Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கச்சதீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது நாளைவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது நாளைவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

வீரகேசரி இணையம் 5/28/2008 5:26:23 PM - கச்சதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்து பொலிசாரிடம் கையளித்ததையடுத்து, அவர்கள் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி ரீ.ஜே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இராமேஸ்வரம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த 23 மீனவர்களும் உடனடியாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை

தமிழகம் இராமநாதபுரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது இந்த மாதம் முதலாம் திகதி கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 19 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் மன்னார் மாவட்ட நீதவான் ரீ,ஜே.பிரபாகரனால் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை தலைமன்னார் கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களது இரண்டு படகுகளுடன் விடுதலை செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் பிரபாகரன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இவர்களை மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் தடுப்பு முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அவர;களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைமன்னார் பொலிசாருக்கு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

- வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

23 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு,படகில் புதிய வகை போதைப்பொருள் கடத்திவரப்பட்டதாக சந்தேகம்

கச்சதீவு கடற்பரப்பில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு ஒரு நாள் விளக்கமறியலில்; வைக்கப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மீனவர்கள் பயணம் செய்த 4 படகுகளில் ஒரு படகின் கீழ்ப்பகுதியில் ஒட்டப்பட்ட நி;லையில் கண்டு பிடிக்கப்பட்ட பசைத்தன்மையுடைய பொருள் புதியரக ஓப்பியம் வகையிலான போதைப்பொருளாக இருக்கலாமோ என பொலிசார் சந்தேகம் கொண்ட பொலிசார் இப்பொருளை அரச ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்க அனுமதி கோரியதையடுத்து, நீதிமன்றம் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த மீனவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

- வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.