Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் வெறித் தீவிரப் போக்குப் போன்றே தேர்தல்களையும் அணுகுகிறது அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் வெறித் தீவிரப் போக்குப் போன்றே

தேர்தல்களையும் அணுகுகிறது அரசு

18.08.2008

சிங்களவர்கள் அதிகமாக வாழும் இரண்டு முக்கிய மாகாணங்களில் எதிர்வரும் சனிக்கிழமை இன்னும் ஐந்து நாட்களில் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

வடமத்திய மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இரண்டிலும் நடைபெறும் மாகாணசபைத் தேர்தல்களை ஒட்டிப் பெரும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான வன்முறைகளுடனும் அராஜகங்களுடனும் நடத்தி முடிக்கப்பட்ட முன்னைய தேர்தல்களாக இரண்டு கருதப்படுகின்றன.

முதலாவது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், அப்போது அவரது அணியில் இருந்த எஸ்.பி.திஸநாயக்கா போன்றோரின் நெறியாள்கையில் அரங்கேற்றப்பட்ட வயம்பா மாகாணத் தேர்தல்.

அடுத்தது அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.

இந்த இரண்டையும் விஞ்சும் அளவுக்கு தற்போதைய வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்களில் வன்முறைகளும் அரச ஆதரவிலான அராஜகங்களும் எல்லை மீறி அரங்கேறுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வன்முறைப் பிரயோகத்தில் அரசுத் தரப்புத் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.

எந்த வழியிலாவது எப்பாடு பட்டேனும் வெற்றியைத் தமதாக்கி விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் அரசுத் தரப்பு அதற்காக சகல குறுக்கு வழிகளையும், சட்டவிரோத நடவடிக்கைப் போக்குகளையும் கையாள்கின்றது என்பது வெளிப்படையாகவே தோற்றுகின்றது.

மேற்படி மாகாண சபைகள் இரண்டும் கலைக்கப்பட்டு, அவற்றுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசினுடைய இரகசியப் பிரிவுகள் இந்த இரு மாகாணங்களிலும் திரட்டிய கருத்துக் கணிப்புகள் மற்றும் அறிக்கைகள் என்பன அரசுத் தலைமைக்குப் பெரும் பேதியை தலையிடியை கொடுத்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இந்த இரு மாகாண சபைகளையும் ஒருவருடம் முற்கூட்டியே கலைத்து, வீண் வம்பை ஏன் விலைக்கு வாங்கிக் கொண்டோம் என்று அரசுத் தலைமை எண்ணும் அளவுக்கு தேர்தல் கள நிலைமை அரசுக்கு எதிராக பாதகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை அரசுத் தலைவரே உணரும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அண்மையில் தமது அரசின் ஏனைய தலைவர்களுக்கு சகாக்களுக்கு ஜனாதிபதியே இந்நிலைமை குறித்து நேரடியாகக் கருத்துத் தெரிவித்து வேதனைப்பட்டார் என்று கூறப்படுகின்றது.

இரு மாகாணங்களிலும் அரசுத் தரப்புக்கும் எதிர்த்தரப்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கடும் போட்டி நீடிப்பதாகவும்

இந்தத் தேர்தலில் அரசுத் தரப்பு வெற்றியீட்டுவதோ, அறுதிப் பெரும்பான்மை பெறுவதோ துர்லபம் எனவும்

அரசுத் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புலனாய்வு அறிக்கைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

நாட்டின் அரசியல் நிலைவரம் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள இன்றைய நிலையில் எப்படியும் இத் தேர்தலில் வென்றால்தான் தனது ஆட்சி அதிகாரத்தைப் பறிபோக விடாமல் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று கருதும் அரசு, அந்தத் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தலையால் கிடங்கு கிண்டும் முயற்சி வரை சென்றுவிட்டது.

கடைசியாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மாகாணத் தேர்தல் முடிவு அரசுக்கு நெருக்கடியைத் தரக்கூடியதாக அமைந்துவிடலாம் என்பதை புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

எப்படியும் என்ன வழி பண்ணியேனும் இத் தேர்தலில் வெல்ல வேண்டும் என அங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக இரு மாகாணங்களிலும் போய் நின்று நேரடியாகக் களம் இறங்குமாறு தனது கட்சியின் அமைச்சர்களை வலியுறுத்தினார். தேர்தல் சமயத்தில் தேர்தல் களப் பிரதேசத்தில் தமது அமைச்சர்களை நின்று பணியாற்றச் செய்வதற்காக நாளை மறுதினம் நடக்கவேண்டிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தையும் இந்த வாரம் நடத்தாமல் தள்ளி வைத்திருக்கின்றார்.

இத் தேர்தல் முடிவுகள் அரசுக்கு சாதகமான நிலையில் இல்லை என்பதால்

எப்பாடுபட்டேனும் வாக்குகளைத் திரட்டி அரசை வெல்ல வைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் வற்புறுத்தி, வலியுறுத்தப்பட்டிருப்பதால்

அதற்காக வாக்குகளைத் திரட்ட வன்முறை அட்டகாசங்களைக் கைக்கொள்வதற்கு அரச உயர்பீடமும் அமைச்சர்களும் தீர்மானித்திருக்கின்றனர் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் விடுத்த அறிக்கைகளிலும் இத்தகைய வன்முறைகள் எல்லை மீறியிருக்கின்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது.

யுத்தத்தைப் போர்வெறித் தீவிரத்துடன் முன்னெடுக்கும் அரசு, ஜனநாயகத் தேர்தல்களையும் அதே தீவிரத்துடனும் வன்முறை அராஜகங்களின் அரங்கேற்றுதலுடனும் நடத்தி முடிக்க முற்படுவதில் ஆச்சரியமில்லைத்தான்.

http://www.sudaroli.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.