Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூதூரில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: வன்முறைச் சம்பவங்களில் பொதுமகன் சுட்டுக்கொலை- 4 பேர் காயம்

Featured Replies

மூதூரில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: வன்முறைச் சம்பவங்களில் பொதுமகன் சுட்டுக்கொலை- 4 பேர் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:43 மு.ப ஈழம்] [க.நித்தியா]

திருகோணமலை மாவட்டம் மூதூர் நிலாப்பொலவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து அங்குள்ள தமிழ்க் கிராமமான கங்குவேலிக்குள் நடைபெற்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் வன்முறையிலும் 4 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் நேற்று பிற்பகல் கிளிவெட்டிப் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டும் உள்ளார்.

இந்த இரு சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

மூதூர் நிலாப்பொலவில் நேற்று சனிக்கிழமை முன்தினம் இரவு 8:00 மணியளவில் உந்துருளியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அப்பகுதியில் நின்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சிங்களவரான மகிந்த ஜயந்த (வயது 29) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

இச்சம்பவத்தையடுத்து தமிழர்கள் வசிக்கும் கங்குவேலிக்குள் நுழைந்த ஊர்காவல் படையினர் அங்கு கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதுடன் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில் 4 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

புளியடிச்சோலையைச் சேர்ந்தவர்களான

வே.ராஜன் (வயது 19)

இ.திலகேஸ்வரி (வயது 56)

கங்குவேலியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாயான பி.நித்திய நிர்மலா (வயது 19)

ஆகியயோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த நான்காவது நபரின் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

காயமடைந்தவர்கள் கிளிவெட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் வே.ராஜனும், திலகேஸ்வரியும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் கந்தளாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவங்களையடுத்து தமிழ்க் கிராமங்களான கங்குவேலி மற்றும் புளியடிச்சோலையில் பதற்றம் நிலவுகிறது.

இந்த கிராமங்கள் இரண்டும் பெரும்பான்மையின மக்கள் வசிக்கும் தெளிவத்தைக்கும் நிலாபொலவிற்கும் இடையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு நிலவும் பதற்றத்தால் படையினரும் காவல்துறையினரும் மேலதிகமாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிளிவெட்டியில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கிளிவெட்டி அகதி முகாமில் உள்ள யோகராசா காளியப்பு (வயது 22) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வியாபாரியான இவர் கிளிவெட்டி மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பத

திருகோணமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை

திருகோணமலை மாவட்டம் சேருநுவரவில் இருந்து நீலபொல பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காங்குவேலி என்ற பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருடன் சென்ற படைச்சிப்பாய் ஒருவர் உயிர்தப்பியுள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

http://isoorya.blogspot.com/

space.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.