Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச கண்காணிப்பாளருக்கு இடமளிக்கப் போவதில்லை. போகொல்லாகம

Featured Replies

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை இழக்கபட்ட நிலையில் கடுமையாக ஆத்திரமடைந்திருக்கும் இலங்கை அரசு மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்கு சர்வதேச அவதானிகளை அனுமதிப்பதற்கு இடமளிக்கப் போவதிலையென நேற்று வியாழன் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு சாhபான சர்வதேச உரிமைகள் குழுக்களினால் மேற்கொள்ளபட்ட அரசிற்கெதிரான சதியே இதுவென வெளிவிவகார அமைச்சு ரோகித்த நேற்று குற்றம் சுமத்தினார்.

எமது நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். எம்மை கண்காணிக்க வெளிநாட்டு அமைப்பின் தேவை இருப்பதாக எமக்கு தெரியவில்லை. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கண்காணிக்க தேவையான சட்டங்களும் நடைமுறைகளும் எம்மிடம் உள்ளன. என்று ரோகித கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான வாக்கெடுப்பானது எமக்கு தோல்வியோ பின்னடைவோ அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், 101 நாடுகள் இலங்கை அரசிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்தாகவும் அவர் கூறியிருந்தார்.

அதே சமயம் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதிப்படுத்தும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்ததாகவும் அவை ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான வாக்குகளை வாங்கியிருக்க கூடுமெனவும் ரோகித்த கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்.

சாவதேச உதவி தடைப்படும் ஆபத்து - சிவில், சமூகப் பிரதிநிதிகள் எச்சரிக்கை

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு புதிய உறுப்பினாகளைத தெரிவு செய்வதற்கான தோல்வி எதிர்பார்த்ததொரு விடயமே என்று தெரிவித்திருக்கும் சிவில், சமூப் பிரதிநிதிகள் இதன் மூலம் சர்வதேச உதவிகள் தடைப்படும் அபாயமிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையில் நேற்று முன் தினம் நடை பெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு உறுப்பினரை தெரிவு செய்யும் வாக்களிப்பில் கடும் போட்டியாளரான பாகிஸ்தானிடம் இலங்கை 13 வாக்குகளினால் தோல்வியுற்றது.

இலங்கை தோல்வியடைந்தமைக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு சிவில், சமூகப் பிரதிநிதிகளினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் பங்களிப்பும் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இது பற்றி கூறுகையில் :

'மனித உரிமை பேரவைக்கு இலங்கை தெரிவு செய்யப்படக் கூடாது என்பதில் சில பலம் வாய்ந்த அமைப்புகளும் பிரமுகர்களும் உறுதியாக செயற்பட்டனர். இந்நிலையில், இத் தோல்வியானது புதுமையானதல்ல.

இதன் மூலம் மனித உரிமைகளில் மேலும் முன்னேற்றம் அடைய இலங்கை பங்காற்ற வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. மனித உரிமைகள் மீறப்படுகின்றமையே இலங்கையின் வெளியேற்றத்திற்குக் காரணாக அமைந்துள்ளது.

இந்தத் தோல்வி இலங்கைக்கு உடனடியாக பாதிப்புகள் ஏற்படுத்தாத போதும் பாதிப்புகள் தவிர்க்க முடியாதவையாகும்.

குறிப்பாக சர்வதேச சமூகத்தின் உதவிகள் தடைப்படுவதுடன், அவர்களின் ஒத்துழைப்புகள் மட்டுப்படுத்தப்படும் நிலைமை உருவாகும்": என்றார்.

வாக்களிப்பில் இலங்கை வெற்றி பெறாமைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். வெற்றி பெற்றிருந்தால் இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்கியிருக்கின்றதென்ற அபிப்பிராயம் சர்வதேசத்தில் தோன்றியிருக்கும்.

மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கை வெளியேற்றபட்மையையிட்டு இலங்கையன் என்ற வகையில் நான் கவலைப்பட்டாலும் வெளியேற்றப்படுகின்றமைக்கான சூழ்நிலை நிலவியதென்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

இச்சம்பவத்தினை சிறந்த அனுபவமாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் மனித உரிமைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

இது பற்றி மனித உரிமை ஆர்வலர் இமல்கா பெர்னாண்டோ கூறுகையில் :

'இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகள் குறித்து அண்மைய காலங்களில் சர்வதேசம் அதிக அக்கறை செலுத்தியிருந்தது. இதற்கு சிவில், சமூகப் பிரதிநிதிகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. அந்த வகையில், இது மனித உரிமை ஆர்வலர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம். இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதும் இச்சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்தி இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும் நோக்கில் சர்வதேச சமூகம் மனித உரிமைப் பேரவையிலிருந்து இலங்கையை வெளியேற்றியுள்ளது. இனிமேலாவது ஆட்கடத்தல், காணாமல் போகுதல், அநாவசிய கைது, காரணமின்றித் தடுத்து வைத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளியிடல் வேண்டுமென்பதே எமது எதிhபாhப்பாகும்.' என்றார்.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.