Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு

சச்சிதானந்தன் சுகிர்தராஜா

என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில அணிக்கெதிரான போட்டி ஆட்டத்தில் தொடர்ந்து ஓட்டங்கள் இல்லாமல் பந்தெறிவதில் ஒரு சாதனை புரிந்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றிப்பதினான்கு நிமிடங்கள் நட்கரிணி ஆங்கிலேய ஆட்டக்காரர்களான பிரயன்பாவூலுசுக்கும் கென் பாரிங்டனுக்கும் எதிராகப் பந்து வீசினார் என்று நினைக்கிறென். நட்கரிணி வீசிய சுழல் பந்தில் அவர்களால் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. மளமள என்று ஓட்டங்களைக் குவிக்காமல் நிதானமாகப் பந்தாடியவர்களையும் பந்து வீசியவரின் சாமர்த்தியத்தையும் விளையாட்டரங்கிலிருந்த ரசிகர்கள் பொறுமையோடு மிக முக்கியமாக இன்று ஐ. பி. எல். அருளிச்செய்த ஆடல் அழகிகளின் உதவியில்லாமல் கண்கொட்டாமல் பார்த்தார்கள்.

ipl20oh5.jpg

இருபது 20 கிரிக்கட்டின் இலக்கணத்தையே மாற்றிவிட்டது. ஐந்து நாள்களாக இருந்து, பிறகு ஒருநாளாக மாறி இப்போது மூன்று மணித்தியாள ஆட்டமாகக் குறைந்திருக்கிறது. ஒரு காலத்தில் நாள்களால் கட்டுப்படுத்தப்படாத (dateless) போட்டி ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கிரிக்கட்டைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். 1936இல் ஆங்கிலேயத் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான போட்டி ஆட்டம் பத்து நாள்வரை டேர்பனில் நடைபெற்றது. ஆட்டத்திற்கு முடிவு கிட்டுவதாயில்லை. ஊர்திரும்புவதற்குக் கப்பலைப் பிடிக்க வெற்றி தோல்வியின்றி ஆட்டம் சமநிலையில் முடிந்தாக அறிவித்துவிட்டு ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திற்கு வந்துவிட்டார்கள். கிரிக்கட் தந்த பிரயோசனமில்லாத காரியங்களில் ஒன்று இந்த ஆட்டம் பற்றிய விவரமான புள்ளியியல் (statistics). இந்த ஆட்டத்தில் ஊறிப்போயிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிரிக்கட் பற்றிய புள்ளிவிவரங்கள் சேர்ப்பதிலும் அதைப் பற்றி நாள்கணக்காகச் சளைக்காமல் பேசுவதிலும் மன்னர்கள். டொனி அடித்த அரைச் சதத்தில் எத்தனை பவுண்டரிகள், எத்தனை சிக்ஸர்கள் என்று திருவார்த்தைபோல் ஒப்புவிப்பார்கள். அவர்களுடைய ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய டேர்பன் ஆட்டம் நடைபெற்ற நேரம்: 43 மணித்தியாளங்கள், 11 நிமிடங்கள். இந்தக் கால அளவுக்குள் கிட்டத்தட்ட 14 ஐ. பி. எல். போட்டிகள் முடிந்திருக்கும்.

மிக அதிகமான விளம்பரத்துடன் ஐ. பி. எல். போட்டி அறிவிக்கப்பட்டபோது, ஆங்கில ஊடகங்கள் எதோ நாகரிகமே அழிந்துவிட்டதுபோல் நடந்துகொண்டன. கலையைப் பொழுதுபோக்காகக் கொண்டவர்களால் (amateur) ஆரம்பிக்கப்பட்ட ஆட்டத்தின் தூய்மை இப்போது வியாபாரிகளால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் இவர்கள் வெளிப்படையாகக் காட்டும் கவலை. ஆனால், உண்மையில் இவர்களைச் சோர்வடையச் செய்வது இதுவல்ல. இதுவரை ஆங்கிலேயரின் கையிலிருந்த ஆட்டத்தின் ஆட்சியும் மேலாண்மையும் இப்போது கிழக்கே முக்கியமாக இந்தியர் கைவசம் மாறிருப்பதே.

தங்களது உயர் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் தங்களின் ஆட்சியை வலுப்படுத்தவும் ஆங்கிலேயர் காலனிய நாட்டு மக்களிடையே மூன்று சமாச்சாரங்களை அறிமுகப்படுத்தினார்கள். அவை கிறிஸ்தவம், ஆங்கிலேய இலக்கியப் படைப்புகள் மற்றது கிரிக்கட். இந்தியர்களைப் பண்படுத்தவும் (civilize) அவர்களுக்கு நெறியுள்ள நடத்தையையும் நற்பழக்கங்களைப் போதிக்கவும் முக்கியமாகப் பெண்தன்மையுள்ள (effeminate) இந்தியர்களுக்கு ஆண்மையையும் வீரத்தையும் புகட்டுவதற்கு இந்த விளையாட்டைப் பயன்படுத்தினார்கள். கிரிக்கட்டும் மற்றும் விக்டொறின் விளையாட்டுகளான உதை பந்தாட்டம், ரக்பீ, டெனிஸ் போன்றவை காலனிய மக்களிடையே பழக்கப்படுத்திய நற்பழக்கங்களில் ஒன்று கீழ்ப்படிவு. அம்பயர், மத்தியஸ்தரின் தீர்ப்பையும் ஆட்டத்தின் விதிமுறைகளையும் ஆட்சேபிக்காமல் ஒத்துக்கொள்வது. கீழ்ப்படிவு என்பதைக் காலனிய ஆட்சியை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் என்று மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்.

natkarnyno7.jpg

ஆங்கிலேயரின் இந்த முக்கனிகளில் கிறிஸ்தவம் இன்று விளிம்புநிலையிலேயே இருக்கிறது. 'இயேசு இந்தியாவிற்கே' என்ற பாதிரிமார்களின் மதப் பரப்புரைப்பு இந்தியர்களை அதிகமாக ஈர்க்கவில்லை. ஆங்கில மொழித் தாக்கத்தினால் ஓரளவுக்குச் சில இந்தியப் படைப்பாளிகள் ஆங்கிலேய இலக்கியத்தில் கவனமும் அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் ஆரத் தழுவிக்கொண்டது ஆங்கிலேயர் கற்றுத்தந்த இந்த விக்டொறின் ஆட்டமே அதிகப் பாதிப்பையும் மன ஈடுபாட்டையும் ஒருவிதத்தில் வெறியையும் இந்தியர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலேய மத்தியதர வகுப்பின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இந்த விளையாட்டை இந்தியர்கள் தங்கள் சூழலமைப்புக்கு ஏற்பத் தன்னியற்படுத்தியிருக்கிறார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.