Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெலிக்கடை சிறையிலுள்ள புலி உறுப்பினரின் திட்டமிடலிலே பிலியந்தலை குண்டு வெடிப்பு

Featured Replies

பிலியந்தலை பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சிங்களவர் ஒருவா உட்பட மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகளையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் திட்டமிடலின் அடிப்படையிலே குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு 13 சிங்களவர்கள் உதவி வருகின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் :

பஸ் குண்டு வெடிப்பு தொடாபில் சிங்கள இளைஞர்கள் உட்பட மூவர் பிலியந்தலை வீடொன்றில் வைத்து பொலிஸாரல் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனா.

அத்துடன் அவர்களுக்கு வீடு வாடகை;ககு வழங்கிய பெண் ஒருவரும் பொலிஸாரல் கைது செய்யப்பபட்hர்.

மேலும் குறித்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட தூர இயக்கு கருவியும் அவ்வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்பு தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிஙக்ளவர் உள்ளிட்ட இருவர் பிலியந்தைலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலேயே தொழில் புரிந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர் கிளிநொச்சியைச் செர்ந்தவராவர். அவர் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் குண்டு தயாரிப்பு பிரிவின் விஷேட நிபுணராக இருந்துள்ளார் என் விசராரணைகளின் போது தெரியவந்தது.

குண்டு வெடிப்பு இடம் பெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அவர் பிலியந்தலை பிரதேசத்திற்கு குடி வந்துள்ளார். குண்டுவெடிப்பானது பிலியந்தலை பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றிலேயே இடம் பெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வழங்கிய ஆலோசனையை அடுத்தே குறித்த பிரதேசத்தில் இக்குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் குறித்த குண்டானது அரசியல் பிரமுகர் ஒருவரை அல்லது இராணுவத்திற்கு ஆயுத உபகரணங்களை வழங்கிவரும் ஒருவரையோ இலக்கு வைத்தே வெடிக்கச் செய்வதற்காக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆயினும் அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையாதமையினாலேயே பொதுமக்களை இலக்கு வைத்து குறித்த குண்டை வெடிக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் மேற்குறிப்பிட்ட சிறைச்சாலைக் கைதியினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடிப்புடன் தொடர்புடையதான சிங்கள இளைஞர் இரத்தினபுரி பிரதேசத்;தைச் சேர்ந்த ரணசிங்க ஆராச்சிகே புத்திக (21வயது) எனவும் அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மாதம் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் தெரியவந்தள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்த லோரன்ஸ் டேவிட் ராஜ் எனவும் மற்றையவர் தேவேந்திரன் சிங்கராஜா எனவும் தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்ந்தும் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டு வருகின்றனர். அத்;துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய வெலிக்கடை சிறைச்சாலைக் கைதியிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் விடுதலப் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஏனைய 13 சிங்களவர்கள் குறித்தும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

நன்றி வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.