Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடற்படையின் செயற்பாட்டை சீர்குலைக்கும் கடற்புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையின் செயற்பாட்டை சீர்குலைக்கும் கடற்புலிகள்

[18 - May - 2008]

விதுரன்

நாட்டில் துறைமுகங்களினதும் கடற்படைத் தளங்களினதும் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கப்பல்கள் மீதான கடற்கரும்புலிகளின் இரு தாக்குதல்களையடுத்தே கடற்படையினர் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் இந்தப் பாதுகாப்பையும் மீறி கடற் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி விடலாமென்ற அச்சமும் அவர்களுக்குள்ளது.

கடந்த வருடம் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து அழித்து மூழ்கடித்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர். இதில் உண்மையில்லாமலில்லை. கடற்படையினரின் இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சவாலாயிருந்த நிலையில் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ந்தும் வந்து கொண்டேயிருக்கிறன்றன.

புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு இனி ஆயுதங்கள் கிடைக்கமாட்டாதென கடற்படையினர் கூறினர். கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கடற் படைத் தளபதி வைஷ் அட்மிரல் வசந்த கரணகொட, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதுடன் புலிகளுக்கான ஆயுத விநியோகமும் தடுக்கப்பட்டுவிட்டது. அவர்களிடமிருக்கும் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் மூன்று மாதங்ககளுக்கே போதுமானது. அதன் பின் அவர்களால் எதுவுமே செய்ய முடியாதென அடித்துக் கூறியிருந்தார்.

எனினும் வடபகுதிக் களமுனையில் தற்போது படையினருக்கேற்படும் இழப்புகளில் 70 வீதமானவை புலிகள் மேற்கொள்ளும் ஷெல் தாக்குதலாலும் மோட்டார் தாக்குதலினாலுமே ஏற்படுவதாக படைத்தரப்பு கூறுகிறது. கடற்படைத் தளபதியின் எதிர்பார்ப்புக்கு மாறாக புலிகள் ஆயுதங்களைத் தொடர்ந்தும் குறைவின்றிப் பெற்று வருவதையே இது காண்பிப்பதுடன் கடந்த சில மாதங்களில் அவர்களது ஆயுதக் கப்பல்கள் பல தடவைகள் வந்து சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இது கடற்படையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், களமுனையில் படையினரின் இழப்புக்களையும் அதிகரிக்கச் செய்கிறது.

இதனால்தான் புலிகளின் கடல் வழி விநியோகத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டுமென படையினர் முனைப்புக்காட்டி வருகின்றனர். இதையடுத்தே மன்னாரில் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி தமிழகத்திலிருந்து கிடைக்கும் விநியோகங்களை தடுக்கவும் முல்லைத் தீவு கரையோரத்தை கைப்பற்றி, சர்வதேச கடற்பரப்பூடான ஆயுத விநியோகத்தை தடுக்கவும் படைத்தரப்பு தீவிர முனைப்பு காட்டுகிறது.

புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க படையினர் முனையும் அதேநேரம், கடற்படையினரின் பலத்தை முடக்க புலிகளும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கடற்படையினரின் அதிகவேக டோரா பீரங்கிப் படகொன்று தாக்கி அழிக்கப்பட்ட அதேநேரம், கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்படையினரின் விநியோகக் கப்பலொன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

வழமையான தாக்குதல்களைப் போலன்றி, நடைபெற்ற இவ்விரு தாக்குதல்களும் கடற்படையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு அந்தக் கடும் மோதலின் நடுவே கடற்கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் நுழைந்து கடற்படைப் படகுகளை தாக்கியழிக்கும் நடைமுறைக்கு மாறாக, கடற்புலிகள் தந்திரமான தாக்குதல்கள் மூலம் கடற்படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடற்புலிகளின் இழப்புகளை வெகுவாகக் குறைத்துள்ள அதேநேரம், இந்தத் தாக்குதல்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் கண்டறிய முடியாது படையினர் தடுமாறியும் வருகின்றனர்.

நாயாறு கடற்பரப்பில் மிகவேகமாக நகர்ந்து கொண்டிருந்த அதிவேக டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டது. திருகோணமலைத் துறைமுகத்தினுள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தரித்து நின்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முதல் தாக்குதல், அதிவேகமாக நகரும் இலக்கு மீதும் அடுத்த தாக்குதல், நகராத இலக்கு மீதும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இவ்விரு தாக்குதல்களும் எப்படி நடைபெற்றதென்பதை கடற்படையினரால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் அல்லது இப்படி நடந்திருக்கலாமென வெறும் ஊகங்களை மட்டுமே அவர்களால் தெரிவிக்க முடிகிறது.

இவ்விரு தாக்குதல்களும், கடற்பரப்பின் மேலாக வந்து மேற்கொள்ளப்பட்டவையல்ல. கடலடித் தாக்குதல்களென்பதால் அவை குறித்து கடற்படையினரால் சரியான தகவல்களை வெளியிட முடியாதுள்ளது. எனினும், கடற்கண்ணி வெடிகள் மூலம் அல்லது மனித வெடி குண்டுகள் மூலம் இந்தக் கப்பல்கள் தாக்குதல்களுக்கிலக்காகியிர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.