Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குத்தம் இப்போ சுத்தம் ஆச்சு !

Featured Replies

01dm7.png

55864780mr4.png

ழைப்பும் சிரிப்புமாக என்னை வரவேற்றது குத்தம்பாக்கம் கிராமம்!

இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது!

எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய் வந்து என் கை குலுக்குகிறார் இளங்கோ. குத்தம்பாக்கம் பஞ்சாயத்து அகாடமி தலைவரான இளங்கோவை இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் 'வந்துட்டுப் போங்களேன் சார்' எனப் பேச அழைக்கின்றன.

''வாங்க சார்... ஊருக்குள்ளே நடந்தபடி பேசுவோம்'' எனக் கிராமத்தின் பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தார். குண்டு குழியில்லாத சாலைகள், வழிதோறும் தண்ணீர்க் குழாய் கள் என ஆச்சர்யங்கள் தொடர, பேச ஆரம்பிக்கிறார் அந்த ஒரிஜினல் ஹீரோ!

''அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி, பொன்னான உலகென்று பெயரும்வைத்தால், இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்!'னு எம்.ஜி.ஆர். பாடுவாரே... அது சத்தியம். குடிசைங்கிறது ஏழ்மையின் அடையாளம். ஒரு நாட்டோட வறுமைக்கு சாட்சிகள், குடிசைகள். சுதந்திரம் வாங்கி 61 வருஷம் ஆச்சு. இன்னும் நம்ம நாட்ல எத்தனை மக்கள் குடிசையிலும் கூரையில்லாமலும் கிடந்து கேவலப்படுறாங்க. கிராமப் பஞ்சாயத்தோட முதல் வேலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான கல் வீடு கட்டிக்க உதவி செய்றதுதான். அதைத்தான் நாங்க பண்ணினோம். இப்போ எங்க கிராமத்தில் ஒரு குடிசைகூட கிடையாது. எல்லோருக்கும் கல் வீடுதான்!'' என ஆரம்பித்தவர், மாற்றம் உருவான கதையைச் சொல்கிறார்...

''குற்றங்களும் தவறுகளும் எங்கே சார் உருவாகுது... வேலையில்லாததும் வறுமையும்தானே முதல் காரணம். நோய் என்னன்னு தெரியாம, மருந்துக்கு அலைஞ்சா எப்படிச் சரியாகும்? அதைக் கண்டுபிடிச்சு சரி பண்ணினதுதான் மாற்றத்துக்கான முதல் விதை. குடிசைகள்தான் கூடாது. கிராமங்களுக்கு குடிசைத் தொழில்கள் அவசியம் வேணும். அதை உருவாக்கி இந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்தோம். எங்க ஊர்ல விளையுற நெல்லை அரைக்க, நாங்களே ரைஸ் மில் ஆரம்பிச்சோம். துவரம்பருப்பை பாலிஷ் போடும் தொழிற்சாலையிலிருந்து வீடு கட்டப் பயன்படுத்தும் கட்டடப் பொருட்கள் வரை அத்தனையையும் நாங்களே தயாரிக்கிறோம். ஊர்ல காய்க்கிற தேங்காய்களில் இருந்து மொத்தமா எண்ணெய் எடுக்கிறோம். எண்ணெயில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம். மண்ணெணெய் ஸ்டவ்விலிருந்து தெரு விளக்குகளைப் பொருத்தத் தேவையான அலுமினியக் கூடுகள் வரை செஞ்சு வெளியூர்களுக்கு சப்ளை பண்றோம்.

எங்கள் கிராமத்து செய்நேர்த்தியைப் பார்த்துட்டு வெளிநாடுகள் வரை இப்போ ஆர்டர்கள் வருது. பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்துக்குத் தேவைப்படும் பாண்டேஜ் துணி முதல் ஸ்ரெட்ச்சர் துணி வரை பேக் பண்ணி அனுப்புவது குத்தம்பாக்கத்துப் பெண்கள்தான். ராணுவத்தினர் அடிபட்டால், உடனடி நிவாரணத்துக்குத் தேவைப்படும் 'திடீர்' ஐஸ் கட்டிகளையும் செய்து அனுப்புகிறோம். படித்த பெண்களுக்கு வேலை கொடுக்க பி.பி.ஓ. ஆரம்பிச்சிருக்கோம்'' என அழைத்துப் போய் சுற்றிக் காட்டுகிறார்.

இளங்கோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ''சார், இது என் சொந்த ஊர். என்னை வளர்த்த மண். கெமிக்கல் இன்ஜினீயரா நான் நல்லா இருக்கேன். ஆனா, என் ஊர் அப்படியே இருக்குதேன்னு வருத்தப்பட்ட நான், வேலையை வீசிட்டு ஊருக்கே வந்தேன். சாராயமும் சாதிச் சண்டையுமா கிடந்த கிராமத்தில் என்னால் முதலில் எதுவும் பண்ண முடியலை. அதிகாரம் கையில் இருந்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு தோணுச்சு. தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவங்ககூட என் நல்ல நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஊர் நன்மைதான் முக்கியம்னு ஒவ்வொரு வங்கியா ஏறி இறங்கினேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு கதவையும் ஓயாமத் தட்டினேன். அரசிலும் வங்கிகளிலும் என்னவெல்லாம் திட்டங்கள் இருக்கோ, அத்தனையையும் குத்தம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தேன். நினைச்சது நான்... ஆனா, ஊரே ஒண்ணு கூடி நடத்திக்காட்டினாங்க. இன்னிக்கு, சுத்துவட்டாரமே மரியாதையா, முன்னோடியாப் பார்க்கிற அளவுக்கு குத்தம்பாக்கத்தைச் சுத்தம்பாக்கம் ஆக்கிட்டோம்!'' என்கிறார் இளங்கோ நெகிழ்ச்சியாக!

''இந்த ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, தமிழ்நாடு முழுக்கப் பரவணும் சார். உண்மையில் கிராமத்தின் தேவைகள் ரொம்பக் குறைவு. போக்குவரத்து, சரியான சாலை வசதி, மின்சாரம், சுத்தமான தண்ணீர், சின்ன மருத்துவமனை, ஆர்வமுள்ள ஆசிரியர்களைக்கொண்ட தரமான பள்ளிக்கூடம். இதுதான் முதல் தேவைகள். விவசாயத்தை நவீனமயமாக்கவும், அதை லாபகரமான, மரியாதைக்குரிய தொழிலா மாற்றுவதும் அப்புறம் தன்னால நடக்கும். மாற்றம் என்பது முதலில் நம் மனசுக்குள் இருந்து ஆரம்பிக்கணும் சார்.

நம் வாழ்வாதாரமே கிராமங்கள்தான். காந்தி கண்ட உண்மையான கிராம ராஜ்யம் இன்னும் கனவாவே இருந்தா எப்படிங்க. வாங்க, எல்லோருமா சேர்ந்து அந்தக் கனவை நனவாக்குவோம்!'' என இளங்கோ அழைக்கிறார்!

நன்றி ஆனந்தவிகடன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பெய்கின்ற மழை கூட இப்படிப்பட்டவர்கள் இன்னும் இருப்பதால் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.