Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேனில் எழுதிய ”மாற்றங்களுக்கு ஏற்ப நகர வேண்டிய தருணம் இது!”

Featured Replies

மேற்குலகின் கருத்துக்களை புறக்கணித்து வரும் சிறிலங்கா அரசு தற்போது மேற்குலகம் விரும்பாத பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் உதவிகள் எவையுமின்றி தம்மால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதாக சிறிலங்காவின் நகர்வுகள் தற்போது தீவிரம் பெற்று வருகின்றன.

தமிழ்மக்களின் விடுதலைப் போரட்டத்தை நசுக்குவதில் மேற்கு நாடுகள் நிபந்தனை

எதனையும் விதிக்காமல் தாங்கள் கேட்கும் உதவிகள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்பதே சிறிலங்காவின் எதிர்பார்ப்பு. போரினூடாக தமிழ் மக்களின்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பதையும் பேச்சு வார்ததைகள் மூலம் தீhவுகாணப்பட வேண்டும் எனவும் மேற்கு நாடுகள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகளை அழித்தொழித்து விடுவதாகவும் தமிழர் தாயக நிலப்பரப்புக்களை முழுவதுமாகக் கைப்பற்றிவிடுவதாகவும் மகிந்த தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தது.

இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை சிறிலங்காப் படைகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் கைப்பற்றிய போது, வடக்கையும் சிறிலங்காப் படைகள் கைப்பற்றிவிடும் என்கிற நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டது. அனைத்துலக சமூகமும்; போச்சுவார்த்தைகளினூன தீர்வு என்கிற விடயத்தை சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தது, ஆனால் இன்னொரு விடயத்தை அழுத்தமாக வெளிப்படுத்த ஆரம்பத்தது. அது மனித உரிமைகள் தொடர்பானது.

சிறிலங்காவில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் தீவிரமாக மனித உரிமை

மீறல்கள் நடைபெறத்தொடங்கின. கொலைகள், கடத்தல்கள், காணாமலாக்கப்படுதல்

போன்ற தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காத வகையில் நடைபெறத்தொடங்கின. இது மேற்குலகிற்கு சிக்கலை ஏற்படுத்தத்தொடங்கியது.

ஐ.நா. அதிகாரிகள் இலங்கைக்கு அடுத்தடுத்து வருகை தந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிடத்தொடங்கினர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இவற்றைக் கணக்கிலெடுக்கவில்லை.

இப்பிரச்சனைகளை தாங்களே கவனித்துக்கொள்வதாகவும், வேறு எந்த நாடோ, அமைப்போ இதில் தலையிடத்தேவையில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே தெரிவித்தது. அதே வேளையில், உண்மை நிலவரங்களைக்கூறும் ஐ.நா அதிகாரிகளை பயங்கரவாதிகள் என சிறிலங்காவின் அமைச்சர்கள் அதிகாரிகள் முத்திரை குத்தினர்.

அதேவேளையில், நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு

விசாரணைக் குழுக்கள், வெளிநாட்டு சுயாதீன வீசாரணைக் குழுக்கள் என வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளயும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு உலகை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அவ்வாறான விசாரணைக் குழுக்களும் தற்போது செயலிழந்து போயுள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘அக்சன்பெய்ம் என்ற அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஏமாற்று நடவடிக்கையாக இழுபட்டுச் செல்ல, அந்த அமைப்பு சிறிலங்காவில் தங்கள் செயற்பாடுகள் யாவற்றையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் முதன்மை நீதிபதி பகவதி தலைமையிலான அனைத்துலக சுயாதீன விசாரணைக்குழுவினரும் தங்கள் இயலாமையினை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில் அரசதரப்பு மீது பல குற்றச்;சாட்டுக்களையும் கூறியுள்ளனர்.

எல்லா நகர்வுகளையும் அவதானித்து வரும் மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சில தடைகளைப் போட முன்வந்தன. கருத்துக்கள் கண்டனங்கள், அழுத்தங்கள் எனத்தொடர்ந்த இந்த நடவடிக்கைகள் சிறிலங்கா அரசின் மீது சில தடைகளை அறிவிக்கும் நிலை வரை வந்துள்ளது. இது ஒருகோட்பாடு அல்லது கருத்துருவாக்கம் ஊடாக சிறிலங்காவை இறுக்கிப்பிடிப்பதற்கான நடவடிக்கையாகவே உள்ளது.

இந்தக்கோட்பாடு R2P என ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது.

Responsibility to protect என்பது இதன் விரிவாக்கம். ‘பாதுகாப்பதற்கான

பொறுப்புரிமை’ என இதனைத் தமிழ்ப்படுத்தலாம். இக்கருத்து எதனை

வலியுறுத்துகிறதென்றால் எந்தவொரு நாடும் அதன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.

அந்த மக்கள் மீதான மனிதஉரிமை மீறல்களைத் தடுக்கும் விதாமாக சட்டம், ஒழுங்கினை ஏற்படுத்தப்படல் வேண்டும். மக்களைக் கெடுபிடிகளுக்குள்ளாக்கும் சட்டங்களை

முடிவிற்கு கொண்டுவர வேண்டும். இவைகள் மீறப்பட்டு அம்மக்கள் இனஅழிப்பு

நடவடிக்கைகளுக்கோ, மனிதஉரிமைகளுக்கெதிரான வன்முறைகளுக்கோ உட்படுத்தப்படும் போது பாதிக்கப்படும் அம்மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புரிமை அனைத்துலக சமூகத்திற்கு உள்ளது.

ஒரு நாடு அதன் சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறும்

போது அந்த மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு உள்ளதென்பதை R2P அழுத்தமாக முன்வைக்கிறது.

இது முதலில் அமைதியான வழிமுறைகளில் மேற்கொள்ளப்படும். கருத்துக்கள்,

கண்டனங்கள், பின்னர் தடைகளைப்பிரயோகித்தல் என அது அமையும். இவை

பலனளிக்காவிடில் தேவைப்படும் போது பலவந்தமான வழிறைகளைப் பயன்படுத்தியும்

பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என R2P குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதனை வேறு விதமாக நாம் நோக்கலாம். வறுமையான நாடுகள் அல்லது அபிவிருத்தியடையாத நாடுகள் அல்லது, தங்கள் நாடுகளின் அபிவிருத்திக்காகவும், பொருளாதார வளாச்சிக்காகவும் அபிவிருத்தியடைந்த வசதியான நாடுகளின் உதவிகளை நம்பியிருக்கும் நாடுகள் தங்கள் விருப்பங்களுக்கு மாறாக அல்லது தங்கள் வழிநடத்தல்கள், அறிவுறுத்தல்களைப் புறக்கணிக்கின்ற போது அவற்றை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கவும் இவ்வாறான நடைமுறைகள் தற்போது வளாந்ச்சியடைந்த நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டிலுள்ள இன்னொரு சிறூபன்மை இனம் அல்லது சமூகம் பெரும்பான்மை ஆளும் தரப்பினால் ஒடுக்குமுறைக்கள்ளாக்கப்படு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.