Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான சிங்களத் தேசியவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-04-18

தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான சிங்களத் தேசியவாதம்

மனித வாழ்வுப் போக்கை வரலாற்றுப் புறநிலையில் ஆராய் பவர்கள் மானுடம் பிரக்ஞையுற்று, விழிப்பு நிலை கொண்டு, சுயவுணர்வு பெற்று, தளைகளை அகற்றி, கட்டுக்களை நீக்கி, விடுதலை பெற முனைவதையே தனது வாழ்க்கைப் போராட்ட இலட்சியமாகவும், இலக்காகவும் வரித்துக்கொண்டு அசைவதை அவதானிப்பர்.

ஆதி நாகரிகங்களில் ஆட்சி முறைகளில் அனைத்து அதிகாரமும் கொண்ட அரசனே சுதந்திர புருஷனாக விளங்கினான். மற்றெல்லோரும் அவனுக்குக்கீழ் அடிமைகளாக உழன்றனர்.

காலப்போக்கில் புதிய நாடுகள், புதிய பண்பாட்டு உலகங்கள் தோன்றின. விடுதலையின் விழிப்புணர்வு மனிதனிடையே பற்றிப்பிடித்துப் படர்ந்து விஸ்வரூபம் எடுத்தது.

காலத்துக்குக்காலம் தோன்றி வளர்ந்த பண்பாட்டுக் கோலங்கள் விடுதலையின் விழிப்புணர்வை விரிவுபடுத்தின. சிந்தனையின் எண்ணப்போக்கின் வளர்ச்சியால் எழுந்த உந்துதல் காரணமாகப் போர், புரட்சி, கிளர்ச்சி என்று மனிதர்கள் விடுதலை வேண்டி எழுச்சி கொண்டனர். இவ்வாறாக விடுதலையின் தேடுதலாக தளைகளில் இருந்து விடுபடும் சதாகால முயற்சியாக மனித வரலாறு நகர்கிறது.

இந்த எழுச்சிகளினால் புதிய உலக ஒழுங்குகள் தோற்றம் பெற்றன. முடியாட்சி முறை மண் கவ்வ குடியாட்சி என்ற பெயரில் புதிய கட்டமைப்புத் தோற்றம் பெற்றது.

அதுவும் கூட ஜனநாயகம், கம்யூனிஸம், சோசலிஸம், முதலாளித்துவம் என்று பல்வேறு புனை பெயர்களில் உருக்கொண்டு சமூகக் கட்டமைப்புகளை வளைத்துப் பிடித்து அவற்றின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறவில்லை.

ஜனநாயகம், மக்களாட்சி, பிரதிநிதித்துவ அரசு என்ற பொய்யான போலியான கருத்துருவத் திரைகளுக்குப் பின்னால் நின்றபடி மனிதத்துவத்தை அடிமைப்படுத்தும் அடக்குமுறைத் தொழில்நுட்பம் இன்னும் கூட இன்றும் கூட கனகச்சிதமாகக் கட்டவிழ்வதைப் பல நாடுகளில் நாம் காண்கிறோம்.

ஒரு நாகரிகத்தை இன்னொரு நாகரிகமும், ஒரு பண்பாட்டுக் கோலத்தை இன்னொரு பண்பாட்டுக் கட்டமைப்பும், ஒரு மதத்தை இன்னொரு மதமும், ஓர் இனத்தை இன்னொரு இனமும் ஆக்கிரமித்து, மேலாதிக்கம் செலுத்தி, அடக்கி, ஒடுக்கும் மேலாண்மை ஆட்சி முறை உலகின் பல பாகங்களிலும் பெரும் அராஜகமாக இன்று விரிந்து செல்கின்றது.

அதிகாரத்தின் அரூபக் கரங்கள் நலிந்த, வலுவிழந்த மக்கள் கூட்டத்தை, சமூகங்களை, இனங்களை அழித்துச் சின்னாபின்னமாக்கும் பெரு நாசமும் அநியாயமும் இந்த நவீன நாகரிக உலகில் ஒழிந்துவிடவில்லை. இன்னும் தொடர்கதையாக அது நீளுகின்றது. அந்த அராஜகத்தை உலகெங்கும் நாம் காண்கிறோம்.

அடக்குமுறையும், அடக்கு முறைக்கு எதிரான எழுச்சியுமாக நவீன உலகம் ஒரு முரண்பாட்டு நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது. அதன் மற்றொரு படிமத்தை இப்போது இலங்கை கண்டு நிற்கின்றது.

மதம்,மொழி, இனம், பால் நிலைவேறுபாடு காரணமாகப் பாகுபடுத்தலுக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதும்

தன்னுடைய சமூக, இனப் பண்பியல்புகளைக் கட்டிக்காத்து, தனது மத நம்பிக்கையைப் பேணி, கருத்து வெளியிடும்சுதந்திரம் உட்பட அடிப்படை வாழ்வியல் உரிமைகளை அனுபவித்து உணர்வுபூர்வமாக ஒரு மனிதன் வாழ்வதற்கு உரித்துடையவன். இதனை உறுதிப்படுத்துவதே உண்மையான சுதந்திரமும் மானுட விடுதலையுமாகும்.

ஆனால் இந்த உண்மையான சுதந்திரமும், மானுடத்தின் விடுதலையும் ஈழத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தினரான சிங்களவர்களிடம் அடிமை சாசனமாக எழுதி ஒப்படைக்கப்பட்ட தனது தேசத்தின் இழந்த இறைமையை இறையாண்மையை மீட்டெடுப்பதே தனது உண்மையான சுதந்திரம் என்று உணர்ந்து அதற்காகப் போராடுகின்றது ஈழத் தமிழ் இனம்.

""தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய தாயகத்தில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாஷை'' என்று தமிழர் தரப்பின் கருத்து நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.

பௌத்த மறுமலர்ச்சியின் வடிவமாக சிங்களத் தேசியவாதப் போக்கு இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. அந்தத் தேசியவாத கருத்தியல் சிந்தனை இன்று சிங்களத்தின் அரசியலில் வலுமிக்க பெரும் ஆதிக்க சக்தியாக மேலாண்மைக் கருத்தியலாக உருவெடுத்திருக்கின்றது.

அது தனது சிங்களத் தேசியத்தை நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியம் மீது காழ்ப்புணர்வு கொண்டு அதை அடக்கி, ஒடுக்குவதே ஒரே மார்க்கம் என்று தனக்குள் தானே சதித்திட்டம் விதித்து காய் நகர்த்துகின்றது. அப்பாதையில் வெறிகொண்டு விரைகின்றது.

தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளின் தமிழர் விரோதக் காழ்ப்புணர்வு திண்ணியமான சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறை வடிவம் எடுத்ததன் பின்னணி இதுதான்.

http://www.uthayan.com/

ஒரு தேசியவாதம் இன்னுமொரு தேசியவாதத்தினை எதிரியாகக் கொள்ள முடியாது. சிங்களத்தின் தன்மை ஆட்சியாளர்களால் வளர்க்கப்படும் பேரினவாதமே. இந்தப் பேரினவாதம் தமிழருக்கு மட்டுமல்ல, சிங்களத் தேசியவாதத்திற்கும் எதிரானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.