Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்தானில் இருந்து பெருமளவு ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்ய உள்ளது.

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்த்தாக்குதலை அடுத்து இலங்கை அரசாங்கம் ஒரு தொகை ஆயுதங்களை பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தளத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை இராணுவம் பாகிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்று 60 மில்லிமீற.................

தொடர்ந்துவாசிக்க............

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8283.html

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்கள்

வாங்க இலங்கை பகீரத முயற்சி!

இந்தியா கவலையுடன் அவதானிக்கிறதாம்

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள இலங்கை, அவசர அவசரமாக பாகிஸ்தானிலிருந்து வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ள இந்தோ ஆசிய செய்திச் சேவை, இந்தியா இவ்விடயத்தைக் கவலையுடன் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவம் உடனடியாக 60 எம்.எம். மோட்டார்களுக்கான வெடிபொருட்களைக் கோரியுள்ளது. மேலும் கைக்குண்டுகளையும் அவசரமாகப் பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது என புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்ரப் பர்வேஸ் கயானியிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தின் பல ஆயுதக் களஞ்சியங்களில் காணப்படுகின்ற யுத்த வீணடிப்பு சேமிப்பிலிருந்து அவசர அவசரமாக வெடிபொருட்களை வழங்குவதற்கு அந்த நாடு இணங்கியுள்ளது.

இலங்கையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த அவசர வேண்டுகோளை இலங்கை இராணுவம் விடுத்துள்ளது.

வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற இராணுவம் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

மன்னாரில் விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி நகர்வதற்குப் பல மாதங்களாக இராணுவம் முயன்று வருகின்றது. மழை தொடங்கியுள்ள நிலையில் இராணுவத்தின் நகர்வு மேலும் பாதிக்கப்படலாம்.

சில வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் கிழக்குப் போல வல்லாது வடக்கில் இராணுவம் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தனது வெடிபொருட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை, பாகிஸ்தானின் உதவியை நாடியுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அடுத்த சில மாதங்களிற்குள் 25 மில்லியன் டொலர் பெறுமதியான 81 எம்.எம்., 120எம்.எம்., 130 எம்.எம். மோட்டார்களை விநியோகிக்குமாறும் பாகிஸ்தானைக் கோரியுள்ளது.

இலங்கை 1999 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானிடமிருந்து பெருமளவில் ஆயுதத் தளபாடங்களைக் கொள்வனவு செய்து வருகின்றது. 2007 ஆம் ஆண்டுவரை 50 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதத் தளபாடங்களை அது கொள்வனவு செய்துள்ளது.

எனினும், இவ்வருடம் இது பல மடங்காக அதிகரித்துள்ளது. மோட்டார், வெடி மருந்துகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், கைக்குண்டுகள், டாங்கிகள் போன்றவற்றை அது கொள்வனவு செய்கின்றது.

இஸ்லாமாபாத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான இராணுவத் தொடர்பு குறித்து இந்தியா அதிருப்தியடைந்துள்ளது.

இப்பரிமாற்றத்தின் மூலம் பாகிஸ்தான் இலங்கையின் பாதுகாப்பு, புலனாய்வுக் கட்டமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதாகவும், இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பு நலனிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் புதுடில்லி கருதுகின்றது.

இந்தியா, இலங்கைக்குப் பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களை வழங்கி வருகின்றது. அதேவேளை, இலங்கை, பாகிஸ்தான், சீனாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது குறித்த தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா பேரழிவு ஆயுதங்களை வழங்காததால், தாங்கள் எந்த நாட்டிடமும் அதனைக் கொளவனவு செய்யலாம் என இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர்.

எனினும், தான் கொள்வனவு செய்ய விரும்பும் ஆயுதங்கள் குறித்த விவரங்களைப் புதுடில்லிக்குத் தெரிவித்து வருவதாகக் கொழும்பு கூறுகின்றது.

இலங்கை பெருமளவு இராணுவத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதால் இலங்கையில் தற்போதைக்கு யுத்தம் முடிவடையாது என்றும் புதுடில்லி கருதுகின்றது.

இவ்வாறு அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.(உ)

http://www.sudaroli.com/pages/news/today/04.htm

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: ஏதோ தமிழன் அழிவது கண்டு பொறுக்கமுடியாமல் இந்தியா வருந்துவது மாதிரித்தான் கதை. பாக்கிச்த்தான் காரன் கொடுக்கும் ஆயுதங்களால் தமிழன் அழிவதல்ல இந்தியாவின் பிரச்சனை, அதன் பிரச்சனையே வேற. தமிழனை அழிக்க தன்னாலான சகல உதவிகளையும் ஆலோசனைகளையும் தர தான் தயாராக இருக்கும்போது இலங்கை பாக்கிச்தானிடம் போவதுதான் அதன் கவலை. இதைப் பலமுறை இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் என்று பலர் பலமுறை சொல்லியாச்சுது. ஆனால் இன்னும் எங்களில் சிலர் இந்தியா ஏதோ தமிழர் பிரச்சனையைத் தீர்க்கிறதில அக்கறையா இருக்கிற மாதிரியும், பாக்கிச்த்தான் ராணுவ உதவிதான் இதற்குத் தடையாக இருக்கிற மாதிரியும் கனவுக் கதைகளை எழுதி வருகிறார்கள். தாம் கனவு காண்பது தவறில்லை, அதை மற்றவர்களிடமும் சொல்லி இன்பம் காணுகிறார்கள்.

இன்னொரு விஷயம் , அதென்ன இலங்கைக்கு ஆயுதம் விக்கும் எல்லோரும் பழைய உக்கிப்போன ஆயுதங்களை விக்கிறார்கள் என்ற கதை. இந்த உக்கிப்போன ஆயுதங்களை வைத்துக்கொண்டுதான் ராணுவம் இவ்வளவுக்கு முன்னேறியிருக்கிறதா ????சனத்தை பேக்காட்டுறதுக்கும் ஒரு அளவு வேணும். ஏதோ புலிகள் பாவிப்பதெல்லாம் அமெரிக்க ஆயுதம் மாதிரியும், ராணுவம் பாவிப்பது பழைய உக்கிப்போன சாமான் மாதிரியும் கதை விடுகினம். உப்பிடியான பிரச்சாரங்கள் தான் சனத்தை பிழையான எதிர்பார்ப்புக்களுக்கு போகச் செய்கிறது என்பதை இவர்கள் ஏனோ மறந்து விடுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.