Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிக்குள் பொதுமக்கள் இடம்பெயரும் சூழ்நிலை!

Featured Replies

தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வன்னியில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்வது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான நிலையியல் குழு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துப்பொருட்களை விநியோகிப்பதை உடனடியாக ஆரம்பிக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தனது வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ள அக் குழு மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்ந்தும் பதற்றம் மிகுந்ததாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி ஆட்லறித்தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

இராணுவத் தொடரணிகள் செல்லும்போது யாழ். குடாநாட்டில் வீதிகள் இடையிடையே மூடப்படுகின்றமை தொடர்கின்றது. கையடக்கத் தொலைபேசிகள் அவ்வப்போது இயங்குகின்றன. சுற்றிவளைப்புத் தேடுதல் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இக்காலப்பகுதியில் இடம்பெயர்வுகள் எதுவும் இடம்பெறாத அதேவேளை, அல்லைப்பிட்டியில் மீளக் குடியேறியவர்கள் தமது முழுமையான வாழ்வாதார நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பொதுவான நிலைமை தொடர்ந்தும் பதற்றமானதாகக் காணப்படுகிறது. நாளாந்த மோதல்களும் மோட்டார் ஆட்லறித் தாக்குதல்களும் இடம்பெறுகின்றன.

மாந்தை கிழக்கில் உள்ள நெடுங்கண்டல், பனங்காமம் பகுதிகளில் மோதல்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மல்லாவியை நோக்கியும், வன்னியின் ஏனைய பகுதிகளை நோக்கியும் இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். மாந்தை மேற்குப் பகுதியைச் சேர்ந்த மக்களும் அருகிலுள்ள கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

நெடுங்கண்டல், பனங்காமம் பகுதி மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

மூன்று முறிப்பு, பனங்காமம், செல்வபுரம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1,600 குடும்பங்கள் இடம்பெயர்ந்து அருகிலுள்ள கிராமங்களில் தங்கியுள்ளன என அரச அதிபர் தெரிவிக்கின்றார்.

துணுக்காய் உதவி அரசஅதிபர் பிரிவில் ஏற்கனவே 545 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளன.

முல்லைத்தீவின் தேறாங்கண்டல், ஐயன்குளம் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள இரு நலன்புரி நிலையங்களில் 140 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மாந்தை மேற்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 200 குடும்பங்கள் பூநகரியில் குடியமர்த்தப்பட்டுள்ளன.

புதிதாக இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும்இ குழுக்களை அனுப்பியுள்ளன. இதுகுறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டம் இடம்பெற்றது.

அவசர மருந்துப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட பெரும் பாதிப்பில் சுகாதாரப் பிரிவு சிக்கியுள்ளது.

உடனடியாக விநியோகங்கள் ஆரம்பிக்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம்.

வவுனியா, மன்னார் பகுதிகளிலும் பொதுவான நிலைமை பதற்றம் மிகுந்ததாகவே காணப்படுகின்றது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்றது.

பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் காணப்படுகின்றனர். சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியமடுவைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்வு தொடர்கின்றது. பாலியாறுஇ கணேசபுரம் பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

மன்னாரில் அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

திருகோணமலையில் துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மீன்பிடித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 11,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.