Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அரசும், தவறான கூட்டாளிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசும், தவறான கூட்டாளிகளும்

- மருதமுத்து

தென்ஆசிய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடக்கிறது. இந்தியப் பிரதமர் இன்முகத்தோடு பங்கேற்கிறார்.

ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டுப் போகிறார்.

இந்திய-இலங்கை கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் சிங்கள விளையாட்டுச் சங்கம் (Sinhalese Sports Club ) என்கிற அரங்கில் நடந்தேறுகிறது.

இந்திய-இலங்கை உறவைப் போற்றி சென்னையில் இலங்கைத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இத்திரைப்பட விழாவை ஏற்பாடு செய்த இலங்கை துணைத்தூதுவர் அம்சா தமிழ், தமிழகம் பற்றியெல்லாம் பேசுகிறார்.

ஆனாலும் -

வங்கக் கடலின் இருபுறமும் இவர்கள் தமிழரைக் கொல்வதை மட்டும் நிறுத்தவில்லை. அங்கே ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்கள், இங்கே தமிழக மீனவர்கள் படுகொலை.

கலைஞரின் அரசு வெற்றுச் சடங்காக ஓர் ஆரவார ஆடம்பர உண்ணாவிரதத்தை அரங்கேற்றி ""எதிர்ப்பு''த் தெரிவிக்கிறது. தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார். அப்படியென்றால் கலைஞர் யாருக்குத்தான் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்? மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் இவரைத் தலைமீது வைத்துப் போற்றிப் பாராட்டுகிறார்கள். அவர்கள் மீது உண்மையான அழுத்தம் கொடுக்க இவர் தயாராக இல்லை.

கலைஞரின் விசுவாசத்துக்குப் பரிசாக மத்திய அரசு ஒரு நடவடிக்கை எடுக்கிறது.

தமிழக மீனவர்களின் உயிர்ப்பலி பற்றி கவலையில்லாத இவர்களுக்குத் தமிழ்மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டுமல்லவா? எனவே நடுவண் அரசு இலங்கைப் பிரதிநிதியை அழைத்துத் தனது ""எதிர்ப்பைத்'' தெரிவித்துவிட்டுக் கைகுலுக்கிக் கண்சாடை காட்டி அனுப்பி வைக்கிறது. அவ்வளவுதான். மற்றபடி எல்லாம் வழக்கம்போல் நடைபெறுகிறது - கொழும்பு மாநாடு, கிரிக்கெட் போட்டி, திரைப்பட விழாக்கள்...

ஆனால்-

ஈழத் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறத்தான் போகின்றன. தமிழக மக்களும், கட்சிகளும் விழித்தெழுந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவரை இத்தாக்குதல்கள் தொடரும், மேலும் தீவிரமடையவும் கூடும்.

இதற்கு அடிப்படையானதொரு காரணம் இந்திய அரசு இலங்கைத் தீவில் தவறான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்திருப்பதே யாகும். விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் அவர்கள் இதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுடன் தொலைபேசி உரையாடல் நிகழ்த்திய அவர் தெளிவாக இவ்வாறு கூறினார்: ""இந்திய அரசு தவறான கூட்டாளியைத் தேர்ந்தெடுத்துள்ளது.''

ஆம், பேரினவாதம் பேசும் சிங்கள ஆதிக்கச் சக்திகள் இந்திய மக்களுக்கு ஏற்ற ஜனநாயகக் கூட்டாளிகள் அல்லர். ஜனநாயக உரிமை காக்க வேறுவழியின்றி ஆயுதமேந்திப் போராடும் ஈழத்தமிழர்களும், அவர்களது போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரிக்கும் சிங்களரும் (அவர்கள் இன்று வெகுசிலரே ஆயினும்) மட்டுமே இந்தியா நாடவேண்டிய கூட்டாளிகள் ஆவர்.

இந்திய அரசு முன்பு கடைப்பிடித்த ஜனநாயக, சோசலிச, அணிசேராக் கொள்கைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு ஆதிக்கப்பாதையில் நடைபோடத் துவங்கியிருப்பதால்தான் இலங்கைப் பிரச்சினையில் நியாயத்தின் பக்கம் நிற்க மறுத்து, தவறான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் ஆதிக்கவாதிகளான சிங்கள அரசினரோ தங்கள் நட்புறவுக்குக் கொடியதொரு விலையைக் கேட்கின்றனர். தமிழர்களை ஒடுக்குவதற்கு எல்லா வகையிலும் இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதே அந்த விலை.

இதற்கும் இந்திய அரசு ஒப்புக்கொண்டு ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. ஆனால் சிங்கள அரசு எளிதில் நம்புவதாக இல்லை. அது இந்திய அரசின் ஆதரவை அவ்வப்போது சோதித்துப் பார்த்தபடியுள்ளது. தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கொல்வதும் அப்படிப்பட்ட சோதனை முயற்சிதான். ""தமிழர்களுக்கெதிராக நாங்கள் எந்த வன்கொடுமை செய்தாலும் நீங்கள் ஒத்துழைப்புத் தருவதை நிறுத்தவே கூடாது'' என்கிறது சிங்கள அரசு. இதற்கேற்ப தமிழக மீனவர்களைக் கொன்று ஆழம் பார்க்கிறது. இந்திய, தமிழக அரசுகள் இலேசாக முனகிவிட்டு ஓய்ந்து விடுகின்றன. விழாக்களும், விளையாட்டுகளும், மாநாடுகளும் தடையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தமிழரின் உரிமைப்போரை யாரும் முறியடிக்கவே முடியாது. ஆனால் சிங்கள ஆதிக்க வாதிகள் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள். அந்த முயற்சிகளுக்குத் தமிழக, இந்திய அரசுகளின் மறைமுக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அந்த ஒத்துழைப்பை அடிக்கடி சோதித்தும் பார்க்கிறார்கள். அதாவது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை அவர்களாகக் கைவிடப்போவதில்லை.

எனவே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டுமானால் சிங்கள அரசுக்கு நெருக்கடி தந்து ஆதிக்கப் பாதையிலிருந்து அதை விலக்கி ஜனநாயகப் பாதையில் செலுத்த வேண்டும். இதைச் சாதிப்பதற்கான முதல் நடவடிக்கை இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுத உதவிகளை உடனே நிறுத்துவதுதான். இந்திய அரசு இதனைத் தானே முன்வந்து செய்யப்போவதில்லை. தமிழக மக்களும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இந்த இலக்கை முன்வைத்து ஒற்றுமையோடு முயன்று மத்திய அரசின்மீது அழுத்தம் தரவேண்டும். இன்று இந்திய தமிழக அரசியல் நிலைமைகள் மிகவும் நெகிழ்ச்சி வாய்ந்தவையாக மாறியுள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் இந்த நெகிழ்ச்சியை நன்கு பயன்படுத்தித் திட்டவட்டமான இலக்குகளை அறிவித்துக் கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் ஆதிக்கவாதிகளை அம்பலப்படுத்தித் தமிழகத்தின் மீனவர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், சிறுஉடைமையாளர்கள், வணிகர்கள் முதலியோரையும், ஈழத்தமிழர் நலன்களையும் பாதுகாக்க முடியும்.

தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.