Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு துரோகம் புரிந்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை, ஏப். 5:

ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டப் பிரச்னையில், தமி ழர்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் புரிந்துள்ளார் என்று உல கத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின், அங்கு புதிய ஆட்சி அமைக் கப்பட்டவுடன் ஒகேனக்கல் திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்துவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டுமல் லாது, ஒகேனக்கல் மீதும் உரிமை கொண்டாடு கிறார். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா, மதச் சார்பற்ற ஜனதா கட் சித் தலைவரான தேவ கெüடா ஆகியோரும் எடியூரப்பாவின் நிலைப்பாட்டிலிருந்து வேறு படவில்லை. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தா லும் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிராகவே இருப்பார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

கர்நாடகத்தில் தேர்தல் வரப் போகிறது என் பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாதா? அது தெரிந்திருந்தும் அவசர அவசர மாக ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தியது ஏன்? இப்போது தேர்தலைக் காரணம் காட்டி அதை நிறுத்தி வைப்பது ஏன்? காங்கிரஸ் கட்சியுடன் வைத்துள்ள தேர்தல் கூட்டு முறிந்து விடுமே என்ப தற்காக தமிழக மக்களின் நலனை முதல்வர் கருணாநிதி பலி கொடுத்தி ருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகம் வந்துள்ள நேரத்தில் முதல்வ ரின் அறிவிப்பு இதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. கன்னடர்களால் தாக்கப் பட்டு கர்நாடகத் தமிழர்கள் சிந்திய ரத்தம் உலர்வதற்கு முன் கன்னடர்களுக்கு பணிந்து ஒகேனக்கல் திட்டத்தைக் கிடப்பில் போட்டு தமிழர்களுக்குத் துரோகம் புரிந்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில், கன்னட இனவெறியர்களுக்கு எதிரான போராட்டங்கள் பொங்கி எழுந்திருக்கும் இந்த நேரத்தில், அதை அணைப்பதற்கு முதல்வர் முயற்சி செய்கிறார். போராடும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையைச் செய்துள்ள முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக் காது என்று பழ. நெடுமாறன் தனது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

"அதிர்ச்சி அளிக்கிறது"

சென்னை, ஏப். 5: மத்திய அரசின் நெருக்க டியால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட் டத்தை முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற் றுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கை: ""ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடகத்தின் தயவோ, அனும தியோ தமிழகத்துக்கு தேவையில்லை. தமிழ கத்துக்கு வரும் காவிரி நீரைத்தான் பயன்ப டுத்துகிறோம்.

காவிரியிலிருந்து பெங்களூர் குடிநீர்த் திட் டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றும் போது, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை ஏன் நிறைவேற்றக் கூடாது? இத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவ சியமே இல்லை.

"கர்நாடக அரசு கடைப்பிடித்துவரும் எதிர்ப் போக்கினைத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டும்' என மத்திய அர சுக்கு கோரிக்கை விடுத்து சட்டப் பேரவை யில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் கருணாநிதி "ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றினால், தமிழ்நாட்டு பஸ்களை உடைப்போம் என்று கூறுகிறார்கள். பஸ் களை அல்ல எங்கள் எலும்புகளை உடைத்தா லும் சரி கவலைப்பட மாட்டோம்' என்றார்.

"தமிழகத்தின் உரிமையை எள்ளளவும் விட்டுத்தர மாட்டோம், ஒகேனக்கல் குடி நீர்த் திட்டத்தை நிறைவேற்றிய தீருவோம்' என சட்டப் பேரவையில் பேசினார்.

"இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப் பாடு ஆகியவற்றைக் காத்திடும் பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கின்ற காரணத்தால், அந்தப் பொறுப்பை உடனடியாக நிறை வேற்றி, தமிழக மக்களின் உரிமையைக் காத் திட வேண்டும்' என முதல்வரால் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்பின் பேசிய முதல்வர், "இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, அணி வகுப் பது, பணி முடிப்பது என்பதைப் பற்றி அனைத் துக் கட்சிகளின் சார்பில் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்' என்றும் தெரிவித்தார்.

ஆனால், முதல்வரின் இன்றைய அறிவிப்பு தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறை வேற்றியே ஆக வேண்டும் என பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின், அதற்கு எதிராக, கொள்கை ரீதியான முடிவை சட்டப்பேரவையில் தெரிவிக்காமல், தன்னிச் சையாக முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வ ருக்கு எப்படி வந்தது? இது சட்ட விரோதமா னது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக் கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒகே னக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கர்நாடக அரசிடமா உள்ளது? காவிரி நதிநீர்ப் பிரச்னை, முல்லைப் பெரி யாறு பிரச்னை, பாலாறு பிரச்னை, பொன் னையாறு பிரச்னைகளைத் தொடர்ந்து ஒகே னக்கல் குடிநீர்த் திட்டத்திலும் அண்டை மாநிலங்களுக்குச் சாதகமாக கருணாநிதி செயல்பட்டுள்ளார்.

பேசித் தீர்ப்போம் என்பதெல்லாம் வெட் டிப் பேச்சுத்தான். ஒகேனக்கல் குடிநீர்த் திட் டத்தை திரும்பப் பெற்றிருப்பது மக்கள் விரோத செயல்'' என ஜெயலலிதா தெரிவித் துள்ளார்.

Thinamani

கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

காங்கிரசின் வெற்றி வாய்ப்பு தேர்தலில் மங்கிவிடக்கூடாது என்பதற்காக தமிழரின் உரிமையை கருணாநிதி தனது கூட்டணி ஆதாயத்திற்காக காற்றில் பறக்க விட்டுள்ளார்.

கருணாநிதியின் இந்த சுயநல அரசியலுக்கும் எல்லாவற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பதுபோல் ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் நியாயமானவையே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய டி.ராஜேந்தர் அறிக்கை

Sunday, 06 April, 2008 01:01 PM

சென்னை, ஏப். 6: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்சனையில் தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாக இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 1998ம் ஆண்டிலேயே கர்நாடகத்திலிருந்த மாநில அரசும் ஒத்துக் கொண்டு மத்திய அரசும் ஒப்புதல் தந்த பிறகு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் முழு உரிமையும் நம் கையில் இருக்கும்போது இப்போது திட்டத்தை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் என்ன? திடீரென்று நிறுத்தி வைக்கும் ரகசியம் தான் என்ன?

இந்த விவகாரத்தில் கர்நாடகம் பற்றி எரியும் போது அங்கே தேர்தலை அமைதியாக நடத்த முடியாது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்காமல் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஜெயிக்க முடியாது என்பதற்காக காங்கிரசும், கருணாநிதியும் கூட்டாக போடுகிறார்கள் ஒரு திட்டம். அதனால் தான் நிறுத்தி வைக்கப்படுகிறது கூட்டுக்குடிநீர் திட்டம்.

கர்நாடக தேர்தலுக்காக நாம் ஏன் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்? அதற்கு பதிலாக கர்நாடகத்தில் அமைதி இல்லை என்றால் அங்கே தேர்தலை தள்ளி வைக்கட்டுமே. நம் வீட்டு குழந்தை பசியிலே அழும் போது அதைவிட்டு விட்டு பக்கத்துவீட்டுக்காரன் குழந்தைக்கு தொட்டில் ஆட்டும் மாயம் தான் என்ன? துணை போகும் மர்மம் தான் என்ன?

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஜெயித்துவிடும்; அவர்கள் ஆதரவோடு இங்கே திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்று கருணாநிதி போடுகிறார் ஒரு தப்பு கணக்கு. மாறாக, பாரதிய ஜனதா ஜெயித்துவிட்டால் என்ன செய்வார்? இப்போதாவது எடியூரப்பா ஒகேனக்கல் எல்லை வரை தான் வந்தார். ஜெயித்து விட்டால் கோபாலபுரம் கொல்லை வரை அல்லவா வர நினைப்பார். தமிழர்களுக்கு தொல்லை அல்லவா தர துடிப்பார்.

அரசுமில்லை, அதிகாரமுமில்லை என பல்லில்லாத பாம்பாக இருக்கும் போதே கர்நாடகத்தினர் கரும் பாம்பாக கொத்த வருகிறார்கள். தேர்தல் முடிந்து ஜெயித்துவிட்டால் பல்லும் முளைத்துவிடும், விஷமும் கிடைத்து விடும். அப்புறம் அவர்கள் இடத்தில் கக்க சொன்னால் விஷத்தை தான் கக்குவார்கள். திட்டத்தை நிறைவேற்ற ரத்தினத்தையா கக்குவார்கள்?

தும்பைவிட்டு விட்டு வாலை பிடிக்கலாமா? நம் தெம்பை விட்டு விட்டு தேர்தலுக்கு பின் கர்நாடகத்தினர் காலை பிடிக்கலாமா? கர்நாடகத்தில் தேர்தல் வரவிருப்பது தமிழக முதல்வருக்கு முன்பே தெரியாதா?

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஏன் நாட்டினார் அடிக்கல்? அதனால் தானே கர்நாடகத்தினர் போட நினைத்தனர் தடைக்கல். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு தமிழர்கள் மீது எறிந்தனர் கருங்கல். அடிவாங்கிய தமிழன் திரும்ப அடித்தானே இது மைல்கல். ஆனால் இப்போது ஏன் கருணாநிதிக்கு வந்தது இந்த சறுக்கல்?

திட்டத்தை தடுத்தவனை புத்திசாலி யாக்கிவிட்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்தவனை முட்டாளாக்கி விட்டாரே. அங்கே தமிழனை அடித்தவனை வீரனாக்கி விட்டு பதிலுக்கு போராட வாளெடுத்த வனை கோழையாக்கிவிட்டரே, இது நியாயமா? இவ்வாறு அறிக்கையில் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

maalaimalar

கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்யாவிட்டால் தானே அதைச் செய்தியாக்க வேண்டும். இது வழமையாக நடப்பது தானே? இதைச் செய்தியாக்கலாமா?

(நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியல்ல. மனிதன் நாயைக் கடித்தால் அது தான் செய்தி என்று எங்கோ வாசித்த ஞாபகம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.