Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புகையிரத கட்டணமும் ஜூன் முதல் அதிகரிப்பு,இ.போ.ச. பஸ் கட்டணமும் 17 வீதத்தால் உயர்வு

Featured Replies

மாதங்களுக்குள் தேசிய போக்குவரத்து கொள்கைஎன்கிறார் அமைச்சர் அழகபெரும பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புகையிரதக் கட்டணங்களும் அதிகரிக்கப்படும். ஆனால், இந்த அதிகரிப்பு பஸ் கட்டணங்களை விட குறைவானதாகவே இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் தனியார் பஸ் போக்குவரத்துத் துறையினருக்கு 50 வீதம் எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு மக்கள் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் நிரந்தரமாக தேசிய போக்குவரத்துக் கொள்கையினை வகுக்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பாக இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: எரிபொருள் விலைஅதிகரிப்பு அதனால் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள்மீதான சுமையைக் குறைப்பதற்கு மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்படும். அரசாங்கம் தனியார் போக்குவரத்துத் துறையினருக்கு இதுவரையில் 30 வீதமான எரிபொருள் மானியமே வழங்கி வருகிறது. இதனை 20 வீதத்தால் அதிகரித்து மொத்தமாக 50 வீத மானியம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான திட்டத்தை நிதியமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு தயாரித்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் தேசிய போக்குவரத்துக் கொள்கை தயாரிக்கப்பட்டு அதன் மூலம் மக்களின் பயணக் கட்டண சுமையைத் தீர்க்க முடியும். ஆனால், உலகச் சந்தையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். வரலாற்றில் உலகச் சந்தையில் விலைகள் உயரும் போதும் இங்கும் விலையேற்றமே மேற்கொள்ளப்படும். ஆனால், ஜனாதிபதி அதற்கு மாறாக மாற்றுத் திட்டங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்துகிறார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையில் புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு பொதுச்சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகையிரத சேவையை சிறந்த முறையில் முன்னெடுக்க எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் கட்டணங்கள் உயர்த்தப்படும். ஆனால், பஸ் கட்டண உயர்வை விட குறைவானதாகவே இருக்கும். டீசல் அதிக ரிப்பை மட்டும் கருத்தில் கொண்டு தனியார் பஸ்போக்குவரத்துக் கட்டணங்களை 27 வீதம் உயர்த்தவில்லை. அவர்களது இதரல செலவுகளையும் கருத்தில் கொண்டே இதுமேற்கொள்ளப்பட்டது. இ.போ.ச கட்டணம் 17 வீதத்தால் உயர்வு அதேவேளை, இ.போ.ச பஸ் கட்டணங்கள் 17 வீதமே உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் 3,10,000 முச்சக்கர வண்டிகள் உள்ளன. இவையும் பொதுச் சேவை போக்குவரத்தையே நடத்துகின்றன. பெற்றோல் விலையுயர்வால் இத்துறையினரும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.எனவே, முச்சக்கர வண்டிகள் அனைத்திலும் காஸ் சிலிண்டர்களைப் பொருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு முச்சக்கர வண்டிக்கு ரூபா 30,000 செலவாகும். இதனை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.

கலாநிதி பீ.பி. ஜயசுந்தர

இலங்கையின் எரிபொருட்களின் விலை அதிகரித்த போதும் அதன் பாவனையில் எதுவிதமான குறைவும் ஏற்படவில்லை. மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், எரிபொருளையே பாவிக்கின்றோம். இதுவும் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்சாரக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த நிதிய அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பீ. ஜயசுந்தர தெரிவித்தார். கெமுனு விஜேரத்ன

மாகாண சபை போக்குவரத்துத் திணைக்களத்தின் கீழுள்ள எமது தனியார் பஸ் சேவையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றால் 5 வீத கட்டணக் குறைப்பை உடனடியாக முன்னெடுப்போம். மாகாண போக்குவரத்துத் திணைக்களத்தினாலேயே எமது சேவை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தின் மத்தியிலேயே எமது சேவைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், எமது பிரச்சினைகளை போக்குவரத்து அமைச்சரோடு பேசி சுமுகமான முடிவுகளுக்கு வந்துள்ளோம் என்று இங்கு கருத்துத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

வீரகேசரி நாளேடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.