Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச ரீதியில் இலங்கை ஓரங்கட்டப்படும் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-04-30

சர்வதேச ரீதியில் இலங்கை ஓரங்கட்டப்படும் ஆபத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தெளிவான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் விடயங்களைக் குழப்பியடித்துக் கொண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க இவ்வாறு எச்சரித்திருக்கின்றார்.

இலங்கை அரசு எந்தவிதமான ஜனநாயக விதிமுறைகளையும் மதிப்பதில்லை. அது பயங்கரவாதிகளைப் போன்று செயற்படுகின்றது. ஜனநாயக விதிமுறைகளை அரசு மதிப்பதில்லை என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது.

இதேசமயம், தெளிவான வெளிநாட்டுக் கொள்கையின்றி, சர்வதேச உறவு விடயங்களையும் அரசு குழப்பியடித்து வருகின்றது.

இதனால் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு பேரிடர்களைச் சந்திக்கும் அபாயத்துக்குள் ஆபத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்கிறார் ரவி கருணாநாயக்க.

சேற்றுக் குளிக்குள் வீழ்ந்தவன் அதிலிருந்து மீளும் முயற்சியாக சேற்றை மென்மேலும் காலால் அழுத்தி, மேலே எழும்பி வர எத்தனிப்பான். ஆனால் சேற்றை மேலும் மேலும் மிதிக்க, மிதிக்க அவன் சேற்றுக்குள் புதைந்து போவான். ஆக, சேற்றுக்குள் இருந்து மீள அவன் எடுக்கும் முயற்சியே அவனை அதற்குள் மேலும் ஆழமாகப் புதைத்துவிடும்.

அதுபோன்ற நிலையிலேயே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு உள்ளது போலும்.

தன்னுடைய உள்நாட்டு விவகாரங்களைக் கையாளும் முறைமையினாலும் சர்வதேச உறவுகளைத் தீர்மானிக்கும் போக்கினாலும் சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் இக்கட்டு நிலைக்குள் இலங்கை அரசு சிக்கியுள்ளது. இந்த இக்கட்டிலிருந்து மீளும் எண்ணத்துடன் எதிர்பார்ப்புடன் அது மேற்கொள்ளும் சர்வதேச அணுகுமுறைகளும் தந்திரோபாயங்களும் கூட அதனை மேலும் தீவிர சிக்கல்களுக்குள்ளேயே மாட்டி வருகின்றன.

இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் மண்டல நாடு. அது வெளிநாட்டு உதவிகளிலேயே அதிகம் தங்கியுள்ளது.

ஆனால் இறைமையுள்ள நாட்டுக்குரிய ஜனநாயக மாண்புகளைக் கடைப்பிடிக்கத் தவறி, அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசுக் கட்டமைப்பு, அதனால் சர்வதேச சமூகத்தின் பிரதான தரப்புகளினது கடும் கண்டனங்களுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கின்றது.

இப்படி சர்வதேச சமூகத்தின் கடும் விசனத்துக்குள்ளாகியுள்ள அரசு, அந்த அதிருப்தி நிலையையும், அதன் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் பிரதான பாத்திரங்கள் எடுக்கும் பதிலடி நடவடிக்கைகளையும் புறந்தள்ளி உதாசீனப்படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் சேராத இடம் சேர்ந்து சிறுமைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனையே கோடி காட்டுகின்றார் ரவி கருணாநாயக்க எம்.பி.

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் அவர்களது நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் அமைதித் தீர்வு ஒன்றை வழங்க மறுக்கும் மஹிந்தரின் அரசு தமிழர் தரப்பு மீது கொடூரப் போர் ஒன்றை ஏவிவிட்டிருக்கின்றது. அதன் தொடராக மோசமான மனித உரிமை மீறல்களையும், கொடூர அடக்கு முறையையும், அரச பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளும் அவலம் ஈழத் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற தரப்புகளின் எரிச்சலுக்கும் கடுமையான பதில் நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளது இலங்கை.

இலங்கைக்கான உதவிகள், சலுகைகளை வழங்குவதில் இந்நாடுகள் மட்டுப்பாடுகள், கட்டுப்பாடுகளைக் கடுமையாக விதிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலைமையால் எழுந்துள்ள நெருக்கடிகளைச் சந்திப்பதற்காக சீனா,பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுடன் அணி சேர் கின்றது இலங்கை.

இந்த இராஜதந்திர காய் நகர்த்தலின் விளைவே மோசமான ஆபத்தான விபரீதங்களுக்கு வழி செய்யும் என எச்சரிக்கின்றார் ரவி கருணாநாயக்க.

மூன்றாம் மண்டல நாடான இலங்கை தன்னுடைய அபிவிருத்திக்கு நிரந்தரமாக உதவிகளை வழங்கும், சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான நிலைமையைத் தரும் தரப்புகளுடனேயே உறவுகளை விருத்தி செய்ய வேண்டும் என்கிறார் அவர்.

சர்வதேச ரீதியில் சர்ச்சைக்கு உள்ளாகி, அமெரிக்க சார்பு மேற்குலகினால் தனிமைப்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படும் நிலையில் இன்று இருக்கின்றது ஈரான். பேரழிவு தரும் அணு ஆயுத உற்பத்தியில் ஒருதலைப்பட்சமாக ஈரான் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தி, அதன் மீது கடுப்பாக இருக்கின்றது மேற்குலகு. அத்தகைய நாட்டிடமாவது இருந்து உதவிகளைப் பெறலாமே என்ற நப்பாசையில் அதனோடு அதிகம் தோழமை பூண்டு, சர்வதேசத்தின் பிரதான சக்திகளின் கடுப்புக்கு உள்ளாகியிருக்கின்றது இலங்கை.

இச் செயற்போக்கினால் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு, நெருக்கடி ஏற்படுமானால், 1970 அவல யுகத்துக்கு நாடு மீண்டும் தள்ளப்படும் என்றும் எச்சரித்திருக்கின்றார் ரவி கருணாநாயக்க எம்.பி.

1970 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த இதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசின் கீழ், மக்கள் பட்ட கஷ்டம் சொல்லுந்தரமன்று.

சீனா போன்ற நாடுகளை அதிகம் அரவணைத்துக் கொண்டு, ஒரு தெளிவான கொள்கைப் போக்கின்றி அப்போதைய அரசு நடந்துகொண்ட விதம் காரணமாக முழு இலங்கைத் தீவின் மக்களுமே பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

அதையும் விட, மிக மோசமான ஒரு நெருக்கடி நிலையை இந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மோசமான கட்டம் கனிந்து வருவதை உணரமுடிகின்றது.

நாட்டின் பொருளாதாரம் போகின்ற போக்கு விரைவில் நாட்டைப் பற்றிப்பீடிக்கப் போகின்ற நெருக்கடிக்குக் கட்டியம் கூறுகின்றது.

மனித உரிமைகளைப் பேணுதல், ஜனநாயக மாண்புகளை மதித்து நிலைநாட்டுதல், அரச பயங்கரவாதத்தை அடியோடு நிறுத்துதல் போன்றவற்றுக்குச் செயலுருக் கொடுக்க மறுத்து

இவை தொடர்பாக மேற்குலகம் விடுக்கும் எச்சரிக்கைகளைப் புறம் தள்ளி

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்ளாத சர்ச்சைக்குரிய நாடுகளுடன் மட்டும் உறவை மேம்படுத்தும் போக்கில் செயற்பட்டு

தொடர்ந்தும் விட்டேத்தியாக, பொறுப்பின்றி இலங்கை அரசுத் தலைமை நடந்துகொள்ளுமானால், ரவி கருணாநாயக்க எம்.பி. எச்சரிப்பதுபோல சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்படும் ஆபத்தை இலங்கை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாததாக இருக்கும். இதுவே யதார்த்த நிலையுமாகும்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.