Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணையையும் மூடிமறைக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணையையும் மூடிமறைக்க முயற்சி

வீரகேசரி நாளேடு 5/19/2008 9:41:22 AM - மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை மூடிமறைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணைகளையும் மூடிமறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களினதும் அதேவேளை பொலிஸாரினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசியல் கட்சியென்ற ரீதியில் எமது கடப்பாடாகும். இதற்காக மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து தொடர் போராட்டங்களை நடத்த கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரள்வோம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கடந்த சனிக்கிழமை கண்டி ரிவர்டெல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கிழக்கு மகாõண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறவும் இல்லை. ஐ.தே.கட்சி தோல்வியுறவும் இல்லை. இதுதான் உண்மையாகும். ஏனென்றால் அங்கு தேர்தல் இடம்பெறவில்லை. வாக்குக் கொள்ளையே இடம்பெற்றது. எனவே, மக்களால் தெரிவு தெரிவுசெய்யப்பட்டவர்கள் இங்கில்லை. ராஜபக்ஷ சகோதரர்களின் தேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். எதிர்காலத்தில் அரசாங்கம் இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கிலேயே ஐ.தே.கட்சி தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், அரசாங்கம் இன முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது. ஆனால், பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கில் தமிழ், முஸ்லிம் இனவாதம் தலைதூக்கியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சராவதற்கு சிறிது நேரத்திற்கு முன் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவ்விரண்டு பொலிஸ் கான்ஸ்டபில்களும் தேர்தல் வன்முறைகளை தடுக்க பங்களிப்புச் செய்தவர்கள். கோட்டை குண்டு வெடிப்பு சம்பந்தமாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் திருகோணமலையில் பிள்ளையான் அலுவலகத்தில் உயரதிகாரியாக பணியாற்றியவராவார். ஜனா அல்லது விஜயபாலன் ஜினேந்திரன் என்பது அவரது பெயர் என தகவல் வெளியாகியுள்ளது. இது பொலிஸாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பாதுகாப்பமைச்சின் உத்தரவுக்கு இணங்க இவ்விசாரணைகள் குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ் விசாரணைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஏன் அவசரமாகத் தலையிட்டது? பொலிஸாரின் விசாரணைகளுக்கு பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரே இவ்விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அத்தோடு பத்திரிகைகளும் உண்மைகளை வெளியிட தயங்குகின்றன. சிங்கள நாளேடொன்றிலும் அதே சிங்கள வார வெளியீட்டிலும் குண்டு வெடிப்பு தொடர்பாக அரசுக்கு சார்பாகவும் பிள்ளையானுக்கு எதிராகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மகேஸ்வரன் எம்.பி.யின் கொலையை மூடிமறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளைப் போன்று குண்டு வெடிப்பு விசாரணைகளையும் மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

பிள்ளையான் குழுவின் உறுப்பினர் எவ்வாறு பிள்ளையானுக்கு எதிராக குண்டை வெடிக்க வைப்பார் என்பதை எவ்வாறு நம்புவது இதன் மூலம் மறைக்க முயல்வது எதனை? நாட்டில் சட்டத்தையும், சமாதானத்தையும் பாதுகாக்கும் பொலிஸாரை ஏன் இவ்வாறு காட்டிக் கொடுக்கின்றனர். பொலிஸாருக்கு எதிராகச் செயற்படும் பிள்ளையான் குழுவினர் பொலிஸில் இணைத்துக்கொள்ளப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எமது பொலிஸார் இன்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.