Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் சகல வளங்களையும் அடகு வைத்துவிட்டு இந்தியாவின் காலுக்குள் சுருண்டு கிடக்கும் கேவலம் - ஜே.வி.பி

Featured Replies

மஹிந்தவின் அரசு இலங்கைப் பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உட்பட பெறுமதிமிக்க வளங்கள் அனைத்தையும் இந்தியாவிடம் அடகு வைத்து விட்டு இந்தியாவின் காலுக்குள் சுருண்டு கிடப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

1987ம் ஆண்டு ஜே.ஆர். இந்தியாவிடம் அடிமையாகியதை விடவும் மிக மோசமாக மஹிந்த அடிமையாகியுள்ளார். என்றும் இந்தியாவின் உத்தரவின்படியே இலங்கையில் எல்லாம் நடக்கிறது என்றும், இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே இந்தியாவின் திடடம் என்றும் ஜே.வி.பி. மேலும் தெரிவித்துள்ளது.

உடனடியாக இந்த அடிமைத்;தனத்தில் இருந்து மஹிந்த விடுபடவேண்டும் என்று அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்று கொழும்பில் ஊடகவியலாளரை சந்தித்;த அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்ததாவது :

வரலாற்றில் என்றுமில்லாதவாறு இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு அதிகரித்துள்ளது.. இலங்கையின் முக்கிய வளங்கள் உட்பட அனைத்தும் இந்தியாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதாரமும் அரசியலும் இந்தியாவின் விருப்பத்தின் படி இயங்குகின்றன. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை முக்கியமான வளங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டு விட்டன. வடக்கிலும் அவ்வாறுதான்.

திருகோணமலை சம்பூரில் 600 சதுரகிலோ மீற்றர் நிலம் இப்போது இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதே போல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கியமான பொருளாதார வளங்களெல்லாம் இந்தியாவிடம் சென்றுவிடும். நமக்கென்று எதையும் இந்தியா விட்டு வைக்கப் போவதில்லை. அதே போல், அரசியல் நடவடிக்கைகளும் இந்தியாவின் உத்தரவின்படியேதான் இடம் பெறுகின்றன.

இறைமையுள்ள ஒரு நாடு இந்தியாவின் பிடியில் சிக்குண்டு அதன் முன்நிiயில் கைகட்டி நிற்பது சுய கௌரவமுள்ள எம் போன்ற பிரஜைகளுக்கு கேவலம்.

இந்தியா எமது அயல் நாடு என்பதால் அந்நாட்டுடன் நட்புறவை வைத்துக் கொள்ளாலாமே தவிர அந்நாட்டுக்கு அடிமையாகி விட முடியாது.

1987 இல் ஜே.ஆர். இந்தியாவுக்கு அடிமையாகி நின்றார். இன்று மஹிந்த அடிமையாகி நிற்கிறார்.

இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே இந்தியாவின் திட்டம். இத்திட்;டத்திற்கு அமைவாகவே இந்தியா இராணுவம 1987 ல் இலங்கைக்கு வந்தது.

இந்தியாவின் அத் திட்டம் அப்போது நிறைவேறாது போனதால் இப்பொது அத்திட்டத்தை நிறைவேற்ற இந்தியா மீண்டும் முயற்சிக்கிறது.

அதற்கான அனைத்து வழிகளையும் மஹிந்த திறந்து வைத்துள்ளா. அவரின் இந்த அடிமைத்தனமான செயற்பாட்டை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

மஹிந்த உடனடியாக இந்தியாவின் பிடியில் இருந்து விடுபட வேண்டும். மஹிந்த இந்த அடிமைத்தனமான அரசியல செயற்பாட்டை உடன் கைவிடாவிட்டால் அவருக்கு மக்கள் தக்கபடி பதிலடி கொடுப்பர் என்றும் தெரிவித்தார்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.