Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவனாய் பிறந்தது பாவமா?

Featured Replies

மீனவனாய் பிறந்தது பாவமா?

சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத் துக்கு இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள்தான் பலியாகப் போகிறார் களோ, தெரியவில்லை...

கடந்த 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறைப் படகுத்துறையிலிருந்து நாராயணசாமி, வாசகன், முரளி ஆகிய மூவர் கடலுக்குள் மீன் பிடிக்கப் போயிருக்கிறார்கள். இதில் முரளி தன்னிடமிருந்த செல்போன் மூலம் இரவு 12 மணிக்குக் கரையில் இருந்த கார்த்திகேயனைத் தொடர்புகொண்டு, ''எங்களை இலங்கை ராணுவம் சுட்டு ருச்சு. வாசகன் செத்துட்டான். நானும் நாராயணசாமியும் உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கோம்'' என்றிருக்கிறார். அடுத்த கணமே மூன்று படகுகளை எடுத்துக்கொண்டு தேடிப்போயிருக் கிறார்கள். விடிந்த பிறகே அந்தப் படகைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்குள் நாராயணசாமியும் இறந்துவிட, முரளி மட்டும் முனகிக்கொண்டு கிடந்திருக் கிறார்.

இதற்குள் செய்தி தீயாகப் பரவி பால்வளத் துறை அமைச்சர் மதிவா ணன், ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி., எஸ்.கே.வேதரெத்தினம் எம்.எல்.ஏ. என அரசியல் பிரமுகர்களும், மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், எஸ்.பி-யான அஸ்வின் கோட்னிஸ் என அதிகாரிகள் பட்டாளமும் ஆறுகாட்டுத்துறையில் ஆஜராகியிருந்தார்கள், கூடவே நாமும்.

முரளியை ஆம்புலன்ஸில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு -- நாராயணசாமி, வாசகன் இருவரின் உடல்களையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். நாராயணசாமியின் அண்ணன் முருகனும், வாசகனின் தந்தை பாலகிருஷ்ணனும்,''நம்ம எல்லையில 'போயா'ங்கிற மிதவை கெடக்கும். அதைத்தாண்டி எவ்வளவு மீம்பாடு இருந் தாலும் நம்ப மீனவங்க போக மாட்டாங்க. அன்னைக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மண்ணள்ளுற கப்பல் பக்கத்துல நின்னும் சிங்கள ராணுவம் வந்து சுட்டுருக்கு'' என்று அழ ஆரம்பித்துவிட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட படகு முழுவதும் ரத்தச் சகதி. மனித மூளையும் கை விரல்களும் சிதறிக் கிடந்தன.

துக்கம் விசாரிக்க வந்திருந்த அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வாய்மேடு பழனியப்பன், “இதே ஊரைச் சேர்ந்த மூணு பேரை 1994-ல இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்னுருச்சு. இப்போ ரெண்டு பேர். இதுவரைக்கும் நிறைய முறை இலங்கை ராணுவம் நம்ம மீனவர்கள் மேல துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கு. நம்ம நாட்டோட கடல் எல்லைக்குள்ள சர்வ சாதார ணமா வந்துட்டுப் போற அளவு இலங்கை ராணுவத்துக்கு எப்படி துணிச்சல் வந்துச்சு? இந்த ரெண்டு பேரோட மரணத்துக்குப் பிறகாவது 'இந்தியக் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்'னு ஒரு எச்சரிக்கையாவது விடவேண்டாமா? அதுக்கு கலைஞர் அரசு வலியுறுத்தியிருக்க வேண்டாமா? இதை எங்கள் 'அம்மா'விடம் கூறி போராட்டம் நடத்தப் போகிறோம்'' என்றார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருக்கும் முரளியைச் சந்தித்தோம். “ராத்திரி 12 மணி இருக்கும். நாங்க வலையைப் போட்டுட்டுப் படுத்திருந்தோம். திடும்னு படகு சத்தம் கேட்டுச்சி. எந்திரிச்சுப் பார்த்தா இலங்கை ராணுவம். எங்க படகை நோக்கி அவங்க வந்ததும் நாங்க ரெண்டு கையையும் மேலே தூக்கிட்டு நின்னோம். வந்த வேகத்துலயே படபடன்னு சுட்டுட்டுப் போய்ட் டாங்க. இவ்வளவுக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மண்ணு அள்ளுற கப்பல் பக்கத்திலதான் நாங்க இருந்தோம். அப்படி இருந்தும் சுட்டுட்டாங்க. அப்பவே வாசகன் செத்துப்போய்ட்டான். நாராய ணசாமி மட்டும் 'எப்படியாவது காப்பாத்துங்க'னு கத்திக்கிட்டே இருந்தான். எனக்குக் கைல அடிப்பட்டதால படகு இன்ஜினை ஸ்டார்ட் பண்ண முடியலை. அதுக்கப்பறம்தான் ஊருக்குத் தகவல் குடுத்தேன். அவங்க விடியறவரைக்கும் தேடிட்டு விடிஞ்ச பிறகுதான் வந்தாங்க. அதுக்குள்ள நாராயணசாமியும் துடிதுடிச்சுச் செத்துட்டான்'' என்றவர், ''நாங்க மீனவனாப் பொறந்ததைத் தவிர வேற எந்தப் பாவமும் செய்யலை. எங்களுடைய இந்தப் பிரச்னைகளைக் கேட்டு அதனைப் போக்குவதற்கு இந்த நாட்டில் கேட்பாரே இல்லையா?'' என்றார்.

இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி இரவு புஷ்பவனத் திலிருந்து சென்ற மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு வானத்தை நோக்கிச் சுட்டு பயமுறுத்தி அனுப்பியிருக்கிறது

'இலங்கையுடன் மோத மீனவர் படை...'

போர் முரசு கொட்டுகிறது கம்யூனிஸ்ட்

சமீபத்தில் தமிழகத்தின் கடலோர கிராமங் களில் மீனவர்கள் வாழ்வுரிமைக்கான விழிப்பு உணர்வுப் பயணத்தை நடத்தி முடித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வேதாரண்யம் சம்பவத்தையடுத்து, வருகிற 30-ம் தேதி இலங்கைத் தூதரகத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த விழிப்பு உணர்வு பயணத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரனை சந்தித்தோம்.

''இதுநாள்வரை இந்தியக் கடல் எல்லையை மீறிவந்து மீன் பிடித்த தமிழர்களைத்தான் இலங்கை ராணுவம் சுட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு நம்முடைய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர் களைக் கொன்றிருக்கிறார்கள். வாசகன் உடலில் மட்டும் இருபதுக்கும் மேலான குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. சேது சமுத்திரக் கால்வாய் பகுதியான நம்முடைய கடல் எல்லையில் மீன் பிடித்தவர்களை சுட்டுக் கொல்கிற அளவுக்கு இலங்கை ராணுவம் இனவெறி பிடித்து அலைகிறது. கடந்த இருபத்தைந்து வருஷங்களில் எட்டாயிரம் முறை நம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. அதில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உறுப்புகளை இழந்து ஊனமுற்றவர்களாகிக் கிடக்கிறார்கள். ஆனால், இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் இந்திய அரசுத் தரப்பிலிருந்து இலங்கை ராணுவத்தைக் கண்டித்து ஒரு கேள்விகூட எழுப்பப் படவில்லை. தமிழர்களின் உயிர், இந்திய அரசுக்கு ஏதோ கிள்ளுக்கீரையைப் போல் தெரிகிறது. [b]தமிழர்களின் மேல் இலங்கை அரசுக்கு இருக்கும் கோபத்தைக் காட்டிலும் நம் இந்திய அரசுக்கு அதிகமாக இருக்குமோ என்கிற பயம் எழுகிறது'' என ஆவேசமாக வெடிக்கும் மகேந்திரன், இந்திய-இலங்கை கடல் எல்லை குறித்த விவரங்களையும் சொல்லத் தொடங்கினார்.

''இந்திய-இலங்கை கடலுக்குள் எல்லைப் பகுப்பு சரியானபடி நடந்திருக்கிறதா? 22 கடல் கிலோமீட்டர் ஒரு நாட்டின் கடல் எல்லையாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், நம் இந்திய எல்லையிலிருந்து 22 கடல் கிலோ மீட்டரைக் கணக்கிட்டால் அது இலங்கையையே தொட்டு விடுமே... குறுகிய கடல் பரப்புகளை இணக்கமான முறையில் பேசி, கூட்டு மீன் பிடிப்புக்கு வழி செய்திருக்க வேண்டிய இலங்கை-இந்திய அரசுகள் அப்படிச் செய்யவில்லை. ரஷ்யா, நார்வே, பின்லாந்து நாடுகள் தங்களின் கடல்பரப்பு குறுகிய அளவில் இருப்பதால், கூட்டு மீன் பிடிப்புக்கு ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. அந்தக் கடல் பரப்பில் மூன்று நாட்டு மீனவர்களும் எங்கே வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம். இந்திய-இலங்கை கடல் எல்லையை மீனவர்களுக்கு பளிச்சென சொல்கிற அளவுக்கு ஒளி பொருந்திய மிதவை விளக்குகளைப் பயன்படுத்தலாம். ஆனால், அதைக்கூடச் செய்யவில்லை.

நாங்கள் மேற்கொண்ட விழிப்பு உணர்வுப் பயணத்தில் மீனவர்களின் துயரங்களை நாங்கள் கேட்க கேட்க, அதெல்லாம் எங்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டன. அதனால்தான், எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், 'ஒவ்வொரு மீனவருக்கும் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும்' என முழங்கினார். தற்காப்புக்காக நடிகர்களும், அரசியல்வாதிகளும் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் போது, நிராதரவாய் கடலுக்குள் செல்கிற மீனவர்களும் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயம்தானே! எங்களின் விழிப்பு உணர்வு பயணத்தின் போது ஒரு இளைஞர் இப்படிச் சொன்னார்... 'சிங்கள ராணுவத்தினரைக் காட்டிலும், தமிழக மீனவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தக் கொடூரங்கள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த மீனவர்களும் கடலுக்குள் திரண்டுபோய் இலங்கை ராணுவத்தோடு சண்டை போடவும் தயங்க மாட்டோம். இந்திய அரசு எங்களுக்காக ஏதும் மெனக்கெடாவிட்டாலும் சிங்கள ராணுவத்துக்கு சரியான அடி கொடுக்க எங்களாலேயே முடியும். நாங்கள் ராணுவமாக மாறினால்தான் இந்திய அரசுக்கு உறைக்கும்' என அந்த இளைஞர் சொன்னபோது எங்களால் பதில் ஏதும் பேச முடியவில்லை. குஜ்ஜார் மக்களைப் போல் எத்தகைய போராட்டங்களைக் கையிலெடுக்கவும் மீனவமக்கள் தயங்க மாட்டார்கள் என்பது அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது'' என ஆதங்கமும் ஆவேசமுமாகச் சொன்ன மகேந்திரன் தமிழக அரசையும் ஒரு பிடி பிடித்தார்.

''மீனவ மக்கள் கொல்லப்படுகிற போதெல்லாம் அதிகாரிகள், அரசுக்குத் தவறான தகவல்களையே சொல்கிறார்கள். நிவாரண உதவிகளைக்கூட இழுத்தடித்தே செய்கிறார்கள். இன்றைக்குத் தமிழக அரசு, மத்திய அரசுக்கே நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய அளவுக்கு சக்தியோடு இருக்கிறது. இதேபோல் தமிழக மீனவர்கள் விஷயத்திலும் மத்திய அரசை நிர்ப்பந்திக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது? விரைவில் இலங்கையில் நடக்கவிருக்கிற தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் தமிழக மீனவர்களின் சோகங்களுக்கு இந்திய அரசு நீதி கேட்க வேண்டும். இதற்கு மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும். இலவச வீட்டுமனைத் தொடங்கி மின்சார வசதிகள்கூட இல்லாத மீனவ மக்களுக்கு தமிழக அரசு தக்க உதவிகளை உடனே செய்யவேண்டும். பாம்பன் பகுதியைச் சேர்ந்த அருள் சகாயம் என்பவரின் மகன் உட்பட ஐந்து பேரை அனுராதபுரம் ஜெயிலில் இலங்கை அரசு அடைத்து வைத்திருக்கிறது. அவர்களை மீட்கிற முயற்சியில் தமிழக அரசு அசுர வேகத்தோடு களமிறங்க வேண்டும். நாங்கள் விழிப்பு உணர்வு பயணம் மேற்கொண்ட போது ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவர் எங்களின் கரங்களைப் பற்றி, கண்ணீரோடு மீனவ மக்களின் சோகங்களைச் சொன்னார். அந்தப் பெரியவரின் மகனான நாராயணசாமிதான் கடந்த பன்னிரண்டாம் தேதி சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 'அன்னிக்கு மத்த புள்ளைகளுக்காக அழுதேன்... இன்னிக்கு எம்புள்ளைக்கே இந்தக் கதியாயிடுச்சே...'ன்னு அந்தப் பெரியவர் கதறலோடு சொல்கிற வார்த்தைகளை கேட்டாவது தமிழக அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, மீனவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்!'' என்றார் உறுதியான குரலில்.

நன்றி ஜூனியர் விகடன்

pg2.jpg

கடந்த வெள்ளிக்கிழமை இரவு. நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறைக்கு அப்பால் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே கடல்பகுதியை இருட்டு ஒரு போர்வை போல போர்த்தியிருந்தது. தமிழக மீனவர்களின் இன்றைய நிலைமையைச் சொல்வது போல இருந்த அந்தக் கும்மிருட்டில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன், நாராயணசாமி, முரளி ஆகியோர்.

நட்டநடுநிசி. இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று சத்தமில்லாமல் இவர்களது மீன்பிடிப் படகை அணுகியது. இந்தியக் கடல் பகுதியில், அதுவும் சேதுக்கால்வாய் தோண்டப்பட்டு வரும் பகுதியில் இலங்கை ரோந்துப் படகா? என்று இவர்கள் திகைத்து திக்குமுக்காடிய வேளையில், ரோந்துப் படகில் இருந்து பறந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் மீனவர்களின் படகைப் பதம் பார்க்கத் தொடங்கியது.

``நாங்கள் மீனவர்கள்! கடத்தல்காரர்களோ, புலிகளோ இல்லை'' என்று கத்தினார்கள் மீனவர்கள். அதை இலங்கை நேவிக்காரர்கள் காதிலேயே வாங்கவில்லை. படகை நெருங்கி வந்த அவர்கள், மூன்று மீனவர்களும் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் அவர்களைப் படகில் நிற்க வைத்தனர். அதன்பின் துப்பாக்கிக் குழல்கள் கனல் கக்கியபடி குரைக்கத் தொடங்கின. குண்டுகள் மீனவர் வாசகனின் தலையைத் தாக்க, அவர் மூளை சிதறிச் செத்து விழுந்தார். ``சுட வேண்டாம்'' என்று கைகளைக் கூப்பிய நாராயணசாமியின் கைவிரல்கள் குண்டுகள் தாக்கி தனித்தனியே பறந்தன. முரளிக்கும் படுகாயம். மூன்று மீனவர்களும் படகில் சாய, வந்த வேலை முடிந்ததென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது இலங்கை ரோந்துப்படகு.

கும்மிருட்டில் ரத்தவெள்ளத்தில் கிடந்த முரளி,அடுத்த சில மணிநேரத்தில் விழித்துக் கொண்டார். கையிலிருந்த செல்போனில் ஊருக்குத் தகவலைச் சொல்லி விட்டு மீண்டும் மூர்ச்சையானார். அந்தத் தகவலறிந்ததும் ஆறுகாட்டுத்துறையே அலறிப்போனது. மூன்று படகுகள் அவர்களைத் தேடி விரைந்தன. சேதுசமுத்திரப் பணி நடக்கும் கடல்பகுதியில் இருப்பதாக முரளி சொன்னதால், அதையே அடையாளமாக வைத்துத் தேடிய அவர்கள், கடைசியில் அலைகடலில் அனாதரவாக மிதந்து கொண்டிருந்த படகைக் கண்டுபிடித்தார்கள். உள்ளே ரத்தச் சகதியில் கிடந்தனர் மூன்று மீனவர்களும்.

மூளை சிதறிய வாசகன் ஏற்கெனவே இறந்து போயிருந்தார். நாராயணசாமியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. முரளி மயக்கத்தில் இருந்தார். மூவரையும் கரைக்குக் கொண்டுவரும்போது பாதிவழியில் தனது இறுதி மூச்சை விட்டுவிட்டார் நாராயணசாமி. இருவர் இறந்த தகவல் இதற்குள் காட்டுத்தீயாய்ப் பரவிவிட,ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கூடிவிட்டனர். உறவினர்களின் கதறல் கடலோசையை விஞ்ச,காலை பத்து மணியளவில் படகுகள் கரை வந்து சேர்ந்தன. அதற்குள் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு அமைச்சர் மதிவாணன், மாவட்ட கலெக்டர் ஜெயராமன், எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் வேதரத்தினம், உலகநாதன் என பலரும் வந்துவிட்டனர். காயமடைந்த முரளி ஆம்புலன்ஸில், தஞ்சாவூர் மருத்துக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

படகில் ரத்த வெள்ளத்தில் கோரமான முறையில் இறந்துகிடந்த வாசகன், நாராயணசாமி ஆகியோரது உடல்களைப் பார்த்து உறவினர்களும், ஒட்டுமொத்த மீனவர்களும் கதறிய கதறல் அந்தப் பகுதியையே கலங்க வைத்தது. ரத்தக் களறியாகக் கிடந்த படகில், இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு துளைத்த ஓட்டைகள் காணப்பட்டன.மீனவர்களின் உடல்கள் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்களது குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை அமைச்சர் மதிவாணனால் வழங்கப்பட்டு ஆறுதல் கூறப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து, சோகத்தில் முங்கி முழுக்காடிய நாகை மாவட்ட மீனவர்கள், மறுநாள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதேநாளில் கூடிய நாகை மாவட்ட மீனவர் பிரதிநிதிகள், முதற்கட்டமாக நாகை, காரை மாவட்ட மீனவர்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

நாம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம தலைவரான மயில்வாகனம் என்பவரிடம் பேசினோம்.

``இந்தச் சம்பவம் பற்றி ராத்திரி ஒரு மணிக்கே அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தந்து விட்டோம். அவர்கள் வந்து கரையில் காத்திருந்தார்களே தவிர, கடலில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிய மீனவர்களை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய கடலோர காவல்படை எங்கே போனது என்பதே தெரியவில்லை? நாங்கள்தான் மீனவர்களை மீட்டுக் கரை சேர்த்தோம்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அதிகாரிகள், முதல்வரின் ஒரு லட்ச ரூபாயை அவசரமாகக் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டு புறப்பட்டால் போதும், அத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகவே நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியினரோ எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கின்றனர். மனித நேயத்திற்கு மதிப்பே இல்லை. சிங்கள கடற்படை இனி நம் கடல் எல்லைக்குள் அல்ல, இனி வீட்டுக்கே வந்து சுட்டுவிட்டுப்போனாலும் கேட்க நாதியில்லை. தமிழக அரசு இதுபற்றி மத்திய அரசிடம் புகார் செய்வதோடு சரி. அதன் பிறகு அமைதியாகி விடுகிறது. அப்பாவி மீனவர்களுக்கு எப்போதுமே நிம்மதியில்லை'' என்றார், அவர் துக்கம் ததும்பிய குரலில்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து சி.பி.ஐ. சார்பில், மீனவர் வாழ்வுரிமை விழிப்புணர்வு இயக்கம், நாகை மாவட்டம் பழையாறிலிருந்து, ராமேஸ்வரம் வரை போராட்டம் நடத்தியிருக்கிறது. அடுத்த கட்டமாக ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரிவரை போராட்டம் நடக்கவிருந்த சூழ்நிலையில், இப்படியொரு கொடூரச் சம்பவம் நடந்து விட்டதால், சி.பி.ஐ.யின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கொதித்துப்போயிருக்கிறார். ``இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இலங்கையில் நடக்கவிருக்கும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இதை ஒரு முக்கியப் பிரச்னையாக வைத்து இந்திய அரசு தீர்வு காண வேண்டும்'' என்று சூடாகியிருக்கிறார் அவர். அதோடு இலங்கை அரசைக் கண்டித்து, வரும் 30-ம்தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ``சிங்கள அரசின் இந்த இனவெறி அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் கருணாநிதி டெல்லிக்கு நேரிடையாகச் சென்று பிரதமரைச் சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட, இலங்கையுடன் உள்ள உடன்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில்,12-ம்தேதி இரவு வேதாரண்யம் கோடியக்கரை பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை சிங்கள ராணுவத்தினர்வழிமறித்து, நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியை நீட்டி மிரட்டியதோடு, வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது மீனவர்கள் மத்தியில் மேலும் பதற்றத்தைப் பற்ற வைத்துள்ளது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.