Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓநாய் மீண்டும் உறுமுகிறது (பழ.நெடுமாறன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் மீண்டும் உறுமுகிறது

(பழ.நெடுமாறன்)

இந்தியாவின் மீது அமெரிக்கா மீண்டும் பாய்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து சாதாரக அரிசி மற்றும் சில உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைக்கண்டு அமெரிக்கா ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்க உயர் அதிகாரியான கிரிஸ்டோபர் பாடில்லா என்பவர் “அரிசி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அண்டைய நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் கோபத்திற்கு உண்மையான காரணம் வேறு. அரிசியை ஒரு போதும் அமெரிக்கர்கள் உபயோகிப் பதில்லை. அமெரிக்காவில் வாழும் இந்தி யர்களும் பிற ஆசிய ஆப்பிரிக்க மக் களும் உயர்ரக அரிசிகளையே உண்ணுகி ன்றனர். அவர்களும் சாதாரக அரிசியை ஒரு போதும் பயன்படுத்துவது இல்லை.

இந்தியா அரிசி உற்பத்தியில் உலகில் 2வது இடத்தில் உள்ளது. கோதுமை, உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், மக்காச் சோள உற்பத்தியில் ஏழாவது இடத்திலும் உள்ளது. அமெரிக் காவுக்கு அரிசியோ, கோதுமையோ வேண்டியதில்லை. பின் எதற்காக அமெரிக்கா இந்தியாவின் மீது பாய்கிறது?

இந்தியாவில் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் சாதாரக அரிசியை யும், சோளத்தையும் இதர புன்செய் தானியங்களையுமே உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்குத் தேவையான மேற்கண்ட தானியங்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது நியாயமானது மட்டுமல்ல. தன் மக்களின் நலனை கருத்தில் கொண்டதுமாகும்.

இதை கண்டிக்கும் தகுதி அமெரிக்காவிற்கோ வேறு எந்த நாட்டிற்கோ கிடையாது. ஒவ்வொரு நாடும் அதன் மக்களின் நலனை மனதில் கொண்டே செயல்படுகின்றன.

1960களில் உலகெங்கும் பல நாடுகளில் கடுமையான கோதுமைப் பஞ்சம் ஏற்பட்ட போது இதே அமெரிக்கா கோதுமை விலையை உயர்த்துவதற்காக கோடிக்கணக்கான டன்கள் கோதுமையை கடலில் கொட்டி வீணாக்கியது. அந்த அமெரிக்கா இப்போது இந்தியர்களின் பசியைத் தீர்க்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கி இருப்பதைக் கண்டித்திருக்கிறது.

அமெரிக்காவின் உண்மையான நோக்கம் அரிசி ஏற்றுமதி தடையைப் பற்றியல்ல. இந்தியாவில் ஏராளமாக விளையும் சோளம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டதனால் சோளம் கிடைக்காமல் போய்விடுமே என அமெரிக்கா கவலைப்படுகிறது. அமெரிக்க மக்களின் உணவுக்காக இந்திய சோளம் தேவைப்படுமானால் அம்மக்களின் பசி தீர்க்க அதை நாம் அனுப்பலாம். ஆனால் எத்தனால் தயாரிப்பதற்காக சோளம் அமெரிக்கா வுக்குத் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் சோளம், புஷல், கணக்கில் அளக்கப்படுகிறது. ஒரு புஷல் என்பது 25.4 கிலோ கிராம்கள் ஆகும். ஒரு புஷல் சோளத்திலிருந்து 11.37

லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தனி நபர் ஒருவருக்கு மாதந்தோறும் 63.27 கிலோ கிராம் அல்லது 139.5 பவுண்ட் சோளம் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியா வில் தனி நபருக்கு ஆண்டுக்கு 29 பவுண்டு சோளம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் எத்தனால் மூலம் ஓடும் செவர்லட் காரின் டேங்க் 90.4 லிட்டர் கொள்ளும். இதற்குத் தேவையான எத்தனாலை உற்பத்தி செய்ய 203.2 கிலோ கிராம் சோளம் தேவை.

அதாவது 203.2 கிலோ கிராம் அளவு சோளத்தை ஒரு அமெரிக்கர் 3.2 மாதங்களுக்கு உண்ணலாம். அதே அளவு சோளத்தை இந்தியர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு மேல் உண்ணலாம்.

அமெரிக்காவின் ஆத்திரத்திற்கு காரணம் என்ன என்பது இப்போதுப் புரிகிறதா? பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் விலை உயர்வினால் அமெரிக் கர்கள் தங்களது வாகனங்களுக்கு எத்தனாலைப் பயன்படுத்தி வருகிறார் கள். அதற்கு சோளம் நிறைய தேவை.

ஏற்றுமதித் தடையின் காரணமாக இந்திய சோளம் அமெரிக்காவுக்கு கிடைக்க வழியில்லை. எனவே இந்தியாவை நோக்கி அமெரிக்க ஓநாய் மறுபடியும் உறுமுகிறது.

தன் கண்ணில் உள்ள உத்தி ரத்தை எடுத்து விட்டு அடுத்தவர் கண் ணில் உள்ள துரும்பை அகற்ற வேண் டும் என இயேசுபிரான் கூறினார். இயே சுவைப் பின்பற்றுவதாகக் கூறும் அமெ ரிக்கா அவரது அறிவுரையைப் புறக்கணிக்கிறது.

சர்வதேச வணிக – பொருளா தார மய்யத்தின் செயலாளர் நாயகமான பிரதீப் எஸ்மேத்தா என்பவர் பின் வருமாறு கூறியுள்ளது சிந்திக்கத் தக்கதாகும்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்களின் உடல் எடையைப் போல அமெரிக்கர்கள் தங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்வார்களானால் ஆப்பிரிக்காவில் உள்ள கோடான கோடி பசித்த மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைச் சிறிதளவாவது பெறுவார்கள். தங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்காக அமெரிக் கர்கள் செலவிடும் பணத்தை பசியால் வாடும் மக்களுக்கு அளிப்பார்களானால் ஏராளமானவர்கள் பசியாறுவார்கள். என்றும் கூறியுள்ளார்.

உணவு தானிய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையினால் உலகில் உணவுப் பொருட்களின் விலை உயரும் என அமெரிக்காக் கூறுவது வெறும் பிதற்றலாகும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலும் ‘எத்தனால், மற்றும் உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் சோளம் போன்ற தானியங் களை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகள் தூண்டப்பட்டு அதற்காக ஏராளமான மானியமும் அளிக்கப்படுகிறது.

இதனால் அந்நாடுகளை சேர்ந்த விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியை நிறுத்தி விட்டு உயிரி எரிபொருள் உற்பத்திக்குத் தேவையான தானியங்களைப் பயிரிடுகிறார்கள். இதன் காரணமாகவும் அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ள வணிகத் தடைகளின் காரணமாகவும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை ஏறியிருக்கிறது என்பதுதான் உண்மை யாகும். இதை மறைப்பதற்கு அமெரிக்கா இந்தியாவின் மீதும் மற்றும் வளரும் நாடு களின் மீதும் வீண் பழியை சுமத்துகிறது. வளரும் நாடுகள் மேலும் மேலும் வளர்ச்சிப் பாதையில், செல்வதுவும் அவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாவதும் புதிய அரசியல் இலக் கணம் ஆகும். அதைத் தடுக்க யாராலும் முடியாது.

தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.