Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதம் என்றால் என்ன? - நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

இலங்கையில் நடப்பது அரச பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை எப்பொழுது உலக நாடுகள் உணர்கின்றனவோ அன்றுதான் நாட்டில் அமைதியும் சமாதானமும் பிறக்க ஏதுவான சூழல் அமையும். அதற்கிடையில் எத்தனை மரணங்கள், எத்தனை பட்டினிச் சாவுகள், எத்தனை ஆட்கடத்தல்கள், எத்தனை இடமாற்றங்கள், எத்தனை வன்செயல்கள், எத்தனை நட்டங்களை மக்கள் அனுபவிக்கப் போகின்றார்களோ தெரியாது.

'பயங்கரவாதம்', 'பயங்கரவாதிகள்' என்ற சொற்கள் அண்மைக் காலங்களில் பயங்கரமான முக்கியத்துவம் அடைந்துள்ளன. ஆனாலும், சட்டப்படி அச்சொற்களுக்குப் போதுமான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் 'பயங்கரவாதிகள்' யார் என்பதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்க நியூயோர்க் நகர இரட்டைக் கோபுர அழிப்பும் அதன் போது மரணித்த சுமார் 4000 பேரின் அகால மரணமும் பயங்கரவாதம் என்ற சொல்லை அண்மைக் காலங்களில் முக்கியத்துவம் அடைய வைத்தன எனலாம். அச்சம்பவம் நடந்த உடனேயே அமெரிக்க ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான போரினைத் தான் தொடங்கப் போவதாக அறிவித்தார். அப்பொழுதிலிருந்து பார்க்கும் இடமெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பல நாட்டுத் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள்.

ஒருநாட்டின் தலைமைப்பீடம் தமக்கு எதிராக யாரேனும் தலையெடுத்தால் உடனே அவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவது இன்றைய உலகில் ஒரு அரசியல் நாகரிகமாக இருந்து வருகிறது.

ஆனாலும் பயங்கரவாதம் என்றால் என்ன? பயங்கரவாதி என்றால் அவர் யார்?

சட்ட வல்லுநர்கள் இதுவரையில் ஏற்புடைத்தான ஒரு பதிலை முன்வைத்துள்ளதாகத் தெரியவில்லை. குற்றமுடைய வன்முறை (Criminal Violence) வேறு, பயங்கரவாதம் வேறு என்கிறார்கள். அரச வன்முறை வேறு, பயங்கரவாதம் வேறு என்கிறார்கள். ஆனாலும், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதில் எந்த ஒரு கருத்தொருமைப்பாட்டையுஞ் சட்ட வல்லுநர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரியவில்லை.

இலங்கையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று ஒன்று உள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டம் அது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் வரமுன்பே பயங்கரவாதச் சிந்தனைகளுக்கு எங்கள் தலைவர்கள் இடமளித்திருந்தார்கள். ஒரு காலத்தில் எங்களுக்கு வேண்டாதவர்களை கம்யூனிஸ்டுக்கள் என்று குறிப்பிட்டோம். பின்னர் நக்ஸலைட்டுகள் என்றோம். இப்பொழுது பயங்கரவாதிகள் என்கிறோம். அதனால்தான் போலும் மேற்படி சட்டத்தில் 'பயங்கரவாதம்' என்ற சொல் வரையறை செய்யப்படவில்லை!.

ஆனாலும்இ 2000 ஆம் ஆண்டின் பிரித்தானிய பயங்கரவாதச் சட்டம் இந்தக் கைங்கரியத்தைத் தன்னால் இயன்ற மட்டில் பின்வருமாறு பூர்த்தி செய்துள்ளது. "பயங்கரவாதம்' என்ற சொல் இந்தச் சட்டத்தில் பின்வரும் செயலை அல்லது செயல் புரிவதற்கான அச்சுறுத்தலைக் குறிக்கும். அதாவது அப்பேற்பட்ட செயலானது:

1. (அ) எவரேனும் ஒரவர் சம்பந்தமாக ஏதேனும ஆபத்தான வன்முறையினை விளைத்தால்

2. (ஆ) ஏதேனும் ஆதனம் சம்பந்தமாக ஏதேனும் ஆபததான நஷ்டத்தை விளைவித்தால்

3. (இ) விளைவிப்பவரின் உயிர் தவிர யாரேனுமு ஒருவரின் உயருக்கு ஆபத்துண்டாக்கினால்

(ஈ) பொதுமக்களின் அல்லது அவர்களுள் ஒரு பகுதினரின் உடல் நலத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தான இடையூறை விளைத்தால்

(உ) இலத்திரனியல் ஒழுங்கமைப்பொன்றுடன் ஆபததான முறையில் தலையீடு வெச்வதாகவோ அல்லது அதைத் தகர்ப்பதற்காகவோ அச் செயலானது அமைந்தால அவை பயங்கரவாதச் செயல்கள் ஆவன

*அப்பேர்ப்பட்ட புரிசெயல் அல்லது அச்சுறுததல் அரசாங்கரத்தைப் பாதிப்பதாகவோ பொதுமக்களையோ அவர்களுள் ஒரு பகுதியினரையொ பீதி கொள்ளச் செய்வதாகவோ அமைந்திருந்து அத்துடன்

*மேற்படி புரிசெயல் அல்லது அச்சுறுத்தலானது ஏதேனும் ஒரு அரசியல் சமய அல்லது கருததியல் மேம்பாட்டைக குறி வைத்து நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் அவை பயங்கரவாத நடவடிக்ககைகள் ஆவன.

அமெரிக்க நூலாசிரியர்கள், அரசாங்கத்தையோ, சமுதாயத்தையோ அச்சுறுத்தும் அல்லது வற்புறுத்தும் நோக்கில் பயத்தையும் பீதியையும் உண்டாக்கும் வண்ணம் செய்யப்படும் வன்செயல் அல்லது அதற்கான அச்சுறுத்தலே பயங்கரவாதச் செயல்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அப்படியானால் பொதுவாக நாட்டில் நடக்கும் வன் செயல்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுகின்றது.

மேலும் வாசிக்க : http://epaper.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.