Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையுடனான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு -சாடுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய ரொஷான் நாகலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு -சாடுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய ரொஷான் நாகலிங்கம்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வருகை இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக தாழ்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய குற்றம் சாட்டினார்.

சிநேகபூர்வ அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெகுமதி அளிப்பது போலேவே ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டதென தெரிவித்த அவர் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் அரசாங்கம் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் அண்மைய விஜயமானது இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்துவதற்கேயாகும். அவர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகங்கள் பல்வேறுபட்ட தொனிப்பொருளில் செய்திகளை வெளியிட்டுள்ளன.

நான் இலங்கையில் பிறந்தவனாகையால் எந்த வெளித்தரப்புக்காகவும் கருத்து தெரிவிக்காது இலங்கையின் தேசியத்துக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.

ஊடகச் செய்தி ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய இலான்ஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும் புதிய முதலமைச்சரான பிள்ளையானை சந்திப்பதை தவிர்க்கும் முகமாகவே திருகோணமலை விஜயத்தை தவிர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

திருமலை விஜயத்தை முழுமையாக வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச ஆதரவுடன் மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

நாட்டின் நலன்கருதி அனைத்து இலங்கை மக்களுக்கும் தேவையானதை பெற்றுக்கொடுக்க அரசியலமைப்பின் ஊடாக சமநீதியை உறுதிப்படுத்த சந்தர்ப்பமளிக்க வேண்டுமென்பதுடன் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்தாகும். இந்த அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு நீண்டகாலமானதாகும். ஐரோப்பாவுக்கும் அதன் மக்களுக்குமான இலங்கையுடனான தொடர்பு 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மாகாண அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசுக்கு உதவுவதற்கு காரணம் ஜனநாயகத்துக்கு சக்தியளிப்பதற்கேயாகும்.

ஐரோப்பிய ஒன்றிய 27 நாடுகளில் 21 நாடுகளுக்கும் பார்க்க பழைமையான ஜனநாயகத்தை இலங்கை கொண்டுள்ளது. இரண்டு உலக யுத்தங்களை ஐரோப்பா எதிர்கொண்ட சமயம் இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாக சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இங்குள்ள சமூகங்கள் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தனர்.

இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் அதிகரிப்பதற்கு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்ச் சமூகம் உட்பட இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பமளிக்க வேண்டும். இலங்கையில் 40 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இதில் எவரும் புத்தமதத்தை பின்பற்றுவதில்லை. அரசாங்கம் சம உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழி ரீதியில் சிங்கள மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் தமிழ் கற்பிக்க வேண்டும்.

திறமையான நிர்வாகத்துக்கு இது உதவுவதுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ளவும் வழிவகுக்கும். இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் கிட்டும். ஜி.எஸ்.பி.பிளஸ் என்பது சிநேகபூர்வ தன்மையில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை பெற்றுக்கொடுப்பதன் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதாகும். இந்த உதவிகளை பெறுகின்ற நாடுகள் 12 உள்ளன.

டிசம்பர் 15 வரை ஜீ.எஸ்.பி.பிளஸ் தொடர்பில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதனால் அதனை அரசாங்கம் மேற்கொண்டால் சாதகத்தன்மை ஏற்படும். ஒன்றைப் பெற்றுக் கொடுத்து மற்றொன்றை எடுப்பதே சிநேகபூர்வ தன்மையின் விசேட அம்சமாகும்.

-தினக்குரல்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.