Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிரிக்கு சிம்ம சொப்பனமாகத திகழ்ந்தார் பிரிகேடியர் பால்ராஜ்: ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

தமிழீழ போராட்ட வரலாற்றில் களமுனைகளில் எதிரிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து பெரும் வெற்றித் தடங்கள் பதித்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் உண்டு பண்ணியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "பிரிகேடியர் பால்ராஜ் போரியல் அனுபவங்கள் நிறைந்த முதுநிலை தளபதி. அவர் வடபோர் முனைகளில் பல களங்கள் கண்டு எதிரிக்கு படு தோல்விகளை ஏற்படுத்தி பெரும் இழப்பை உண்டுபண்ணியவர். அனேகமாக அவர் காணாத களமுனைகளோ பெரும் சண்டைகளோ கிடையாது என்றே கூறவேண்டும். அவ்வாறானதொரு ஆற்றலும் வீரமும் கொண்ட ஒரு தளபதியை நாம் இன்று இழந்திருக்கின்றாம். அவர் இரவு பகல் பாராது ஓவ்வு இன்றி எமது போராட்டத்திற்காக உழைத்திருந்தார். அதனால் அவரின் சுகவீனத்தைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை. இதனால் அவர் இன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் இலட்சியம் என்றும் அழியாது. அவர் மூட்டிய இலட்சியத்தீ இன்னும் கொழுந்துவிட்டு எரியும் அதில் எதிரிகள் பொசுங்குவார்கள் என்பது திண்ணம். .

தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த இன அழிப்பைக் கண்டு ஆவேசம் கொண்ட அவர் தமிழ் மக்களின் விடிவுக்கு விடுதலைப்புலிகளினால்தான் வழி கிடைக்கும் என்பதை உணர்ந்து 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார்;. ஒரு போராளியாக, இணைந்த அவரின் திறமையையும் ஆழுமையையும் நன்கு கண்டு கொண்ட தேசியத் தலைவர் தனது வழிகாட்டிலின் மூலம் பெரும் தளபதியாக மாற்றியிருந்தார்.

பிரிகேடியர் பால்ராஜ் சாவடையும் வரை களத்தில் நின்று பெரும் சமர் புரிந்தவர். தான் நோய்வாய்ப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாது எதிரிக்கு எதிராகப் போராடியவர். சிறிது காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றாலும் தனது சிந்தனை முழுதும் போராட்டக் களத்தை நோக்கியதாகவே இருந்தது. அண்மைக் காலமாக மணலாறு மற்றும் மன்னார் போர்க்களங்களில் எதிரியைத் திணறடிக்கும் சமர்களைப் புரிந்துஇ எதிரிகளுக்குத் தண்ணீர் காட்டியவர். இவ்வாறான பெரும் தளபதியை இன்று நாம் இயற்கையின் நிமிர்த்தம் இழந்துள்ளோம்.

நான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை நன்கு அறிந்திருந்தேன். சந்தித்து உரையாடியும் உள்ளேன். அவர் பெரும் தளபதி மாத்திரமல்ல மக்கள் சேவகன் என்பதையும் கண்டிருந்தேன். சுனாமி பேரலையினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைக்கு நேரடியாக வந்து மக்கள் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தவேளை நானும் அவருடன் அப்பகுதியில் இணைந்து வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவர் கிழக்கு மக்களையும் நன்கு நேசித்தவர் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.

அன்னாரின் இழப்பு எமது மக்களுக்கு பெரும் இழப்பாகும். இதனால் மக்கள் பெரும் துயரடைந்துள்ளனர். ஏனினும் அவரின் இலட்சியம் என்றும் இறக்கப்போவதில்லை. அதற்காக நாம் அனைவரும் அவர் நேசித்த இலட்சியத்தை வென்றெடுக்க எமது தேசியத் தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி அப்பாதையில் பயணத்தைத் தொடர வேண்டும். அதுவே அன்னாருக்கு செலுத்தும் பெரும் அஞ்சலியாகும்." என்று அந்த அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நன்றி : சுவிஸ் முரசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.