Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாராய சாவு 53 ஆக உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாராய சாவு 53 ஆக உயர்வு

.

Monday, 19 May, 2008 12:46 PM

.

பெங்களூர்/ஓசூர்,மே 19: கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குறித்து இறந்தவர் களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 22 பேரும், கோலார் மாவட்டத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

.

கள்ளச்சாராயத்தை காய்ச்சியவர்கள், விற்றவர்கள் என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

கர்நாடகத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 13 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்தம் 53 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கோலார் மாவட்டம் உட்பட கர்நாடகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வந்துள்ளது. அங்கு சட்டசபை தேர்தல்கள் நடந்து வருவதையடுத்து, அரசியல் கட்சிகளின் சார்பில் தொண்டர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் கள்ளச் சாராயம் விநியோகிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கோலார் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 பெண்கள் உட்பட 18 ஆக அதிகரித்துள்ளது. இதில் நரசிபுரா பேலூர், தியாக்கல் கிராமங்களில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.

பெங்களூரை அடுத்த டி.ஜே. ஹள்ளி என்ற இடத்தில் இந்த சாராயத்தை குடித்த 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெங்களூர் பவுரிங் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனை களில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக எல்லையையொட்டிய ஆனைக்கல் பகுதியில் விஷச்சாராயம் குடித்த ஓசூரை அடுத்த பின்ன மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வசித்த கூலி தொழிலாளர்கள் 13 பேர் இறந்துள்ளனர்.

இவர்களையும் சேர்த்து விஷச் சாராயத்திற்கு 53 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.

கர்நாடகத்திலும், தமிழகத்திலும் விஷச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் பலியான சம்பவம் இரு மாநிலங்களிலும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டம் ஆனைக்கல்லை அடுத்துள்ள கல்பள்ளி என்ற இடத்தில் பெருமளவுக்கு சாராயம் காய்ச்சப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமிழகத்தில் எல்லை பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாராயத்தில் போதையை அதிகரிக்க எத்தனால் என்னும் ரசாயனத்தை அதிகமாக சேர்த்ததால் சாராயத்தில் விஷத்தன்மை ஏற்பட்டு உயிரிழப் புக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

விஷச்சாராய சாவுகளை அடுத்து கர்நாடக மாநில டிஜிபி ஸ்ரீகுமார் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது ரெய்டு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஐஜி துரைசாமி நாயக், எஸ்.பி.சீமந்த குமார் சிங், கூடுதல் எஸ்.பி. எல்லப்பா, டிஎஸ்பி மோகன் ரெட்டி, மதுவிலக்கு துணை கமிஷனர் ஜெயராம், எஸ்.பி.மஞ்சுநாத் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய ஆலைகளில் அதிரடி ரெய்டு நடத்தினார்கள்.

இந்த அதிரடி சோதனையில் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்தவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளச்சாராயத்தை மொத்த வியாபாரம் செய்யும் பார்வதியும், அவரது கணவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முனிரத்னம்மா என்ற அங்கன்வாடி பெண் ஊழியரும், நாகரத்னா என்ற கல்லூரி மாணவரும் அடங்குவார்கள். மேலும் கள்ளச்சாராய காய்ச்சும் கும்பலுக்கு தலைவனான பெங்களூரை சேர்ந்த சப்தார் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பெங்களூரில் உள்ள எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஷ சாராயம்: தொடரும் பலிகள்

Wednesday, 21 May, 2008 02:51 PM

.

பெங்களூர், மே 21: விஷசாராயம் அருந்தி பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

.

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் பலர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் உயிரிழந்து வருவதாகவும் பெங்களூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார் மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பலர் விஷசாராயம் அருந்தியதைத் தொடர்ந்து உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் பெங்களூரில் உள்ள அனேகால் பகுதியில் விஷசாராயம் அருந்திய பலர் இறந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர்.

நேற்று மாலை வரையில் 152 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 135 பேரும், கிருஷ்ணகிரியில் 45 பேரும் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் மொத்தம் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் உயிரிழந்து வருவதாக பெங்களூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 90 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விஷசாராய பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநில சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து இன்றும் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதில் ஏராளமான சாராய பாக்கெட்கள் இன்றும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கோலார் மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே விஷசாராயத்தை விற்பனை செய்த மரண வியாபாரி சவுந்தர்ராஜன் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் இன்று தமிழகம் வந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

malaisudar.com

இந்தியா இதுகளை திருத்தாது மாற்ற நாடுகளின் பிரச்சனையை வளர்க்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.