Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயோதிபப் பெண் மீது பாலியல் வல்லுறவு தொடர்பில் இராணுவ உத்தியோகத்தருக்கு 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வயோதிப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்..இளஞ்செழியன் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளி்ததுள்ளார்.

சீருடையில் - ஆயுதத்துடன் ரோந்து நடவடி்க்கையில் ஈடுபட்டிருந்த வேளை - பாலம்போட்டாறு பத்தினிபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணைக் கையில் பிடித்து இழுத்து தூக்கிச் சென்று பற்றையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக இராணுவ லான்ஸ் கோப்ரல் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிங்ககந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த இராணுவ உத்தியோகத்தர் வேறு இராணுவச் சிப்பாய் ஒருவருடன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக வழக்கு விசாரணையின்போது சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழ்ககு தொடர்பான விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமியின் நெறிப்படுத்தலில் வழக்குத் தொடுனர் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன.

பாதிககப்பட்ட பெண்ணுக்கு சம்பவம் நடைபெற்ற போது வயது 56. இப்போது சாடசியமளிக்கையில் அவருக்கு 64 வயது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் - ஆடு மேய்த்துக் கொண்டு வந்த நேரம் அந்த வழியால் ரோந்து நடவடிக்கையில் இராணுவ சீருடையில் ஆயுதங்களுடன இரண்டு இராணுவ்ததினர் வந்ததாகவும். அவர்களில் ஒருவர் தன்னை அழைத்ததுடன் தன்னருகில் வந்து தனது கையைப் பிடித்து இழுத்து அருகில் இருந்த பற்றையை நோக்கித் தூக்கிச் சென்று தன் கத்திக் கதறியபோதிலும் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எதிரி தன்னைத் து}க்கிச் சென்றபோது 'நான் உனக்கு அம்மா மாதிரி. என்னை ஒன்றும் செய்யாதே" என மன்றாடியபோது 'என்னடி அம்மா என்று சொல்லுறாய்" என பேசிவிட்டு தன்னை நிலத்தில் போட்டு தனது எதிர்ப்புக்கு மத்தியில் தன்னைக் கற்பழித்தாகவும் - அப்போது தனது மகளின் பெயரைக் கூறி - கத்தி சத்தமிட்டு அழைத்தபோதிலும் எவரும் தன்னைக் காப்பாற்ற வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தி்ன் பின்னர் சிங்ககந்த இராணுவ முகாமுக்குச் சென்று அந்த முகாம் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டதையடுத்து - எதிர் கைது செய்யப்பட்டதாகவும் - அந்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தன்னை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து - தனக்கு நேர்ந்தது குறித்து பொலிசாரிடமும் முறையிட்டதாகவும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. அதன் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற 10 பேர் கலந்து கொண்ட அடையாள அணிவகுப்பின்போது - எதிரியை தான் அடையாளம் காட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

எதிரியுடன் சம்பவ தினத்தன்று ரோந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் இநத வழக்கு விசாரணையின்போது சாட்சியமளிக்கையில் - ரோந்து காவல் கடமையில் அன்று நங்கள் இருவர் ஈடுபட்டிருந்தோம். ரோந்து கடமைக்குப் பொறுப்பதிகாரியாக எதிரியே அன்று செயற்பட்டார். வழியில் ஆடு மேய்த்துக் கொண்டு வந்த வயோதிபப் பெண்ணை எதிரி கையில் பிடித்து பற்றைக்குள் இழுத்துச சென்றதைத் தூரத்தில் இருந்து கண்டேன். சற்று நேரத்தின் பின்னர் அந்தப் பற்றைப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது பாதிக்கப்பட்ட பெண் சேலையைக் கையில் பிடித்தபடி பற்றைக்குள் இருந்து ஓடிச் சென்றதைக் கண்டேன். அன்று நாங்கள் முகர்முக்குத் திரும்பியதும் முகாம் பொறுப்பதிகாரியிடம் நடந்த சம்பவம் பறறி தெரிவித்தேன். அன்று அந்தப் பெண்ணும் இராணுவு முகாமுக்கு வந்திருந்ததையும் கண்டேன் என கூறியுள்ளார்.

இந்த வழ்ககில் சம்பந்தப்பட்ட எதிரி குற்றச் செயல் நடைபெற்ற வேளை கடமையி்ல் சீருடையில் ஆயுதத்துடன் இருந்துள்ளார். இதன் காரணமாக அரச உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் குற்றம் புரிவது பாரதூரமான செயலாகும் என்ற சட்ட நியதியின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழ்க்கில் எதிரிக்கு எதிராக விசேட சட்டப்பிரிவின் கீழ் பாலியல் குற்றம் தொடர்பாக குற்றம் சுமத்தி வழ்ககு தாக்கல் செய்திருந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் விசேட சட்டப்பிரிவி்ன் கீழ் இந்த பாலியல் வல்லுறவு குற்றச்சர்ட்டு வழக்கில் குற்றம் சுமத்தியிருப்பதையும் பாதிக்கப்பட்ட பெண் 56 வயதுடைய வயோதிபப் பெண் என்பதையும் அர உத்தியோகத்தராகிய கடமையில் இருந்த எதிரிக்கு அப்போது வயது 24 என்பதையும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் சுட்டிக்காட்டி - இது ஒரு பாரதூரமான குற்றச் செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாலியல் வல்லுறவு என்பது சர்வதேச குற்றச் செயலாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக யுத்த குற்றச் செயல்களை விசாரணை செய்யும் சர்வதேச நீதிமன்றத்தினால் பாலியல் வல்லுறவு என்பது ஒரு யுத்த குற்றச் செயலாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த பாலியல் வல்லுறவு வழக்கில் - எமது நாட்டின் இன்றைய பிரதம நீதியரசரினால் பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் பின்பற்றி தீர்ப்பு வழங்கப்படுகின்றது என்றும் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் பாலியல் வல்லுறவு வழக்கொன்றில் வழங்கியுள்ள அந்தத் தீர்ப்பில் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது பொது ம்ககளின் சமூக ஒழுங்குக்கு எதிரான ஒரு குற்றச் செயலாகும் என்பதுடன் - பாலியல் வல்லுறவு குற்றச் செயல் தொடர்பாக சமூகம் இந்தச் செயலை அங்கீகரிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துவதுடன் - இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக ஏனைய குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைவதுடன் - எதிரியைத் தண்டித்து சமூகத்தில் பெண்களை இத்தகைய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்க வேண்டு்ம் என்பன போன்ற விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம நீதியரசரின் முன்னைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விடயங்களையும் நீதிமன்றம் இந்த பாலியல் வல்லுறவு வழக்கில் கவனத்தில் எடுத்து - குற்றச் செயலின் பாரதூர தன்மையைக் கருத்திற் கெர்ண்டு எதிரிக்கு 20 வருட கடு்ங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது என நீதிபதி எம்.இளஞ்செழியன் தனது 50 பக்க தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துவதுடன் - பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்டயீடாக ஒரு லட்ச ரூபா பணம் செலுத்த வேண்டு்ம் - அதனைச் செலுத்தத் தவறினால் - ஒரு வருட கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி எம்.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளில் 5 ஆவது பாலியல் வல்லுறவு வழக்குத் தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

http://puspaviji13.net84.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.