Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருகதை யாருக்கு உண்டு குற்றம் சொல்ல!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடகங்களின் பணி எதிவினை ஆற்றிக்கொண்டிருக்கின்றது!

என்ற அடிப்படையில் மிகக்கடுமையான விமர்சனம் யாழ்களத்தில் இடையிடையே சூடுபிடிக்கின்ற விடயம்.

அருள்ஸ், இதயச்சந்திரன் இவர்களது கட்டுரைக்கள் அலசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது, இவர்கள் கட்டுரைகளின் பலாபலன் எமக்கு பாதகமானது என்று பலமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தவகையாக வாதிடும் தரப்பு மிகத்தெளிவாக பாதகத்தின் வகையை காட்டவும் இல்லை. சரியான வழி இதுதான் என்று தமது அறிவுக்கு எட்டியவரையாவது விபரமாக தரவும் முயற்சிக்கவில்லை.

என்சிந்தனையின் ஊக அடிப்படையில் பகிரவரும் கருத்து,

தன் எதிரியை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கக் கூடிய ஒரு அஸ்திரம்;

அரசதரப்பின் கையிற்க்கு கிடைத்து விட்டதென்றால் அது போரில் வென்று விட்டதென்றே கொள்ளப்படலாம், அதன் பிரயோகத்துக்கு காலப்பொருத்தம் பார்க்க வேண்டிய தேவையே இல்லாத ஒரு வாய்ப்பான சூழல் அரசதரப்பிற்க்கு வாய்த்திருக்கின்றது

அப்படியே திருப்பிப் பார்த்தால் அது புலிகள் கையில் கிடைத்தால் தமிழர் வென்று விட்டதாக கொள்ளவே முடியாது. பொருந்தக் காலம் வரும் வரை காத்திருப்பு செய்யவேண்டியது மிக அவசியமாகிறது அதன் பிரயோகத்துக்கு.

இல்லை என்றால் JVP இன் கிளர்ச்சிக்கு நேர்ந்த கதிபோல் முடிவு என்னவும் ஆகலாம், எமது கனவின் பாதி அளவே கிடைக்கின்ற ஒரு புதிய சூழலும் உருவாகலாம்,

எனவே “ஓடுமீன் ஓடி உறுமீன் வருமட்டும் வாடி நிற்க்குமாம் கொக்கு” அது போலவே புலிகளின் காத்திருப்பு என என் மனதுக்கு படுகின்றது,

புலிகளுக்கு மட்டுமே கிடைத்த ஒரு வசதியான நிலமை, அது என்னவென்றால் செயலில் ஒன்றும் சாதிக்காமல் வெறும் பிரசாரத்தால் பொய்யை நியமாக உருவகப்படுத்தும் வசதி அரசுக்கு உண்டு, அத்துடன் நடைமுறையில் நிலங்களையும் கையகப்படுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கின்றது, இருந்தும் மக்கள் புலிகள் மீது கொண்ட போர்ப்பல நம்பிக்கை சிறிதும் காயப்பட வில்லை. இந்த நிலையும் புலிகள் நிதானமான செயற்பாட்டுக்கு மிக உடந்தையாக விளங்குகின்றது.

இந்த சூழல் அரசுக்கு உண்டா என்று பார்த்தால் நிட்சயமாக பரிதாபாத்துக்குரியது தொடர்ந்து வரும் சிறிதோல்விகள்கூட மகிந்தாவின் ஆட்சியை அடித்துச் சென்றுவிடும். எனவே போருக்கு இருக்கும் உண்மையான இலக்குக்கு அப்பால் தமது சூழலை சரிப்படுத்தும் இலக்கு ஒன்று அந்தப் போருக்கு பலியாக கொடுக்கப்படவேண்டி சூழல் அரசதரப்பிற்க்கு உண்டு.

எனவே குற்றம் குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் உபயோகப் படக்கூடிய வகையிலான செயற்பாடுகள் எவை? உண்மையில் பல்துறைசார் விற்பனர்கள் இந்தக் களத்திலே இருக்கின்றார்கள் அவர்கள் திறமைகளை உள்வாங்கி பிரமாண்டமான திட்டங்களை நாம் நடத்திச் செல்லலாம் அந்த வகையில் முயற்சிப்போமா?

குற்றம் சொல்லவாருங்கள் பக்கம் நிறையும்!

குறுக்ஸின் எமது பணி என்ன தாயகத்துக்கு! என்ற பக்கத்தைப் பாருங்கள் படிக்கவும் ஆட்கள் இல்லை, பதிவிடவும் ஆட்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸின் எமது பணி என்ன தாயகத்துக்கு! என்ற பக்கத்தைப் பாருங்கள் படிக்கவும் ஆட்கள் இல்லை, பதிவிடவும் ஆட்கள் இல்லை!

ஒரே காரணம் குறுக்ஸின் நக்கலும் நளினமும் தான். உ+ம்: புலம் பெயர்ந்தவர்களை மந்தைகள் என்பது, கோவணத்துடன் தமிழர்கள் ஓடுகிறார்கள் என்பதும், கோயில் மணியில் ஆட்டிலறி செய்யலாம் போன்ற நக்கல்கள் இவரின் நம்பக தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது. எமது மக்களை அரவணைத்துக் கொண்டு செல்வதை விட்டு விட்டு நக்கல் நளினங்கள் எங்களை எவ்விடமும் கொண்டு செல்லாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

எனவே ஓடுமீன் ஓடி உறுமீன் வருமட்டும் வாடி நிற்க்குமாம் கொக்கு அது போலவே புலிகளின் காத்திருப்பு என என் மனதுக்கு படுகின்றது,

அதுவே எனது கணிப்பும்.புலிகள் எத்தகைய சூழ்நிலையிலும் பதகளிக்காது, மனம் தளராமல் முடிவெடுப்பதில் வல்லவர்கள். அதுவே அவர்களின் வெற்றியின் இரகசியம்.

Edited by nunavilan

ஒரே காரணம் குறுக்ஸின் நக்கலும் நளினமும் தான். உ+ம்: புலம் பெயர்ந்தவர்களை மந்தைகள் என்பது, கோவணத்துடன் தமிழர்கள் ஓடுகிறார்கள் என்பதும், கோயில் மணியில் ஆட்டிலறி செய்யலாம் போன்ற நக்கல்கள் இவரின் நம்பக தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது. எமது மக்களை அரவணைத்துக் கொண்டு செல்வதை விட்டு விட்டு நக்கல் நளினங்கள் எங்களை எவ்விடமும் கொண்டு செல்லாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

இதையே எனது கருத்தாகவும் கொள்ளுங்கோ....!!

நீங்களும் செயலாற்றுங்கோ எண்று எல்லாரையும் அழைக்கும் போது, இங்கை இதயசந்திரனையும் , ஆரூசையும் குறை சொல்ல மட்டும் ஆக்கள் வருவதும், குறை சொல்பவர்கள் ஒரு கட்டுரையை தானும் எழுத முயலாததும் தான் பிரச்சனை...!!!

எதையுமே செய்யாதவன் மத்தியில் எதையாவது செய்பவன் மீது குறை பிடிக்கிறார்களாம்.... என்ன கேவலம் அது...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.