Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் சுதந்திரத் தமிழ் மாநிலத்தை அங்கீகரித்து தொடரும் போரை நிறுத்துக

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கென ஒரு மாநிலம் என்றவாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் சர்வதேச சட்டங்களால் அது கௌர வித்து வரவேற்கப்படும். சர்வதேச நடைமுறைகள் மற்றும் மனித உரிமை களுக்கு அமைவாகவும் அது அமையும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெ ரிக்க அரசின் முன்னாள் பிரதி இணை சட்டமா அதிபரான புரூஸ் பெயின்.

"தமிழர்களுக்கான நீதித் தீர்வு' என்ற தலைப்பில் புரூஸ் பெயின் ஊடகங் களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன் றில், தமிழர்களுக்கு ஒரு மாநிலம் என்ற தீர்வினை சர்வதேசம் அங்கீகரிக் குமானால் கொசோவோவில் போன்று சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் முதலியவை இலங்கை யில் சண்டையிடுபவர்களைத் தவறா கப் புரிந்துகொண்டிருப்பதைக் கைவிட் டுச் சுதந்திரமான தமிழர் மாநில அரசு ஒன்றை அங்கீகரிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்யப்படின் அமைதி திரும்பும் மனித உரிமைகள் மீள உயிர்ப் புப் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதி இணை சட்டமா அதிபர் புரூஸ் பெயின் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப் பதாவது:

இலங்கை அரசாங்கத்திற்கும் தமி ழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையி லான போருக்கு உடனடி தீர்வு ஒன்று இருக்கின்றது. தமிழ் மாநிலம் இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும். இம்மாதிரி தீர்வா னது சர்வதேச சட்டத்தினால், சர்வ தேச நடைமுறையினால், மனித உரி மைகளினால் கௌரவித்து வரவேற் கப்படும். மாநிலத் தீர்வு ஒன்றுக்கு சர்வதேசத்தின் ஒருமித்த கருத்து ஏற்படுமானால், போர் ஒரு முடிவுக்கு வரும். கொசோவோவில் இவ்வாறு தான் நடந்தது.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து அரசு கொடுமை

1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து சிங் களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை அரசினால் இலங் கைத் தமிழர்கள், கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமற் போகச் செய்யப்பட்டும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும், இடம்பெயர் வுக்குள்ளாக்கப்பட்டும் மற்றும் விசா ரணையின்றித் தடுத்துவைக்கப்பட் டும் கொடுமைப்படுத்தப்பட்டு வந் துள்ளார்கள்.

இம்மாதிரி இருள்மயமான சூழ் நிலைகளால் சூழப்படும்போது மாநில அந்தஸ்துக்கான (Statehood) உரிமை அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் துஷ்பிரயோகங்களும் ஆக்கிரமிப்பு களும் நீண்டகாலமாக தங்குதடை யின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் போது முழுமையான அடக்குமுறைக் குள்ளாகும் மக்கள் ஒரு நிலைப்பாட் டுக்குள் தங்களைக் குறுக்கிக்கொள்ள வேண்டியவர்களாகின்றார்கள். அவ் வாறான அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து தமது எதிர்கால பாதுகாப்புக் குப் புதிய தற்காப்புகளை ஏற்படுத்திக் கொள்வது அவர்களின் உரிமையும் கடமையுமாகும்.

குவெபெக் (Quebec) பிரச்சினை யில் தீர்ப்பு வழங்கும்போது கனேடிய உயர் நீதிமன்றம் இம்மாதிரியான மாநில அந்தஸ்தினை நீதியானதென அங்கீகரித்துள்ளது.

பிரஜாவுரிமைச் சட்டம்

1948ஆம் ஆண்டு இலங்கை பிரஜாவுரிமை சட்டம் கொண்டுவரப் பட்டதிலிருந்து இலங்கைத் தமிழர் களை இம்சைப்படுத்துவது ஆரம்பிக் கப்பட்டது. முழு தமிழ் சமுதாயத்தின தும் சுமார் 50% வீதமானவர்களான 10 லட்சம் மக்களுக்கு இச்சட்டத் தின் மூலம் பிரஜாவுரிமை இல்லாமல் செய்யப்பட்டது. அவர்கள் வெறும் அரசியல் அடிமைக ளாக்கப்பட் டார்கள்.

1935 செப்டெம் பர் 15ஆம் திகதிய 6 அடோல்ப் ஹிட்லரின் நூரெம்பர்க் சட்டங்களால் இலங்கை பிரஜாவுரி மைச் சட்டம் உந்துதல் பெற்றிருந்தது. அந்த சட்டத்தின்படி யூதன் ஒருவன் பிரஜையாக இருக்கமுடியாது. வாக்க ளிக்கவும் உரிமை இல்லை.

இலங்கை அரசு மிக தந்திரமாக இதை செயற்படுத்தியது. ஹிட்லரின் ஆட்சி அழிந்து மூன்று ஆண்டுகளின் பின்னர், பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை கொண்டுவருவது; அதுவும் ஒரு தமிழர் இலங்கைப் பிரஜையாக இருக்கமுடியாது என்று கூறுவது சர்வ தேச சமூகத்தை ஆத்திரமூட்டச் செய்வ தாய் இருக்கும் என்பதை சிங்களவர் கள் அறிந்திருந்தார்கள். அதனால் சாதுர்யமான மொழியைப் பயன்படுத் தினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமானது ஒருவர் எங்கே பிறந்தார் என்பதையல்ல ஒருவரின் மூதாதை யர் எங்கே பிறந்தார் என்பதையே பிர தானமாகக் குறிப்பிடுவதாய் இருந் தது. (நேர்மாறாக கனடாவில் பிறக் கும் எவரும் கனேடிய பிரஜையாவார்) இதன் விளைவு என்னவென்றால் 10 லட்சம் இந்திய வம்சாவளி மக்க ளுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட் டது. வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல இனிப் பிறக்கப் போகிறவர் களுக்கும் அதேநிலைதான். இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப் பட்டது.

அடுத்து வந்தது தமிழர் ஒழிப்பு

அடுத்து வந்தது தமிழர் இன அழிப்பு. இலங்கை அரசாங்கத்தின் தமிழர் இம்சைக்குள்ளாக்கும் போக் கின் பிரகாரம் தமிழர்களை முழுமை யாக அல்லது பகுதியாக அழித்தொழிக் கும் நோக்கத்துடனான கைங்கரியங் கள் ஆரம்பமாகின. அரசகரும மொழி என்ற நிலையிலிருந்து தமிழ் அகற் றப்பட்டது. தொழில்களில் தமிழர்கள் சிங்களவர்களுக்குக் கீழ்படிவாகப் பணியாற்றும்படி செய்யப்பட்டனர். கல்வி, வீடமைப்பு மற்றும் கட்டமைப் புகளிலும் இதேநிலை உருவாக்கப் பட்டது.

தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப் படுவதைத் தடுக்கும் அரசமைப்பு விதிகளை இல்லாதொழிக்கும் விதத் தில் தமிழர்களின் பங்களிப்பு இல்லா மலே அரசமைப்பு திருத்தி எழுதப் பட்டது.

மகாத்மா காந்தியின் வழியில் தமி ழர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களுக்கு எதிராக இலங்கை அர சாங்கம் இனக் குழப்பங்களை உரு வாக்கிவிட்டது. இதில் குறிப்பிடக் கூடியது 1983ஆம் ஆண்டு நடை பெற்ற கலவரங்களாகும். ஆயுதம் தரித்த சிங்கள இனவன்முறையாளர் களுக்கு இலங்கை ஜனாதிபதி ஜய வர்தன தமிழர்களின் வீடு மற்றும் தொழில் நிலையங்கள் தொடர்பான வாக்காளர் பட்டியல்களை வழங்கியி ருந்தார். தமிழர்களை அவர்களின் வீடுகள், காரியாலயங்கள் மற்றும் வேலைத் தளங்களில் வைத்து அடித் துக் கொல்லும்படி சிங்களக் குண்டர் களை அவர் தூண்டிவிட்டார். மூன்று நாள்களில் தமிழர்களின் சடலங்கள் 5,000 ஆக அதிகரித்திருந்தது. இக் கொலையாளிகள் எவர் மீதும் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட எவருக்குமே ஒரு சதமேனும் இழப்பீடு வழங்கப்பட வில்லை.

தமிழர்கள்

சட்டத்துக்கு வெளியில்

1979ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கமானது தமிழ் குடிமக்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் சட்டத்துக்கு வெளியிலேயே வைத்திருக்கிறது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு மனிதராவது சட்ட விரோத செயலில் சம்பந்தப்பட்டிருக் கிறார் என பாதுகாப்பு அமைச்சர் சந் தேகப்படுவாரானால் எதுவித விசார ணையும் இன்றி அவரை 18 மாதங் கள் காவலில் வைக்கமுடியும்.

இந்தத் தடுப்புக்காவல் உத்தர வுக்கு எதிராக வேறு எந்த இடத்திலும் கேள்வி எழுப்பமுடியாது. மேலும் சட்ட விரோத நடவடிக்கை என்பது தமிழர் கள் தாம் முறைகேடாக நடத்தப்படு வதை எதிர்த்து சாத்வீகமாகப் போரா டினாலும் சிங்களவர்களைக் கோப முறச் செய்வதாய் இருக்கலாகாது என்ற வகையில் வரையறுக்கப்பட் டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால் தமிழர்களின் பேச்சு உரிமையானது குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. 1983 ஆண்டின் அவசரகாலச் சட்டமானது இராணுவம் தமிழர்களைச் சுடலாம், கொலை செய்யலாம், பிரேத பரி சோதனை மற்றும் நீதி விசாரணை யின்றி புதைத்துவிடலாம். இரகசிய கொலை படைகள் இயங்குவதை இது சட்டபூர்வமாக்கின்றது.

அமெரிக்க குடியேற்றவாதிகளின் துன்பங்களும் பிரிட்டிஷ் கொடுங் கோலின் கீழ் ஐரிஷ் மக்களும் பட்ட துன்பங்கள் அவர்களுக்கு தனி மாநி லங்களுக்குரிய உரிமையைப் பெற் றுத் தந்துள்ளன.

இந்தோனேஷியாவில் கிழக்கு திமோருக்கு டிட்டோ, சேர்பியாவின் கீழ் கொசோவோ, எதியோப்பியாவின் கீழ் எரிட்டீரியா மாநிலங்கள் உருவாகி யுள்ளன. இந்த மக்கள் எல்லாரையும் விட மிக மோசமாக தமிழர்கள் இலங்கை அரசாங்கங்களின் கீழ் துன் பப்பட்டுள்ளார்கள் துன்பப்பட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

இலங்கையில் போரிடுபவர்கள் தொடர்பாக அமெரிக்கா, கனடா மற் றும் ஐரோப்பிய ஒன்றியம் தவறு செய்து விடக் கூடாது. சுதந்திரமான தமிழ் மாநிலத்தை அங்கீகரிக்க வேண் டும். அவ்வாறாயின் அமைதி திரும்பும். மனித உரிமை மீளவும் உயிர் பெறும்.

– இவ்வாறு புரூஸ் பெயின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

uthayan

இதை அவரே சொன்னாரா?

நம்பமுடியவில்லை... தொடந்து முயற்ச்சித்தால் முடியாததெண்டு எதுகுமில்லை... தொடந்து முயற்ச்சிபோம்.

கீழ உள்ள லிங்குக்கு போய் நீங்களும் ஒரு பெட்டிசனை போடுங்கோ:

http://www.disappearances.org/

திரு புரூஸ் பெயினின் மிகச்சிறந்த விளக்கத்துடன் வந்துள்ளது..

தமிழர் விடுதலைப்போரட்டத்திற்காண சரியான விளக்கத்தை விபரங்களுடன் வெளியிட்டுள்ளார்..

இவாரது இவ்வறிக்கை பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிக தேவையானது.

இதன் ஆங்கில அறிக்கையை எல்லா இணையங்களிலும் நிரந்தரமாக வைத்தால்

வேறு நாட்டுமக்களுக்கு இலகுவாக புரியும் உதாரணமாக தமிழ்னெட், தமிழ்கார்டியன்

போண்றவற்றில் இருந்தால் வெளி நாட்டு மக்களுக்கு இணைய விலாசம் மட்ட் உம்

கொடுத்தால் இலகுவாக வாசித்து புரிந்து கொள்வார்கள்....

அடுத்து நல்ல செய்தி இலங்கை மனிதவுரிமை ஐ நா வின் மனிதவுரிமை அங்கத்துவ பதவி இழந்துவிட்டது..... இது எமக்கு ஒரு நல்ல அறிகுறி...

தமிழர் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி......

தொடரட்டும் உற்சாகத்துடன் எமது பிரச்சாரங்கள்....

ஒன்று கூடவையுங்கள் எமது நிலைமையினை அறிந்த வெளினாட்டு அமைப்புகளை,

முக்கிய பிரமுகர்களை அவர்கள் மூலம் ஒவ்வொரு நாடக பிரச்சாரங்களையும், எமக்குள்ள

தடைகளையும் அகற்றி எமது விடுதலை நியாயங்களை உலகெங்கும் அறியப்பண்ணி

எமக்கு சர்வ தேச அங்கீகாரத்தை பெற பாடுபடுங்கள்....வெற்றி நிச்சயம்....

களத்தில் இருப்பவர்கள் கள நிலைமைக்கு ஏற்ப செயல்படுவார்கள்...

புலத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் பிரச்சார இயந்திரங்களாக மாறுங்கள்.... நாளை என்று இல்லாமல் இன்றே..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.