Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் தாயகம் வடகிழக்கென்ற நிலைப்பாட்டை மாற்றுவதே கிழக்கு தேர்தலின் நோக்கம் - இடதுசாரி முன்னணி

Featured Replies

வடக்கு கிழக்கு தமிழர்தாயகப்பிரதேசம் என்ற நிலைப்பாட்டை மாற்றும் பிரதான நோக்கத்துடனே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தி முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று இடது சாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டள்ளது.

மேலும் : கடந்த 26வருடங்களுக்கு முன்னர் பானை, விளக்கு என சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இலங்கை வரலாற்றில் மிக மோசடியான வாக்கெடுப்பாக இது அமைந்திருந்தது. வடமேல் மாகாண சபைத் தேர்தலும் மிக மோசமாக சந்திரிகா அரசால் நடத்தப்பட்டது.

1981 இல் யாழ். மாவட்டத்தில் மாவட்ட சபைத் தேர்தலும் அநியாயங்கள், அட்டூழியங்கள் நிறைந்த தேர்தலாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இவை யாவற்றையும் விட மிக மோசமான அடாவடித்தனமான மோசடிகள் மிக்க தேர்தல் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் மஹிந்த நடத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசு ஆயுதக் குழுக்கள் உதவியுடனும் அரச பயங்கரவாதத்தின் மூலமும் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே இந்த அரசு என்ன விதத்திலாவது மேற்படி தேர்தலில் வெற்றி கொள்ளும் என சகலருக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம். எமது கணிப்பை ஐ.தே.கட்சி, மு.க, ஜேவி.பி. என்பன ஏற்றுக் கொள்வது போன்று அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

நாம் இத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பி இக்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் கடுமையாக ஈடுபட்டன. எதிர்கட்சித் தலைவர் ரணில் உலங்கு வானூர்தி மூலம் தேர்தல் பரப்புரரைகளுக்கு சென்று வந்தார். இதேபோல் முஸ்லிம் காங்., ஜே.வி.பி. ஆகியனவு செயற்பட்டன.

இவர்களின் இத்தகைய பங்களிப்பை மஹிந்த தனக்கு சாதகமாக்கியுள்ளார். அதாவது இந்தத் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பங்கு பற்றலுடன் ஒழுங்காக நடைபெறுகிறது என சர்வதேசத்துக்கு காட்டினார்.

அரசு விரித்த வலையில் தாமாகவே சென்று வீழ்ந்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் மோசடியான தேர்தல், பொய்யான தோதல் என இப்போது அழுது புலம்புகின்றனர்.

உண்மையில் இத்தேர்தல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே நிலைப்பாட்டுடன் பகிஷ்கரித்து இருந்தால் இன்று மஹிந்த இந்த நாட்டு மக்கள் முன்னனும் சர்வதேசத்தின் முன்னும் நிர்வாணம் ஆக்கப்பட்டிருப்பார்.

எனவே இந்தத் தேர்தலில் பங்கு கொண்டவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள், மஹிந்தவின் சதிக்குத் துணை போனவர்கள் என்றே கொள்ளப்பட வேண்டும்.

இடதுசாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சாயம் போன சில கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன. இவர்களும் அரசுக்குத துணை போனவர்கள் என்றே வரலாறு அவர்களைப் பட்டியலிடும்.

மிகவும் பலவீன நிலயில் இருந்த ஜே.வி.பி தற்போதைய சூழ்நிலையில் கூட தனது இனவாத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால, ஜே.வி.பி.க்கு கிடைத்தது ஒரு ஆசனம் மட்டுமே.

மூன்றாவது சக்தி என மார்தட்டிய ஜே.வி.பி இன்று மூலைக்குத் தள்ளபட்டுள்ளது.

மேற்படி தேர்தல் தொடர்பாக பவ்ரலல் அமைப்பின் கருத்துகள் முரண்பட்டதாகக் காணப்படுகின்றது. தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிக்கோ தேர்தலுக்கு சார்பான கருத்துகளைத் தெரிவிக்க பவ்ரல் அமைப்பின் வேறு பிரிவினர் மோசடியான தேர்தல் என்று கருத்து வழங்கியுள்ளனர்.

இதே நேரம், ஆசிய தேர்தல் அமைப்பு, நடைபெற்ற தேர்தல் ஒழுங்கு முறையாக நடைபெற்றது என மஹிந்தவுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய நலன்கள் பிரதிபலிப்பதாக உணரமுடிகிறது.

கிழக்கு மாகாணத்தை தனது கட்டுப்பாடடுக்குள் கொண்டு வந்திருக்கும் மஹிந்த அரசு,அடுத்த கட்ட நகர்வுகளக்கு தயாராகின்றது.

இவர்கள் கிழக்கு உதயம் என்ற வேலைத் திட்டத்தின் மூலம் பாரிய வீதிகள், அனல் மின் நிலையங்கள், உல்லாச விடுதிகள் என்பவற்றை அமைப்பார்கள். இதனால், கிழக்கு மாகாண மக்கள் தமது நிறுவனங்கள், தொழில்களை இழக்கும அபாயம உள்ளது.

கிழக்கின் இயற்கை வளமும் அழிக்கப்படும்.

நியமிக்கப்படவிருக்கும் முதலமைச்சர் கொழும்பில் இருந்தே பணிகளை மேற்கொள்வார். கிழக்கு மாகாண சபை முதலமைச்சருக்கு இரண்டு பணிகள் தான் இருக்கின்றது. ஒன்று அரசுக்கு எதிராகக் கிளர்ந்து கருமங்ளை அடக்குவது. மற்றையது அரசு காட்டும் இடங்களில் கையொப்பம் இடுவது.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.