Jump to content

ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்-சச்சின் விலகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sachin-Tendulkar250_16042008.jpg

டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இருந்து சச்சின் விலகிவிட்டார்.

திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது.

இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது.

அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார்.

இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் அவர் விளையாடவில்லை.

ஓய்வெடுத்து வந்தபோதிலும் பெருமைக்குரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்வதாக சச்சின் உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் நாளைய ஜோதி ஓட்டத்தி்ல் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

சச்சின் கலந்து கொள்ளாதது பற்றி இதுவரை எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்

thatstamil.com

Link to comment
Share on other sites

சும்மா சீனாவுக்கு எதிர்ப்பு காட்டிறம் எண்டு சொல்லிபோட்டு இப்பிடி காலா காலமாக நடக்கின்ற ஒலிம்பிக் தீபத்தை தூக்கமாட்டன் என்று சொல்லுறது எல்லாம் நல்லதா தெரிய இல்லை.

அமெரிக்கா தங்களை எழுப்புறதுக்கு, சீனாவை மட்டம் தட்ட வேறு வழி தெரியாதபோது இப்படி உள்நோக்கில் செய்யும் விளையாட்டுக்களிற்கு உடந்தையாக இருப்பது சரியாக படவில்லை.

உண்மையில் சீனாவை எதிர்ப்பது, சீனாவின் திபெத்திய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் வேறு ஆக்கபூர்வமான வழிகளில் எதிர்ப்பு காட்டலாம். வேறு ஏதாவது பிரயோசனமாக செய்யலாம். அதைவிட்டுபோட்டு இப்படி நீண்ட பாரம்பரியமும், வரலாற்றையும் கொண்ட, உலகநாடுகளையும், பல்வேறு இனமக்களையும் ஒன்றிணைக்கும் இந்த ஒலிம்பிக் விளையாட்டை கொச்சைப்படுத்துவது மூடர்கள் செய்யும் வேலை என்று தான் சொல்லலாம்.

.....

Link to comment
Share on other sites

அரசியலை ஒரு விளையாட்டாகும் போது விளையாட்டை அரசியலாக்ககூடாதா..?

Link to comment
Share on other sites

ஓம் தாராளமா விளையாட்டுக்க அரசியலை வைக்கலாம். கள்ள ஓட்டுக்கள், ரவுடித்தனங்கள் மூலமும் பதக்கங்களையும் பெற முயற்சிக்கலாம்... தேர்தலும் வைக்கலாம்..

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் போட்டியின் மீது உலக மீடியாக்களின் பார்வை இருக்கும். அதனை தமது பக்கம் திருப்பி திபெத்தியர்களின் பிரச்சனைகளை உலகறிய வைப்பதில் தவறேதும் இல்லை. இத சாக்காக வைத்து இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்த முயல்வது உண்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டும்... ஆனால் ஒலிம்பித் தீபம் ஏந்த ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டின் வீரர் வேணும். நல்ல 'காமடியா' இருக்கு

ஓம் தாராளமா விளையாட்டுக்க அரசியலை வைக்கலாம். கள்ள ஓட்டுக்கள், ரவுடித்தனங்கள் மூலமும் பதக்கங்களையும் பெற முயற்சிக்கலாம்... தேர்தலும் வைக்கலாம்..

விளையாட்டில் அரசியல் வைத்து மாற்றத்தை ஏற்படுத்திய நாடுகள் தென்னாபிரிக்கா, சிம்பாவே முன்னுதாரணங்களாய்....

சும்மா சீனாவுக்கு எதிர்ப்பு காட்டிறம் எண்டு சொல்லிபோட்டு இப்பிடி காலா காலமாக நடக்கின்ற ஒலிம்பிக் தீபத்தை தூக்கமாட்டன் என்று சொல்லுறது எல்லாம் நல்லதா தெரிய இல்லை.

அமெரிக்கா தங்களை எழுப்புறதுக்கு, சீனாவை மட்டம் தட்ட வேறு வழி தெரியாதபோது இப்படி உள்நோக்கில் செய்யும் விளையாட்டுக்களிற்கு உடந்தையாக இருப்பது சரியாக படவில்லை.

உண்மையில் சீனாவை எதிர்ப்பது, சீனாவின் திபெத்திய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் வேறு ஆக்கபூர்வமான வழிகளில் எதிர்ப்பு காட்டலாம். வேறு ஏதாவது பிரயோசனமாக செய்யலாம். அதைவிட்டுபோட்டு இப்படி நீண்ட பாரம்பரியமும், வரலாற்றையும் கொண்ட, உலகநாடுகளையும், பல்வேறு இனமக்களையும் ஒன்றிணைக்கும் இந்த ஒலிம்பிக் விளையாட்டை கொச்சைப்படுத்துவது மூடர்கள் செய்யும் வேலை என்று தான் சொல்லலாம்.

.....

http://en.wikipedia.org/wiki/American-led_...Summer_Olympics

மேலே இருக்கிற இணைப்பிலயும் ஒருக்கா படிச்சிட்டு வாங்க!

Link to comment
Share on other sites

அது ஏற்கனவே தெரிஞ்ச விசயம். முந்தி அப்பிடி நடந்தது எண்டுறதுக்காக ஒவ்வொரு முறையும் அப்பிடி செய்தால் கடைசியில ஒலிம்பிக்கே இல்லாமல் போயிடும்..

முதலில புறக்கணிப்புக்கள் செய்ய முன்னம் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவதன் உள்ளார்ந்தம் விளங்க வேணும்..

அது பல்வேறு நாடுகளையும், மக்களையும், வீரர்களையும் இணைக்கின்றது. உலகத்தில எத்தனையோ பிரச்சனைகள் நடைபெறேக்க இந்த ஒலிம்பிக் போட்டி மக்களை ஒன்றிணைச்சு மனிதம் என்ற வகையில இணைக்கிது.

ஏன் எங்கட தாயகத்தை எடுத்துக்கொண்டால் இப்படி ஒரு போட்டி சிறீ லங்காவில நடக்குமாய் இருந்தால் அதை புறக்கணிக்குமாறு இயக்கம் கூறும் என்று நான் நினைக்க இல்லை. கடைசி உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி சிறீ லங்காவில் நடைபெறுமாய் இருந்தால் அதைக்கூட அங்கு போராடுபவர்கள் புறக்கணிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 1996 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியை அவர்கள் குழப்பி அல்லது எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது செய்தார்களா?

ஏன் இல்லை? ஏன் என்றால் விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும்.

இப்படியான புறக்கணிப்புக்கள் மூலம் லாபம், நட்டம் அடையப்போபவர்கள் யார் என்று தெரிந்தால் இதன் உள்ளார்ந்தம் விளங்கும்..

இந்தத் தடவை போட்டி சீனாவில் நடைபெறுகின்றது என்றால் அது சீனா செய்த குற்றம் அல்ல, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கு அது.

இப்படி முன்னுதாரணங்கள் மூலம் உலகை - உலக மக்களை இணைக்கும் முக்கிய சம்பவங்கள் குழப்பப்பட்டால் கடைசியில் இதுவே பிரிவினைகளும், பிரச்சனைகளும் தோன்ற வழிகோலும்.

இதே விளையாட்டையே ஒரு காலத்தில் சீனா அமெரிக்காவுக்கு எதிராக செய்யக்கூடும்..

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் எண்டுறது ஒரு தனிப்பட்ட நாடு சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. அது உலகில் உள்ள எல்லா நாடுகளையும் இணைக்கின்ற விசயம். இந்த புறக்கணிப்புக்களால் பாதிக்கப்படபோவது சீனாவோ, தீபத்தோ மாத்திரம் அல்ல.. எல்லா நாட்டு மக்களையும் அது பாதிக்கும்...

தென்னாபிரிக்கா, சிம்பாபே தனித்தனி நாடுகள் சம்மம்தப்பட்ட விசயம். தென் ஆபிரிக்காவில போய் கிரிக்கட் விளையாடக்கூடாது எண்டு சொல்லிறதுக்கும், சீனாவில போய் ஒலிம்பிக் விளையாடக்கூடாது எண்டு சொல்லிறதுக்கும் இடையில எவ்வளவோ வித்தியாசம் இருக்கிது.

நான் அறிஞ்ச வகையில கனடா இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கலந்துகொள்ள உள்ளது என்பது மட்டும் தெரிகின்றது.

http://en.wikipedia.org/wiki/Olympics

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னாபிரிக்கா, சிம்பாபே தனித்தனி நாடுகள் சம்மம்தப்பட்ட விசயம். தென் ஆபிரிக்காவில போய் கிரிக்கட் விளையாடக்கூடாது எண்டு சொல்லிறதுக்கும், சீனாவில போய் ஒலிம்பிக் விளையாடக்கூடாது எண்டு சொல்லிறதுக்கும் இடையில எவ்வளவோ வித்தியாசம் இருக்கிது.

ஆனாலும் எங்களுக்குத் தேவையென்று வந்தால் உலகக்கிண்ணக் கிரிக்கட்டில் சிறீலங்கா அணியை ஆதரவு வழங்காமல் புறக்கணிப்போம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.