Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இன்றைய தினம் ஒரு சோதனை நாள்

Featured Replies

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் ஐ.நாவில் அங்கத்துவம் பெற்றுள்ள சகல நாடுகளும் இன்று பங்குபற்றுகின்றன.

ஜெனிவாவில் நடைபெறும் இத்தேர்வில் ஆசியப் பிராந் தியத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் நான்கு உறுப்பு நாடுகளின் இடத்துக்கு ஆறு நாடுகள் களத்தில் உள்ளன. பஹ்ரைன், ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, கிழக்கு திமோர் ஆகியவற்றுடன் இலங்கை இப்போட்டியில் களத்தில் உள்ளது.

இலங்கைக்கு இன்றைய தேர்தல் ஒரு முக்கிய சோதனைக் களம் என்று கூறப்பட்டாலும், அதை விடவும் ஐ.நா.மனித உரி மைகள் கவுன்ஸிலுக்குத்தான் இத்தேர்தல் பெரும் சோதனைக் களமாக வந்து அமைந்திருக்கின்றது என்பதே உண்மையாகும்.

இதுவரை காலமும் "ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு' என்று இயங்கி வந்த அமைப்பே சில வருடங்களுக்கு முன்னர், சீர்திருத்த மாற்றங்களோடு "ஐ.நா.மனித உரிமை கள் கவுன்ஸில்' ஆகப் பிறப்பெடுத்தது.

உலகில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதி செய் யும் உயரிய சபையாகவும், மனித உரிமை மீறல்களினால் பாதிக் கப்படுவோருக்காகக் குரல் எழுப்பும் உச்ச மன்றமாகவும் இந்தக் கவுன்ஸில் விளங்கவேண்டும் விளங்கும் என்பதே இது நிறுவப்பட்டதற்கான பிரதான நோக்கம்.

இந்த நோக்கத்தில் வழுவாது அந்த அமைப்பு செயற்படுகின்றதா, செயற்படுமா என்பதைப் பரிசோதிப்பதற்கான ஓர் "அமிலச் சோதனையாக' (ச்ஞிடிஞீ tஞுண்t) இந்தத் தேர்தல் இன் றைய வாக்களிப்பு வந்து அமைந்திருக்கின்றது.

இந்தச் சோதனையை சவாலை இந்தக் கவுன்ஸில் எப்படி எதிர்கொண்டு தாண்டப் போகின்றது என்ற கேள்வியை மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும், இவ்விடயத்தில் ஈடுபாடு கொண்ட சர்வதேசப் பிரமுகர்களும் பகிரங்கமாகவே எழுப்பியிருக்கின்றார்கள்.

மோசமான மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச ரீதி யில் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் இலங்கை இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றது. இலங்கை அரசுப் பிரதி நிதிகள் உலகம் முழுவதும் விஜயம் செய்து தமது நாட்டை யும் இந்தக் கவுன்ஸிலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஓர் அங் கத்துவ நாடாக மீண்டும் தெரிவு செய்யும்படி பல்வேறு தேசங் களையும் வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டு கோரியிருக் கின்றார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கவுன்ஸிலில் அங் கத்துவம் வகித்த இலங்கை, அந்தக் கவுன்ஸிலில் இடம்பெற் றுக்கொண்டே கவுன்ஸிலின் தீர்மானத்துக்கு மசிய மறுத்து, எகிறிக் குதித்து வந்தது என்பது வெளிப்படை.

பலவந்தமாகக் கடத்திக் காணாமற்போவோரின் எண்ணிக்கை வீதம் உலகிலேயே உச்சமாக இருக்கும் நாடு இலங்கை. இந்தக் கொடூரத்துக்கு பொறுப்புக் கூற இலங்கை அரசு தவறிவிட்டது. இப்போக்குக் குறித்து நேரில் பிரசன்னமாகி, விசாரித்து அறிவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் அலுவல கம் ஒன்றை இலங்கையில் அமைத்து செயற்படுத்துவதற்கு அனுமதி தருமாறு இந்தக் கவுன்ஸிலும், ஐ.நா. மனித உரி மைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆபர் அம்மையாரும், ஏனைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பகிரங்க மாக விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு வெளிப்படை யாகவே நிராகரித்து ஒதுக்கி வருகிறது.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் ஒரு நாடு அங்கத் துவம் பெறுவதானால், அந்தக் கவுன்ஸிலின் கௌரவத்தை யும், சிறப்பையும், மகத்துவத்தையும் பேணும் வகையில் மனித உரிமைகள் தொடர்பான உயர் தராதரத்தைப் பேணவேண் டும். மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாகக் கவுன் ஸில் எதிர்பார்க்கும் கருமங்களை உயர்ந்த மட்டத்தில் அது முன்னெடுக்கவும் வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யத் தவறியுள்ள செய்ய மறுத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மிக மோசமான பதிவுகளைக் கொண்ட இலங்கை தேசத்தை இக்கவுன்ஸிலுக்கு மீண்டும் தெரிவு செய்வதன்மூலம் கவுன்ஸிலின் மரி யாதையையும், தரத்தையும், கௌரவத்தையும், மதிப்பையும் உலக நாடுகள் சீர்குலைக்கப்போகின்றனவா? அல்லது ஆசியப் பிராந்தியத்துக்கான தேர்வில் போட்டியிடும் ஆறு நாடுகளில் மிக மோசமான மனித உரிமை மீறல் பதிவுகளைக் கொண்ட இலங்கையை நிராகரித்து, ஒதுக்குவதன் மூலம், கவுன்ஸிலின் தராதரம் பேணப்பட்டு அதன் கௌரவம் உறுதி செய்யப்படுமா?

இத்தகைய கேள்விக்குத்தான் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு உலக தேசங்களின் கூட்டமைப்பான ஐ.நாவின் அங் கத்துவ தேசங்கள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றன.

எனவே, இன்றைய வாக்கெடுப்பு இலங்கைக்குரிய சோதனைக் களம் என்பதிலும் பார்க்க ஐ.நா. மனித உரிமைகள் கவுன் ஸிலின் தராதரத்துக்கான சோதனைக்களம் என்பதே பொருத்தம்.

இன்றைய தேர்வில் தெரிவுசெய்யப்படுவதற்கான அடிப்படைத் தகுதி கூட இலங்கைக்கு இல்லை என்பதைக் கவனத் தில் கொண்டு சரியான தீர்மானத்தை எடுங்கள் என சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று தலைவர்கள் உலக நாடுகளைப் பகிரங்கமாகவே கோரியிருக்கின்றார்கள்.

நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்கப் பேராயர் வண. டெஸ்மண்ட் டூட்டு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஆர்ஜென்ரீனாவின் மனித உரிமை ஆர்வலர் அடொல்போ பேர்ஸ் எஸ்கியூவெல் ஆகியோரும், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகளும் இன்றைய தேர்தலை ஒட்டி உலக நாடுகளுக்கு அப்பட்டமாக வெளிப்படையாக சுட்டிக்காட்டி யிருப்பது இதைத்தான்.

இந்தத் தெரிவில் இலங்கைக்கு சரியான பாடம் புகட்டு வதன் மூலம், மனித உரிமைகளை மோசமாக மீறி, மிதிக்கும் இலங்கையின் போக்கை உலக நாடுகள் பொறுத்துக்கொள்ள மாட்டா சகிக்க மாட்டா என்பதை உணர்த்தும்படி மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் எழுப்பும் குரல் உலக நாடுகளின் காதுகளில் வீழ்ந்ததா, அச் செய்தியை உலக நாடுகள் உள்வாங்கி, சரியான எதிர்விளைவைக் காட்டினவா என்பது இன்றிரவு ஓரளவு தெரிந்துவிடும்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.