Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிரியைப் பிரிக்கும் தந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-05-15

எதிரியைப் பிரிக்கும் தந்திரம்

அரசியலில் எதிர்த்தரப்பை சகுனி வேலை செய்து, பிளப்பதன் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் ஒருவாறு தக்கவைத்து வந்த ஆட்சித் தரப்பு, இப்போது அந்தப் பிளவுபடுத்தல் தந்திரோபாயத்தின் உச்சமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரமாகட்டும், அல்லது தென்னிலங்கை அரசியலாகட்டும், அனைத்திலுமே எதிர்த்தரப்பைப் பிளப்பதையே ஒரே தந்திரமாகக் கொழும்பு ஆட்சிப் பீடம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றது.

இந்த சாணக்கிய தந்திரத்தைக் கனகச்சிதமாக முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பீடம் தனது அதிகார வலிமையையும் ஆட்சிப் பலத்தையும் லாவகமாகப் பயன்படுத்தி வந்தது. எதிர்த்தரப்பில் பதவிக்காகவும், சொத்து சுகம் போன்ற பிற இன்னோரன்ன போகங்களுக்காகவும் காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கும் புல்லுருவிகளை வளைத்துப் போட்டு இந்தக் கைங்கரியத்தை ஆளும் தரப்பு செவ்வனே ஒப்பேற்றியும் வந்தது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் பழைய ஊழல் கோவைகளைத் தூசு தட்டி மேசையில் தூக்கிப்போட்ட மஹிந்த தரப்பு, அதனோடு சேர்த்து அமைச்சுப் பதவிகள், விசேட சலுகைகள் என்று பல தூண்டில்களையும் மாட்டியது. ஒருபுறம் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணை பற்றிய அச்சுறுத்தல். மறுபுறம் போகங்கள் பற்றிய ஆசை வார்த்தை. இந்த இரு முனைத் தந்திரோபாயத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவே முதலில் பிளந்தது.

அடுத்து மலையகக் கட்சிகள். முதலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் துண்டாகியது. மிஞ்சியிருந்த எச்ச சொச்சமும் பிளந்து விடக்கூடாது என்பதற்காக முழு இ.தொ.காவுமே கூண்டோடு அரசுத் தலைமையிடம் சரணாகதி. மற்றைய மலையகக் கட்சியான மலையக மக்கள் முன்னணியும் சந்தர்ப்பம் எங்கே கிடைக்கும் என்று காத்திருந்தது. கிடைத்த வாய்ப்புடன் பாய்ந்துவிட்டது.

இந்த வரிசையில் முஸ்லிம் கட்சிகளும் விலைபோயின. அமைச்சுப் பதவிகளுக்காக வரிசையாக நடந்த குத்துக் கரணங்களில் முஸ்லிம் தரப்பின் தனித்துவமும் ஏகோபித்த பலமும் சிதறிப்போய் சின்னாபின்னமாகி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்ட நிலைமை தெரிந்ததே.

மஹிந்த ராஜபக்ஷவை அரியணையில் ஏற்றுவதற்கு அரும்பாடுபட்ட ஜே.வி.பி., சிஹல உறுமய போன்ற பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளால் கூட, ஆட்சிப்பீடத்தின் பிளவுபடுத்தும் கத்திக்கு நிகராக நின்று சமாளிக்க முடியவில்லை.

கடைசியில் அந்தக் கட்சிகள் கூட துண்டுபட்டு, பிளவு பட்டுப் போய்விட்டன.

நாடாளுமன்ற அரசியலைத் தீர்மானிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை பற்றிய அட்சரகணிதத்தை, தனது இந்த "பிளப்பு வேலை'த் தத்துவம் மூலம் கையாண்டுவரும் "ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் கம்பனி'க்கு இன்னும் நசிந்து கொடுக்காமல் இருக்கின்ற தரப்புகள் இரண்டுதான். ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மற்றது மனோகணேசன் தலைமையிலான மேலக மக்கள் முன்னணி.

இதேநேரம், இனப்பிரச்சினை தொடர்பான உள்நாட்டு யுத்தத்தைக் கையாள்வதிலும் எதிரித்தரப்பு மீது இதே உத்தியைப் பயன்படுத்த முயல்கிறது ஆட்சித் தலைமை.

புலிகள் அமைப்பிலிருந்து கருணாவைப் பிரித்தனர். பின்னர் கருணா குழுவிலிருந்து, கருணாவை ஒதுக்கி, அக்குழுவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தமது "எடுபிடி'யான பிள்ளையானை அந்த ஒட்டுக்குழுவுக்கு ஏகோபித்த தலைவர் ஆக்கினர்.

இப்போது மீண்டும் கருணா லண்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படப்போகின்றார் என்று தகவல். அவரைக் கிழக்கிலங்கைக்குப் பதிலாக வடக்கில் ஓரிடத்தில் பெரும்பாலும் மன்னாரில் வைத்து, தமது வழிப்படுத்தலில் இயக்குவதற்கு அரசுத் தலைமையால் திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகின்றது. இச் செயற்பாடுகளின் மூலம் பிள்ளையான் அணியிலிருந்து கணிசமானோரைத் திரும்பவும் பிரித்து எடுத்து கருணா பக்கம் சாயவைப்பதன் மூலம் பிள்ளையான் அணியையும் பலவீனமாக்கி, முழுச் செல்லாக்காசு நிலைக்கு அரசுத் தலைமையின் இசைக்கு ஆடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நலிவடைந்த கட்டத்துக்கு கொண்டுவருவதே கொழும்பின் திட்டம் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

அரசியலிலும், யுத்தத்திலும் எதிரிகளைப் பிளவுபடுத்தி, அதன்மூலம் அவர்களைப் பலவீனப்படுத்தித் தான் நினைத்தவற்றை சாதித்து வந்த அரசுத் தலைமை, கடந்த மாகாணசபைத் தேர்தலின் போதும் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தும் வகையில் திட்டமிட்டுச் செயற்பட்டு, அந்தப் பிளவுபடுத்தலினால் ஏற்பட்ட வெப்பத்தில் தான் குளிர்காய்ந்து கொண்டது.

இப்போது அந்தப் பிளவுபடுத்தலே மாகாண முதலமைச்சர் என்ற வடிவில் அரசுத் தலைமைக்குத் தலையிடியாக வந்து இறங்கியிருக்கின்றது.

"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்' என்பார்கள்.

அந்த மாதிரி பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கினால் முஸ்லிம் எம்.பிக்கள் சீறுவர். ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமித்தால் பிள்ளையான் குழுவின் கோபத்துக்கு அரசுத் தலைவர் ஆளாவார்.

எதைச் செய்வது? எதைச் செய்யாமல் விடுவது? அரசுத் தலைமைக்கு இன்று இதுதான் உச்ச நெருக்கடி.

சிறுபான்மையினரான தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதில் சந்திசிரிக்கச் செயற்பட்ட அரசுத் தரப்பினர் இப்போது சிக்கலில் மாட்டுப்பட்டு விட்டனர்.

இப்பிரச்சினையை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் "மஹிந்தர் அன்ட் பிறதர்ஸ்?' விரைவில் நிலைமை தெளிவாகும்.

http://www.uthayan.com/

புலிகள் அமைப்பிலிருந்து கருணாவைப் பிரித்தனர். பின்னர் கருணா குழுவிலிருந்து, கருணாவை ஒதுக்கி, அக்குழுவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தமது "எடுபிடி'யான பிள்ளையானை அந்த ஒட்டுக்குழுவுக்கு ஏகோபித்த தலைவர் ஆக்கினர்.

இப்போது மீண்டும் கருணா லண்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படப்போகின்றார் என்று தகவல். அவரைக் கிழக்கிலங்கைக்குப் பதிலாக வடக்கில் ஓரிடத்தில் பெரும்பாலும் மன்னாரில் வைத்து, தமது வழிப்படுத்தலில் இயக்குவதற்கு அரசுத் தலைமையால் திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகின்றது. இச் செயற்பாடுகளின் மூலம் பிள்ளையான் அணியிலிருந்து கணிசமானோரைத் திரும்பவும் பிரித்து எடுத்து கருணா பக்கம் சாயவைப்பதன் மூலம் பிள்ளையான் அணியையும் பலவீனமாக்கி, முழுச் செல்லாக்காசு நிலைக்கு அரசுத் தலைமையின் இசைக்கு ஆடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நலிவடைந்த கட்டத்துக்கு கொண்டுவருவதே கொழும்பின் திட்டம் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

அரசியலிலும், யுத்தத்திலும் எதிரிகளைப் பிளவுபடுத்தி, அதன்மூலம் அவர்களைப் பலவீனப்படுத்தித் தான் நினைத்தவற்றை சாதித்து வந்த அரசுத் தலைமை

கிழக்கில் பிரதேச வாதம் என்று சொல்லி கிழக்குக்கு சூரியன்( விடியலாம்) கொண்டு சென்றார்கள் இனி வடக்குக்கு சாதி அல்லது கடவுள் மறுப்பு கொள்கையை எதிர்த்து கருணா போராட போகிறாராம் யாரவது இப்பவே சேரலாம்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.