Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது

கொள்கை முன்னெடுப்பு பிரிவைச் சேர்ந்த திரு. ஏழிலன் பேசுகின்றார்.இன்றைய இந்த நாளிலே பல நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து வழுகின்ற நாங்கள் இடையிலே எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமல்லாது இன்றைய காலத்தின் தேவைகளையும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும்.

இதேநேரம் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்று பலரிடம் பல கேள்விகள் எழுந்துள்ளது.

இப்போது இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இராணுவம் முன்னேறுவது போல சொல்லகின்ற செய்திகள். எங்களுக்கருகிலேயே சத்தங்கள் கேட்பதற்கான அந்த நடவடிக்கைகள். நாங்கள் அதனை அண்மையிலேயே தொடர்ச்சியாக எதிரியினுடைய, தாக்குதல் நடவடிக்கைகளை கேட்கின்ற வாய்ப்புகள், எனவே இப்படியாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த நடவடிக்கை காரணமாக அடுத்தகட்டம் என்ன என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழுந்துள்ளது.

பலருடைய கேள்வி இப்போது அதுவாகத்தாக் இருக்கின்றது. என்ன, ஒரு நடவடிக்கையையும் காணவில்லையே என்று.

என்னிடம் நேற்று ஒரு ஐயா கேட்டார் முந்தியென்றால் அடிக்கடி ஏதாவது ஒரு சத்தம் கேட்கும் கடலிலே சத்தம் கேட்கும், தரையிலே சத்தம் கேட்கும், எதிரியினுடைய பாசறையினுள்ளே சத்தம் கேட்கும். இப்படி புலிகள் சும்மா இருப்பதில்லை.

தொடர்ந்து எங்கயாவது ஒரு தாக்குதலை செய்து கொண்டிருந்தார்கள். முகாங்கள் அடித்தார்கள் பிரதேசங்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அண்மைக்காலமாக எந்த சத்தங்களையுமே காணவில்லை இதற்கு என்ன காரணம் என்று சொல்லிக் கேட்டார். எல்லோரிடமும் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.

ஆனால் இது ஒரு விடுதலைப் போராட்டம். இங்கே நாங்கள் வெல்லவேண்டும். தோற்போமாக இருந்தால் அதில் இழப்பைத்தான் நாங்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே நாங்கள் தோற்காமல் வெல்லவேண்டும் என்கின்ற தேவை இருக்கிறது. அது ஒரு விடுதலைப்போராட்டத்திலே, மிகவும் பிரதானமான விடயம் என்னவென்றால் நாங்கள் எல்லாவற்றிலுமே குறைந்த வளங்களைக் கொண்டவர்கள்.

அது ஆளணியாக இருந்தாலும் சரி ஆயதங்களாக இருந்தாலும் சரி. அந்த வளங்களிலே நாங்கள் குறைந்தவர்கள். எதிரி அரசு. அந்த அரசு அவர்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாய்ப்புகள் இருக்கின்றது. அதை வளங்குவதற்கு பலர் தயாராக இருக்கின்றார்கள்.

எனவே போராடுகின்ற அமைப்பு வெற்றியை சரியாக பெற்றுக் கொள்கின்ற வகையில் தான் தனது போர் நடவடிக்கைகளை செய்யவேண்டும். அதை விட்டு விட்டு எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள் என்ற வகையிலே உடனடியாக அதையிதைச் செய்து விட்டு இந்த விடுதலையிலே நாங்கள் அழிந்து போகமுடியாது.

எனவே எங்களுடைய தலைவரைப் பொறுத்த வரையிலே ஏற்ற காலங்களை சரியாகக் கணித்து அதற்கு ஏற்ற வகையிலே தனது நடவடிக்கைகளை செய்கின்ற போது பல மாற்றங்கள் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார். எனவே நாங்கள் காத்திருக்கின்ற காலமாக அது இருக்கின்றது.

இந்தக் காத்திருப்பு எவ்வளவு காலம் என்பதுதான் எங்களில் பலருடைய கேள்வியாக இருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் காத்திருக்கவேண்டும். இப்படிப் பலரிடம் இருக்கிறது கேள்வி. காத்திருப்பதற்கான காலம் முடிவதற்கான காலம் நெருங்கியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே இப்படி ஒரு நீண்டகால இடைவெளி வந்தது கிடையாது. அதே வேளையிலே இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் விடுதலைப்புலிகள் சும்;மா இருக்கவில்லை. தொடரான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்னவென்றால், எங்கேயாவது ஒரு முகாமைப்பிடிக்கவில்லை அல்லது ஏதாவது ஒரு பிரதேசத்தைப் போய் அடித்துப் பிடிக்கவில்லை என்பதுதான்.

இப்போது எங்களுக்கு இருக்கின்ற அங்கலாய்ப்பாக இருக்கின்றது. அல்லது 100 ஆமியைக் கொல்லவேண்டும். அல்லது 200 ஆமியைக் கொல்லவேண்டும். எல்லோரும் விரும்புவது நல்ல செய்தி ஒன்றுதான் அது.

செய்யவேண்டும் என்கின்ற ஆவல் எல்லோரிடமும் இருக்கின்றது. அந்த வாய்ப்பை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும். அது தான் இப்போது இருக்கின்ற பிரச்சினை. உங்களுக்குத் தெரியும் இன்று ஒரு நீண்ட பெரும் பிரதேசத்திற்குள்ளே எதிரியை உள் நுழைய விடாமல் நாங்கள் தடுத்து வைத்திருக்கிறோம். இது ஒரு பெரிய போர். இன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தியாவிலே யுத்தம் நடைபெறுகின்றது என்றால் அது எங்கே நடைபெறுகின்றது.

காஸ்மீரின் எல்லையிலே தான அங்கு சண்டை நடைபெறுகின்றது. பாகிஸ்தானும் இந்தியாவும் சண்டைபிடிக்கிறார்கள். எல்லையிலே தான்; சண்டை நடைபெறுகின்றது. அதைத்தான் அவர்கள் இந்தியா பாகிஸ்தான் யுத்தம் என்று சொல்கிறார்கள்.

போர் என்று சொல்கிறார்கள். எனவே எங்களுடைய எல்லையிலே நாளாந்தம் சண்டை நடைபெறுகின்றது. அது ஒரு சாதாரணமான படையோடு அல்ல. இலங்கையினுடைய ஒட்டு மொத்தமான படைகளிலே அந்த இராணுவ நடவடிக்கைகளை செய்கின்ற படைகளிலே முக்காவாசிப் படைகளோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் மணலாறில் இருந்து மன்னார் வரைக்கும் காவலரண்கள் அமைத்திருக்கிறோம். இங்கே நாகர் கோயிலில் இருந்து கிளாலி வரையிலும் எங்களுடைய காவலரண் இருக்கிறது.

மொத்தமாக முன்னூற்றைம்பது (350) கிலோமீற்றர் தூர நீளத்திற்கு எல்லைக் காவலரண்களை அமைத்து வைத்துக் கொண்டு அங்கே காப்பு நடவடிக்கைகளில் நாங்கள் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த முன்னூற்றைம்பது (350) கிலோமீற்றர் தூரத்திற்கு சிறீலங்காவினுடைய படைகள் 70,000 படைகள் நிற்கின்றார்கள். ஏழு டிவிசனில் படை நிற்கின்றது. ஒரு டிவிசனிலே 13000 படைகள் இருக்கவேண்டும்.

ஆனால் சிறிலங்காவிலே 10000, 11000, 9000 என்று அந்த டிவிசன்கள் இருக்கின்றது. இப்பொழுது மொத்தமாக 70000 படைகள் இந்த எல்லைகளிலே நிற்கிறார்கள். அந்த 70000 படைகளோடு எங்களது போராளிகள் நாளாந்தம் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வீரச்சாவுகள் வருகிறது. இப்பொழுது நாங்கள் கேட்கின்ற கேள்விகள் என்னவென்றால் தொடர்ச்சியாக எல்லையிலே நின்றால் இப்படியே தொடர்ந்து வீரச்சாவுகள் வந்து கொண்டிருக்கும். இழப்புகளை சந்தித்துக் கொண்டிருப்போம். இதை எப்பொழுது நிற்பாட்டமுடியும் என்கின்ற கேள்வி எல்லோரிடமும் எழுகின்றது. நி;ற்பாட்ட வேண்டும்.

விரைவாக நிற்பாட்டவேண்டும். அந்த விரைவாக நிற்பாட்டுவதற்கான நடவடிக்கைகள் இப்பொழுது ஒழுங்கு படுத்தப்படுகிறது.

எங்களுடைய தலைவர் அண்மைக்காலங்களிலே இரவு பகலாக நித்திரை முழித்து விரைவான ஒரு மாற்றத்தைச் செய்தற்கான ஒழுங்கமைப்பைச் செய்து கொண்டிருக்கிறார். முதலில் எங்களுக்கு நம்பிக்கை வேண்டும். ஒன்று சொல்லுவார்கள் நம்பிக்கைக்கு அடுத்தது என்ன என்று கேட்டால் நம்பிக்கைதான் என்று சொல்கிறார்கள்.

அதைவிட வேறு ஒன்றும் இல்லை. எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு முதலில் இருக்கவேண்டும். ஏனென்றால் நாங்கள் ஒரு போதுமே நம்பிக்கையை இழக்கமுடியாது. நாங்கள் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு அமைப்பு.

விடுதலைக்காகபோராடுகின்ற அமைப்பு ஒன்றின் பிரதானமான மூலதனமே நம்பிக்கைதான். ஜெயசிக்குறு காலப்பகுதிகளிலே எல்லாமே முடங்கிப்போனதொரு காலமொன்று இருந்தது. எல்லாவற்றையுமே நாம் இழந்து போனோம்.

இந்த ஏ 9 வீதியிலே படையினர்கள் நடந்து வந்து மாங்குளம் வீதியைக் கடந்து அம்பகாமம் வரைக்கும் போயிருந்தார்கள். அந்தப் பகுதியாலே கடந்து கிளிநொச்சிவரையிலுமே இராணுவம் வந்து நின்றது. இங்கே வவுனிக்குளம் வரையும் படைகள் வந்து நின்றன. இங்கே இருந்து போகின்றவர்கள் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்தைத் தாண்டிப்போகமுடியாது.

எந்த நேரமும் அச்சுறுத்தலான காலமாக அது இருந்தது. இந்தப் பிரதேசங்களிலே செல் வந்து விழுந்தது வெடித்தது. ஆழமுடியுமா என்கின்ற கேள்வி. அடுத்தகட்டம் எங்களுடைய வாழ்க்கைக்கு என்ன வளியிருக்கிறது என்ற கேள்வி.

இந்த நிலைமையிலே தான் தலைவருடைய திட்டம் சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டு அடுத்த கட்டத் தாக்குதலிலே எதிரி எல்லாப் பிரதேசங்களையும் கைவிட்டு விட்டு ஓட வேண்டிய நிலைப்பாடு வந்தது.

எனவே அந்த சூழல் இருக்கிறது. நாங்கள் இன்னும் இழந்து போகவில்லை. இந்த ஒரு பெரிய நிலப்பிரதேசத்தை பாதுகாப்புக்குள்ளே வைத்திருக்கிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்று மன்னார் பிரதேசத்தில் எரிமலை இராணுவ நடவடிக்கையிலே, அவர்கள் மூன்று நாட்களுக்குள்ளே சண்டையிட்டு அந்தப் பிரதேசங்களைப் பிடித்தார்கள்.

இங்கே பாலமோட்டையிலிருந்து அப்படியே அடம்பன் வரையும், மன்னார் மடுவரையும் ஒரு பெரு நிலப்பிரதேசத்தை பெரியமடு பள்ளமடு என்கின்ற பிரதேசங்கள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று நாட்களுக்குள்ளே பிடித்தார்கள். ஆனால் இன்று ஆண்டாகப் போகிறது இன்னும் அவர்கள் எதிர்பார்த்த நடவடிக்கையை செய்யமுடியாமல் தான் நிற்கிறார்கள்.

எனவே இதுதான் எங்களுடைய பெரிய பலம் ஒரு பெரிய பிரதேசத்தை எம்மடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அங்கே எல்லையை தூரத்திலே வைத்திருப்பதன் காரணமாகத்;தான் இங்கே நாங்கள் வாழக் கூடியதாக இருக்கின்றது.

இன்று எதிரியினுடைய நடவடிக்கைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தூரவீச்சைச் செய்யக்கூடிய தூரவீச்சிற்கு எறிகணைகளை வீசக் கூடிய ஆயதங்கள் இருக்கின்றது. எனவே எதிரியை உள்ளே நகர விடமுடியாது.

எதிரி அண்மித்து வருவானாக இருந்தால் நாங்கள் இந்தப் பிரதேசங்களிலே வாழ முடியாது. கடந்த காலங்களைப்போல அல்ல. கடந்த காலங்களிலே 20 கிலோமீற்றர்கள் 25 கிலோமீற்றர்களுக்குள்ளே எதிரி வருவானாக இருந்தால் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டும்.

ஆனால் இப்போது அப்படியில்லை. 35 கிலோமீற்றர்களுக்கு அப்பாலேயே நாங்கள் நகர வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு தூரவீச்சுக் கொண்ட ஆயதங்கள் இருக்கின்றது. எனவே எதிரியை இங்கே வரவிடாமல் தடுக்கவேண்டிய கட்டாய கடமைப்பாடு அங்கே காணப்படுகிறது.

ஒரு பெரிய நிலப்பரப்பை எங்களுடைய பாதுகாப்புக்குள் வைத்திருக்கிறோம். இதைப்பரிந்து கொள்ளவேண்டும். எந்தவொரு விடுதலைப்போராட்டமும் தனக்கென்ற ஒரு பாதுகாப்பான வரையறுக்கப்பட்டபிரதேசத்தை வைத்திருக்கின்றபோது தான் அவர்கள் விடுதலையை வென்றதாக வரலாறுகள் இருக்கின்றது.

எதுவுமில்லாத நிலைமையிலே நின்று ஒரு விடுதலைப் போராட்டத்தை வென்று எடுக்க முடியாது. இது ஒரு வரலாற்றுச் சாட்சியம். வியட்னாமை நாங்கள் எடுத்துக் கொண்டால் அங்கே வியட்னாமிலே ஒரு பகுதி அவர்களினுடைய கட்டுப்பாட்டிலே இருந்தது. அந்தப் பிரதேசங்களிலே நின்று கொண்டு தான் ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்தார்கள்.

அண்மையிலே விடுதலையைப் பெற்றுக் கொண்ட எரித்திரியாவைப் பார்ப்போமாக இருந்தால் அங்கே ஆர்த்ரமாவின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது. அந்தக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தான் அவர்கள் ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்தார்கள்.

எனவே ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு போராடுவதற்கான ஒரு தளம் பிரதேசம் இருக்கவேண்டும்;. அந்தப் பிரதேசம் பாது காப்பானதாக இருந்து கொண்டு பின்னணித் தளமாக இருக்கின்ற போது தான் ஏனைய பிரதேசங்களை மீட்கமுடியும்.

என்று விளக்கியிருந்தார் திரு எழிலன் அவர்கள்.

நன்றி

“நாம்” பத்திரிகை.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஒரு கேள்வி.. தெற்கில் இன்று கிளைமோர்கள் வெடிப்பது நின்றுவிட்டது அல்லது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் வன்னியில்.. கடந்த ஜனவரியில் இருந்து தளபதி சாள்ஸ்.. எம் பி.. சிவநேசன்.. மனித உரிமைகள் அமைப்பாளர் கருணாரட்னம் அடிகளார்.. மற்றும் பொதுமக்கள் என்று கிட்டத்தட்ட கிளைமோர் வாரா வாராம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் விமானத்தாக்குதல்கள் இலக்குகளை பதம் பார்க்கின்றன. இன்னொரு பக்கம் ஆள ஊடுருவும் அணியின் வெற்றிகர நடவடிக்கைகள். இவை எல்லாம் எதிரிக்கு உற்சாகம் அளிக்கும் விடயங்கள் தானே.

எத்தனை தளபதிகளை சண்டைக்கு வெளியில் கிளைமோருக்கு பலி கொடுத்திருக்கின்றோம். கேர்ணல் ராஜன்.. கங்கை அமரன்.. முன்னாள் மன்னார் மாவட்டத்தளபதி.. இப்படிப் பலர். இராணுவம் பாதுக்காப்போடு இருப்பதால்.. விழிப்போடு இருப்பதால் அதன் ஒரு தளபதியைக் கொல்ல தற்கொலைத் தாக்குதலை தேர்வு செய்ய வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. ஆனால் எதிரி கிளைமோர்களை வைத்தே அதை சாதித்துவிடுகிறானே..!

இருந்தும்.. தென்னிலங்கை செய்து கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் பாதியைக் கூடவா வன்னியில் உள்ள 3 இலட்சம் மக்களை வைத்துச் செய்து கொள்ள முடியவில்லை. இன்றும் கிளிநொச்சி மாவட்டம் வரை இராணுவம் ஆள ஊடுருவித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதிகாலையில் தாக்குதல். பொதுமக்களின் பார ஊர்தி இலக்கு. இதுவே போராளிகளின் பார ஊர்தியென்றால்.. போர்க்களத்துக்கு வெளியே விமானத்தாக்குதல்களுக்கு வெளியே.. இதுவும் போராளிகளுக்கு இழப்பைத்தானே அதிகரிக்கும்.

வன்னி பரந்த நிலப்பரப்பு என்பதால் இராணுவம் ஊடுருவித் தாக்குவது இலகு என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வன்னியை விட பரந்தது தெற்கும்.. மேற்கும். ஆனால் அங்கு இப்போ கிளைமோர்கள் வெடிப்பது கிட்டத்தட்ட முற்றாக கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.. அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆனால்.. வன்னியில் இருந்து வரும் செய்திகளைப் பார்த்தால்.. எதிரியின் விமானத் தாக்குதலை விட ஆள ஊடுருவும் அணியின் தாக்குதல்களே பலத்த சவாலாக.. இழப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது..! வன்னி மக்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை நிறுவுவதன் மூலம்.. இதற்கென தனியான துணைப்படைகளை உருவாக்குவதன் மூலம்.. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா...???! குறிப்பாக உயிர்ப்புள்ள வீதிகளை தொடர்சியாக கண்காணிப்புக்குள் வைப்பதன் மூலம்.. இதைக் கட்டுப்படுத்த முடியாதா..??! பொறிவெடிகளை விதைப்பதன் மூலம் எதிரியின் ஊடுருவலை கட்டுப்படுத்த முடியாதா..??!

எதிரிக்கு நாமே இலகுவாக செயற்பட சந்தர்ப்பம் அளிப்பது எம்மை நாமே பலவீனப்படுத்தி கொள்வதற்கு நிகரானது..! இப்படியே கிளைமோர்களை அனுமதிப்பின்.. நாம் எதிர்பார்க்காத பல வேதனைகளை சந்திக்க நேரலாம். பல திறமை மிக்க தளபதிகளைக் கூட எந்த வேளையிலும் இழக்க நேரலாம். மக்களை போராளிகளை கொத்துக் கொத்தாக பலி கொடுக்கவும் நேரலாம்..! இவை போரின் போக்கை எதிரிக்கு சாதகமாகவும் மாற்றி அமைக்கலாம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.