Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களப் பேரினவாதத் தலைமையை தமிழ் மக்கள் எப்படித்தான் நம்புவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதத் தலைமையை

தமிழ் மக்கள் எப்படித்தான் நம்புவது?

15.04.2008

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய விடயங்களில் தமிழர் தரப்பில் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டு வருபவர்களில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசனும் ஒருவர். அவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய கருத்து இன்றைய கட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு நியாயமானதாகவும் நீதியானதாகவும் அமைந்திருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய விடயங்களில் சிங்களவர்களின் அரசியல் வரலாற்றை அதன் இலட்சணத்தைச் சீர்தூக்கிப் பார்த்தால் தமிழர்கள் அவர்களை எப்படி நம்புவார்கள்? நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் அவர்.

இந்த நாட்டின் இனப்பிரச்சினையின் முதல் பாரிய வெடிப்பாக வெளிப்பட்டது 1956 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டமே. அதன் மூலமே தமிழினத்தின் மொழி உரிமை முதன்முதலாக சட்ட ரீதியாகவும் பறிக்கப்பட்டது. அதுவே இனப்பிரச்சினையின் ஆழமான வேரோடலுக்குக் காரணமாகவும் அமைந்தது.

அந்த வரலாற்றுத் தவறைத் திருத்தப்போகிறார்கள் என்று கூறிக்கொண்டு 32 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அது வந்தும் என்னவாயிற்று?

தமிழை ஒடுக்கி, புறந்தள்ளி, சிங்களத்தை மட்டுமே அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தும் அடக்குமுறைச் சட்டம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டு தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டது.

ஆனால் சிறுபான்மையினரை அடக்கும் அந்தச் சட்டம் முழு அளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

எனினும், அந்தச் சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை நீக்குதல் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி நீண்டகால இழுபறி, சிக்கல்களுக்கு மத்தியில் பல தசாப்த காலத்தின்முன் கொண்டுவரப்பட்டும் இன்றுவரை உருப்படியாகச் செயலுருப்பெறவே இல்லை.

இதனை மனோ கணேசன் எம்.பி. அப்பட்டமாகச் சுட்டிக்காட்டினார். அதற்கான புள்ளிவிவரங்களையும் அவர் முன்வைத்திருக்கின்றார்.

கொழும்பு மாநகரத்தில் இன்று ஐம்பது வீதம் தமிழர்கள் வாழுகின்றனர். ஆனால் இங்குள்ள 19 பொலிஸ் நிலையங்களில் எதிலாவது தமிழில் கருமம் ஆற்ற முடியுமா? சரி, பிற அரச அலுவலகங்களில் தன்னும் தமிழில் தமது விடயங்களைத் தமிழர்கள் செய்துகொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.

1987 ஆம் ஆண்டு 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துடன் மாகாண சபைகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது சரிவரச் செயற்படுத்தப்படவேயில்லை.

இருபது வருடங்களுக்கு முன்னரே தமிழர்கள் அதை நிராகரித்து விட்டார்கள் என்பது வேறுவிடயம். அதனை இப்போது இருபத்தியொரு ஆண்டுகள் கழித்துத்தான், நடைமுறைப்படுத்துவதற்காகத் தூசுதட்டி மேசையில் தூக்கி வைத்திருக்கின்றது தென்னிலங்கை.

அத்தகைய சட்டத்தில் கூட மாகாணங்களுக்கு முக்கியமாகப் பகிரப்பட்ட பிரதான விடயங்களான காணி, சட்டம், ஒழுங்கு, காவல்துறை போன்றவை தொடர்பான அதிகாரப் பகிர்வுகளை வெட்டி அகற்றிவிட்டு, குற்றுயிரான மாகாணசபைத் திட்டத்தையே இன்று கிடப்பில் இருந்து எடுத்து மேசையில் தூக்கிப் போட்டிருக்கின்றது சிங்களத் தலைமை.

சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நீதி செய்வதாகக் கூறும் சிங்களத்தின் இலட்சணம் இதுதான் என்பதைப் போட்டுடைத்திருக்கின்றார் மனோ கணேசன்.

1956 இல் சிங்களம் மட்டுமே சட்டம். தமிழினத்தின் மொழியுரிமையைப் பறித்து அவர்கள் மீது பேரினவாதத்தின் ஒடுக்குமுறையாகப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டபோது தமிழர்கள் நியாயம் கேட்டுப் போராடினார்கள். கொதித்தெழுந்த தமிழ்த் தலைவர்கள் அஹிம்சை வழியில் காந்தியப் பாதையில் அறநெறியில் வகுக்கப்பட்ட சாத்வீக முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போது அவர்கள் ஒரு குண்டை மட்டுமல்ல, ஒரு கல்லைக்கூடத் தூக்கி எறியவில்லை. தமிழ்த் தலைவர்கள் தமது எதிர்ப்பை அமைதி முறையில் காட்டுவதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்னால் குந்து மறியலில் ஈடுபட்டனர். நடந்தது என்ன?

அன்றைய சிங்கள அரசு குண்டர்களை ஏவிவிட்டுத் தமிழர்களை அடித்து நொருக்கி விரட்டிக் கலைத்தது. இரத்தம் சொட்டச் சொட்ட நாடாளுமன்றுக்குள் நுழைந்த அவர்களை, அன்றைய சிங்கள அரசின் அமைச்சர்கள் "யுத்தத்தின் பரிசு' என்று அவர்களின் காயங்களைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடிக் கிண்டல் பண்ணினர்.

அந்தப் பொறுப்பற்ற போக்கின் பரிசாக இன்று உண்மையான யுத்தத்தையே நாடு எதிர்கொண்டு அல்லோல கல்லோலப் படுவதை மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றா

இந்தக் கேள்வியே கேட்கக் கூடாது. இன்னமும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. பேரினவாதம் ஒரு மண்ணாங் கட்டியையும் தராது என்றார் தராக்கி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.