கோபாவேசத்தில் ஒன்றுதிரண்ட விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள், பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜெமினி கலர் லாப்பை முற்றுகையிட்டனர்.

ஜெமினி கலர் லாப்பை முற்றுகையிட்ட தமிழின உணர்வாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஜெமினி கலர் லாப்புக்குள் நுழைந்த தமிழின உணர்வாளர்கள் அங்கிருந்த `பிரபாகரன்' படத்தின் இயக்குநரான துஷாரா பீரிஸை இனம்கண்டு வெளியே இழுத்து கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். இதன்போது துஷாரா மீது பிளேடுகளாலும் கீறப்பட்டன.

திடீரென நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலினால் நிலை குலைந்த துஷாரா பீரிஸ் வெளியே தப்பியோடிய போதும் விரட்டி விரட்டித் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் பிரபாகரனுக்கு ஆதரவான கோஷங்களையும் இலங்கையரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியவாறே துஷாராவை விரட்டி விட்டித் தாக்கினர். இத் தாக்குதல் சம்பவத்தை ஜெமினி கலர் லாப்பினரும் தடுக்க முனையவில்லை.

இந்நிலையில் சம்பவத்தை கேள்வியுற்று அப்பகுதிக்கு வந்த பொலிஸாராலும் தாக்குதல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் பெரியார் திராவிடர் கழக செயலர் சுப.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த வன்னியரசு, திரைப்பட இயக்குநர் சீமான் போன்றோரே தாக்குதல் நடத்தியவர்களை கட்டுப்படுத்தியதுடன் அவர்களிடமிருந்து துஷாராவையும் மீட்டனர்.

இதன்பின்னர் அங்கு வந்த `றோ' உளவுப் பிரிவினர் துஷாரா பீரிஸை பொறுப்பெடுத்ததுடன் உடனடியாகவே அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு துஷாரா சென்ற போது அவர் ஹோட்டலில் தனது அறையில் வைத்திருந்த உடைமைகள் எல்லாம் ஹோட்டல் வரவேற்பறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் துஷாரா பெரும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் வினவிய போதும் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

ஹோட்டல் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த உடைமைகளுடன் துஷாரவை மீண்டும் தமது வாகனத்தில் ஏற்றிய `றோ' அதிகாரிகள் நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்து வந்து கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டனர். துஷாரா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும் அவரின் பாதுகாப்புக்காகவே தாம் இவ்வாறு செய்வதாக அதிகாரிகள் கூறினர்.

இதேவேளை பிரபாகரன் படம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. வேண்டுமானால் போட்டுப்பாருங்களென தன்னை தாக்கியவர்களுக்கு துஷாரா கூறியிருந்தார். தாங்கள் போட்டுப் பார்த்துவிட்டு பிரின்ட் போடலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதாக தாக்குதலை நடத்தியவர்கள் கூறியதுடன் பிரதிகளையும் பறித்துள்ளனர். இதனால் `பிரபாகரன்' பட பிரதிகளைக் கூட பறி கொடுத்த நிலையில் துஷாரா கொழும்பு சென்றடைந்தார்.

துஷாரா மீது சென்னையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. பிரபாகரனின் நெருங்கிய சகாவான பிரபல இயக்குநரான சீமானே இத்தாக்குதலை முன்னின்று நடத்தியதாக குற்றம் சாட்டின. இந்நிலையில் றோ அதிகாரிகள் தன்னை வலுக்கட்டாயமாக சென்னையை விட்டு வெளியேற்றியமைக்கும் பிரபாகரன் படப்பிரதிகளை தன்னிடம் ஒப்படைக்கவேண்டுமென வலியுறுத்தியும் துஷாரா வைத்தியசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், கவிஞர்கள் மேத்தா, பொன். செல்வ கணபதி, தமிழ்முழக்கம் சாகுல் ஹமீத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் `பிரபாகரன்' திரைப்படத்தை பார்த்தனர். இதன் பின்னர் பிரபாகரன் திரைப்படத்தை வெளியிட்டால் கடும் விளைவுகள் ஏற்படுமென எச்சரித்தனர்.

பிரபாகரன் படம் குறித்து தமிழகத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் தெரிவிக்கையில்; தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் கலர்ப்படம் அல்ல, கலப்படம். படத்தின் தலைப்பே சரியில்லை. தமிழர்களை அவமானப்படுத்தக் கூடியது. இதனை தமிழகத்தில் திரையிடுவதனையோ வெளியிடுவதனையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனக் கூறினார்.

இதேபோன்றே அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் பிரபாகரன் படத்துக்கு தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இது முற்று முழுதாக சிங்கள மக்களையும் இலங்கையரசையும் இராணுவத்தையும் திருப்திப்படுத்துவதற்காகவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.