Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரெழுச்சியுடன் நடைபெற்ற புலிகளின் குரலின் அக்கராயன் கோட்ட முத்தமிழ் கலையரங்க நிகழ்வு

Featured Replies

பேரெழுச்சியுடன் நடைபெற்ற புலிகளின் குரலின் அக்கராயன் கோட்ட முத்தமிழ் கலையரங்க நிகழ்வு

[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 07:21 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அக்கராயன் கோட்ட முத்தமிழ் கலையரங்க நிகழ்வு நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 7:30 மணியளவில் தொடங்கியது.

நிகழ்வின் தொடக்கத்தில் அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களின் தமிழ் இன்னியத்தினால் அனைவரும் நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பொதுச்சுடரினை அக்கராயன் கோட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கானகன்

புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன்

ஆகியோர் ஏற்றினர்.

- மாவீரர் பொது திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர் குபேரன்

- முதல் மாவீரர் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் ஆதவன்

- முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கு கந்தபுரம் முருகன் கோவில் அறங்காவலர் சபைத்தலைவர்

- முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட மாதர் அபிவிருத்தி சங்கத்தலைவி தேவி

- முதற் கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் விமலேஸ்வரன்

- முதல் பெண் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை சாந்தியின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட உள்ளக பாதுகாப்புப் பணியின் இணைப்பாளர் திரு

- முதல் தாக்குதல் தளபதி லெப். சீலனின் திருவுருவப்படத்திற்கு கந்தபுரம் உள் வணிகர் சங்கத் தலைவர்

- முதல் மகளிர் படையணித் தளபதி மேஜர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு பூநகரி சிறீ விக்னேஸ்வரா வித்தியாலய முதல்வர் கா.ஞானசீலன்

- கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்திற்கு முட்கொம்பன் பாடசாலை முதல்வர் கண்ணபிரான்

- கேணல் சங்கரின் திருவுருவப்படத்திற்கு காவல்துறை உறுப்பினர் சிறீ

- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு கந்தபுரம் எண் - 01 பாடசாலை முதல்வர் திருமதி விமலேஸ்வரன்

- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஜெகன்

- பிரிகேடியர் பால்ராஜின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட மாவீரர் போராளி குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் கிரிதரன்

- தமிழீழ காவல்துறையின் முதல் மாவீரர் தலைமைக் காவலர் கமலநாதனின் திருவுருவப்படத்திற்கு அக்கராயன் கோட்ட சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர்களில் ஒருவரான மாதுளன்

- தமிழீழ காவல்துறையின் முதல் பெண் மாவீரர் தலைமை காவலர் கார்த்திகாயினியின் திருவுருவப்படத்திற்கு ரவி பந்தல் சேவை உரிமையாளர்

- அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு டானியல் விளையாட்டுக்கழக தலைவர்

ஆகியோர் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தனர்.

அக்கராயன் கோட்ட புலிகளின் குரல் வானொலி மன்ற தலைவர் சபாரட்ணம் தலைமையில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஆற்றிய சிறப்புரை:

நாம் இந்த மண்ணின் பூர்வீக இனம். நாம் உரிமைக்காக போரிடும் போது சிங்களப் பேரினவாதம் பேச்சுக்கு வரும். நாம் பேச்சுக்கு போனால் போருக்கு வருவார்கள். இது தான் சிங்களத்தின் வரலாறு.

இந்த எமது மண்ணில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே நாம் வாழ்ந்திருக்கின்றோம். அதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

சிறிலங்கா அரசு பாரிய போர்முனையை அனைத்து இடங்களிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஜெயசிக்குறு காலத்தில் சிறிலங்காப் படைகள் நிலப்பரப்புக்களை பிடித்து நகர்ந்து வந்து அடி வாங்கியது. இப்போது சிறுகச் சிறுக நிலப்பரப்பினை பிடிக்கும் சிறிலங்காப் படைகளுக்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

30 ஆண்டுகளை கடந்து நிற்கும் விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளது. இதற்கு ஒரு மரபு உள்ளது.

அது "நாம் போராடுவோம். இந்த மண்ணில் யாரும் வந்து எம்மீது ஏறி நின்று எமது கடம் வாசிக்க விடமாட்டோம்" இதுதான் எமது நிலைப்பாடு.

இந்தியப்படை கூட தமிழீழ மண்ணில் வந்து அடிவாங்கிச் சென்றது. ஓயாத அலைகள் - 3 இன் போது யாழ்ப்பாணத்தில் நின்ற சரத் பொன்சேகா தப்பித்துப் போக விரைவாக கப்பலை அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். அவர் இப்போது சூளுரைத்துக்கொண்டு நிற்கின்றார்.

உலக நாடுகள் திட்டம் வகுத்துக் கொடுத்தாலும் சிறிலங்கா அரசு தற்போது களமுனையில் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எமது வரலாற்றைப் பார்க்கும் போது எதிர்பாரத திருப்பங்களோடு போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் இல்லை என்று சொன்ன போதொல்லாம் நிமிர்ந்து வரலாற்றில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளோம். எமக்கு வாழ்வு வேண்டும் என்று நாம் களத்திற்கு வரவில்லை. இந்த மண்ணில் எமது மக்கள்- எதிர்காலத் தலைமுறையினர் சுதந்திரமாக வாழ வேண்டும்.

தமிழர்கள் பண்பாட்டுக்கு உரியவர்கள் என்பதனை உலகத்திற்கு எடுத்துக்காட்டி பொங்கி நின்று மகிழ்ச்சி கொண்டாடுகின்ற நாளை கற்பனை செய்து கொண்டு நாம் போராடத் தயாராக இருக்கின்றோம்.

உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். அந்த உறுதியோடு நாம் எல்லோரும் ஒன்றுபட்டு போராட்டத்துடன் இணைந்து நிற்போமாக இருந்தால் மாவீரர்களுக்கும் தாய் மண்ணுக்கும் தமிழுக்கும் உண்மையானவர்களாக வாழ்வோம்.

தமிழீழம் காண்போம் இது உறுதி என்றார் யோகி.

நிகழ்வில் புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கையொட்டி முதல் 3 நாட்களும் தமிழீழ மாணவர் அமைப்பு- தமிழீழ கல்விக்கழகம்-தமிழீழ விளையாட்டுத்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பாடசாலைகள்- பொது அமைப்புக்கள்- வணிகர் சங்கங்களிடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

யோ.செ.யோகி, அக்கராயன் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பரஞ்சோதி, நா.தமிழன்பன், கானகன், குபேரன் ஆகியோர் பரிசில்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கான பங்காற்றுச் சான்றிதழ்களை போரணி இசையமைப்பாளர் இசைப்பிரியன்- சங்கநாதம் நெறியாளர் கலையரசி-பூநகரி நல்லூர் மகாவித்தியாலய முதல்வா குகானந்தராசா- ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.

புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கை முன்னிட்டு புலிகளின் குரலுக்கான வாழ்த்து மடலை அக்கராயன் வணிகர் சங்கத்தலைவர் லிங்கேஸ்வரன் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பரஞ்சோதியிடம் கையளித்தார்.

சிறப்பு நிகழ்வாக கலையரசி ஆசிரியரின் நெறியாள்கையில் உருவான "சங்கநாதம்" நடைபெற்றது.

பெருமளவிலான பொது மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.