Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு சபை கவலை

Featured Replies

இலங்கை உட்பட பல நாடுகளில் நடைபெற்று வரும் போரில் மக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தனது கவலையை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள், ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன என்று சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமும், விடுதலைப்புலிகளுமே பொறுப்பு எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் 2007 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை நேற்று வாஷிங்டனில் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிவிடும் சூழல் காணப்படுகின்றமை. இலங்கையின் மனித உரிமை பாதுகாப்பில் காணப்படுகின்ற பாரதூரமான குறைபாடாகும். மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு மிகவும் அவசியமான சாட்சிகளை பாதுகாக்கும் பொறி முறையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியல் நியமனங்கள் காரணமாக அதனது நம்பகத்தன்மையை இழந்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை பேணப்படுவதோடு, அதற்கு போதுமான வளங்கள் வழங்கப்பட வேண்டும்.

வடக்கில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக சிவிலியன்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இதேவேளை, விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களால் தொடர்ந்தும் சிறுவர்கள் பலவந்தமாக படையணிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு, பொலிஸாரினால் சட்டவிரோதமான முறையில் மக்கள் கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலானவர்கள் தமிழ் சிவிலியன்களாவர்.

இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக மீறப்படுவதோடு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் செயற்பட வேண்டியுள்ளது.

ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், தாக்குதலுக்குள்ளாதல், அச்சுறுத்தலுக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இதில் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. முறைகேடான இராணுவ முன்னநகர்வுகளின் காரணமாக பல சிவிலியன்களின் உயிர்கள் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளக இடம்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். வட பகுதிக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டதன் காரணமாக 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதோ, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதோ மிகவும் அரிதாகவே உள்ளது.

லூயிஸ் ஆர்பர் உள்ளிட்ட ஐ.நா.வின் மனித உரிமை தொடர்பான விஷேட பிரதிநிதிகள் முன் வைத்த பரிந்துரைகளை ஏற்று அமுல்படுத்த அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றன. இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்கள் காரணமாக சிவிலியன்களின் மனித உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளதோடு அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமும், விடுதலைப் புலிகளுமே முழுயான பொறுப்பாளிகள் ஆவர்.

நன்றி வீரகேசரி இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.