Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமல் வீரவன்சவின் இருபதுக்கு இருபது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்சவின் இருபதுக்கு இருபது

- வேலவன் -

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று மகிந்தவின் அரவணைப்பிலிருந்து கொண்டு கட்சியை ஆரம்பித்துள்ள விமல் வீரவன்ச தனது கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார்.

கடந்த 20 ஆம் திகதி ஆரம்பித்த இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவித்திருக்கிறார்.

இந்த நடவடிக்கைக்கு அவர் ~20 இற்கு 20| என பெயர் சூட்டியுமுள்ளார். இது துடுப்பாட்டத்தின் பாதிப்பால் இடப்பட்ட பெயராகும்.

அதாவது, இப்போது 20 இற்கு 20 துடுப்பாட்டம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்று வருவதால் இளைஞர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

இந்த ஒரு மாதகாலப்பகுதியில் விமல் வீரவன்சவைத் தலைவராகக் கொண்ட தேசிய விடுதலை முன்னணிக்கு ஒரு இலட்சம் உறுப்பினர்களைத் திரட்டுவது என்பது இலக்காகும். வழமையாக ஜே.வி.பி.யின் அதிரடி அறிவிப்புகள் போலத்தான் இது அமைந்திருக்கின்றது.

ஜே.வி.பி வழமையாக ஏதாவது ஒரு விடயத்தில் போராட்டம் நடத்துவது என்றால் 10 ஆயிரம் சுவரொட்டி ஒட்டுதல் ஆயிரம் பொதுக்கூட்டங்கள் நடத்துதல் ஒரு இலட்சம் பேரைத் திரட்டிப் போராட்டம் நடத்துதல் என்றவாறு தான் அறிவிக்கும்.

எனவே, அதேபாணியில் தான் தேசிய விடுதலை முன்னணியின் நடவடிக்கைகள் அமையப்போகின்றது என்பது வெளிப்படை.

ஜே.வி.பி கட்சி அங்கத்தவர்களை இணைப்பதென்றால் என்ன தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்களை எடுப்பதென்றால் என்ன முதலில் ஒரு தொகுதி அங்கத்தவர்களை எடுத்து, பின்னர் ஒவ்வொரு அங்கத்தவரும் நான்கு பேரை கட்சியில் இணைப்பது என்ற அடிப்படையில் கிளைபோல் விரிந்து சென்றே அங்கத்தவர்களைத் திரட்டி வந்தது.

ஆனால், விமல் வீரவன்சவிற்கு இப்போது அதற்கு நேரமில்லை என்பதால் அதிரடியாக ஒரு மாதகாலத்தில் ஒரு இலட்சம் பேரைத் திரட்ட அது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சிக்கு எவ்வளவு தூரம் சிங்கள மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பது இதுவரை வெளிப்படவில்லை. ஆனால் ஜே.வி.பி.க்கு அங்கத்தவர்களை இணைத்தது போல இந்த முயற்சி சுலபமாக இராது என்றே கூறப்படுகிறது.

ஏனெனில், ஜே.வி.பி ஆரம்பிக்கப்பட்ட வேளையில் அவ்வாறு ஒரு அமைப்பு ஆரம்பிக்க வேண்டியதன் தேவை அல்லது காரணம் போன்று வலுவான காரணம் இப்போது ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று வேறொரு கட்சி ஆரம்பிப்பதற்கு இல்லை என்றே கூறவேண்டும்.

அத்துடன் ஆட்சியாளர்களுடன் இணைந்து நின்று கொண்டு பாதிக்கப்பட்டோர் இணைந்து கொள்ளத்தக்க வகையில் கட்சியொன்றுக்கு அங்கத்தவர்களைச் சேர்ப்பதும் சுலபமானதல்ல.

அதேவேளை, விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி தேர்தல்களில் உடனடியாகப் போட்டியிடுவது என்பதும் சாத்தியமானதாகத் தென்படவில்லை.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிளவு ஏற்பட்டு உடனடியாக நடந்தமையால் பங்குபற்ற முடியாவிட்டாலும் வடமத்திய மாகாணசபை சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுகின்ற நாட்களில் தான் அதன் 20 இற்கு 20 முடிவுக்கு வருகின்றது.

அதற்குப் பின்னர் ஏனைய மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவற்றில்கூட தேசிய விடுதலை முன்னணி போட்டியிடுமா? என்பது சந்தேகமே.

ஏனெனில், இப்போது மகிந்த ராஜபக்சவின் அரவணைப்பிலுள்ள விமல் வீரவன்ச மகிந்தவின் கட்சிக்கு எதிராகத் தனித்து நின்று போட்டியிடுவது முடியக்கூடியதல்ல. அதேவேளை, தற்போதைய நிலையில் மகிந்தவின் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

உண்மையில் மகிந்தவின் நிழலில் ஆனால் மகிந்தவுடன் இணையாமல் கட்சியை வளர்ப்பது என்பது விமல் வீரவன்சவின் வியூகமாகும். இதனைத் தான் அவர் ஜே.வி.பி.யில் இருந்தபோது வகுத்து வைத்திருந்தார்.

ஏனெனில், இப்போது ஆட்சியுடன் இணைந்து கொள்வது, ஆட்சியின் தவறுகள் அனைத்துக்கும் கணிசமான அளவு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவே முடியும்.

எனவே, அடுத்த பொதுத்தேர்தல் வரை கட்சியை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்த விமல் வீரவன்ச முடிவு செய்திருக்கிறார். இந்நிலையானது கட்சியின் துரித வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. இன்றுள்ள நிலையில் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு சொல்லையும் தெரிவிக்கக்கூடியதாக விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி இல்லை. எனவே, சமாளித்து நடந்து கொள்ளவே விமல் வீரவன்ச முடிவு செய்துள்ளார் என்றே கூறலாம்.

இப்போதைக்கு விமல் வீரவன்ச கையில் எடுக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் இந்திய எதிர்ப்பாகும். அதற்குத் தெரிவிக்கக்கூடிய எதிர்ப்பைக்கூட மகிந்த அரசிற்கு நோகாமலே தெரிவிக்கவேண்டிய நிலை உள்ளது.

இதேவேளை, விமல் வீரவன்சவின் தாய்க் கட்சியாகிய ஜே.வி.பி.யின் நிலையும் அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

கிழக்கு மாகாணத் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த பின்னடைவும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் உள்ளநிலை. அரச எதிர்ப்புப் போராட்டங்களை ஜே.வி.பி. நினைப்பது போல் நடத்தமுடியாத நிலையும் ஜே.வி.பி.க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தனித்து நின்று போட்டியிடுவதாலும் ஜே.வி.பி.யில் ஏற்பட்ட பிளவும் அதனைப் பலவீனப்படுத்தியுள்ளது.

அதேவேளை, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தாக்கப்படுகின்றன அமைப்பாளர் தாக்கப்படுகின்றார். ஏறத்தாழ 2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சூழ்நிலைக்கே ஜே.வி.பி சென்று விட்டது.

இதிலிருந்து மீண்டெழ ஒரே வழியாக அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை. அதற்கான படிப்படியான முயற்சிகளில் ஜே.வி.பி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், மகிந்தவின் ஆட்சியானது பொருளாதார ரீதியில் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஒன்றாகவுள்ளபோதும் அது நடத்துகின்ற யுத்தம் காரணமாக அதனை எதிர்த்து பாரியளவிலான போராட்டம் நடத்துவது என்பது ஜே.வி.பி.யின் தேசப்பற்றைக் கேள்விக் குறியாக்கிவிடும். இதனால் போராட்டங்களையும் விரிவாக நடத்துவது என்பது தர்மசங்கடமான நிலையிலேயே உள்ளது.

இவ்வாறான நிலையில் ஜே.வி.பி. மூன்றாமிடத்திலிருந்து இரண்டாமிடத்திற்கு வரும் கனவு சாத்தியப்பாடற்றதாகியுள்ளது. இப்போது ஜே.வி.பி தன்னைச் சுதாகரித்துக் கொள்வதற்கான நேரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு நடைபெறும் போரில் மகிந்த அரசு தோல்வியுற வேண்டும். முன்னரே இந்த யுத்தத்தில் மகிந்த தோல்வியடைவார். அப்போது யுத்தத்தைத் தலைமையேற்று நடத்தத் தாங்கள் தயாராக இருப்போம் என ஜே.வி.பி. கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, மகிந்த ஆட்சி யுத்தத்தில் தோல்வியடைய வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் எதிர்ப்பார்ப்பாக இருக் கின்றது எனக் கூறலாம்.

நன்றி: வெள்ளிநாதம் (10.08.08)

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ச எனும் கழுதை கெட்டு குட்டி சுவராகியுள்ளார். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.