Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலுக்கு சவால் விடும் அரசு அதற்கு முன் அரசமைப்புக் கவுன்ஸிலை ஏற்படுத்தத் தயாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு சவால் விடும் அரசு அதற்கு முன்

அரசமைப்புக் கவுன்ஸிலை ஏற்படுத்தத் தயாரா?

26.08.2008

தமிழர் தாயகம் மீது தாம் தொடுத்திருக்கும் யுத்தத் தீவிரப் போக்கு, பெரும் வெற்றிகரமான பெறுபேறுகளைத் தமக்குத் தந்து வருகின்றது எனத் திருப்திப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு, மேலும் நல்ல ஊக்க மருந்தாக வந்து அமைந்திருக்கின்றது வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகியவை குற்றம் சுமத்துவது போல நடந்து முடிந்த இத் தேர்தல்களில் அராஜகங்களும், அட்டூழியங்களும், குளறுபடிகளும், அதிகாரத்துஷ்பிரயோகங்களும் அளவுக்கு மீறி இடம்பெற்றன என்று வைத்துக் கொண்டாலும் கூட

இத் தேர்தல் முடிவுகள், தமிழர் தாயகம் மீது இந்த அரசு தொடுத்திருக்கும் தீவிர யுத்த நடவடிக்கைகளுக்குக் கிடைத்த தென்னிலங்கை மக்களின் அங்கீகாரம் என்று கூறுவது தவறல்ல.

பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் பேரினவாதப் போக்கையும்

அதன் விளைவான தமிழர் தாயகம் மீது தென்னிலங்கைச் சிங்களத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்தும் கொடூர யுத்த நடவடிக்கைகளையும்

பின்பற்றி, செயற்படுத்துவதன் மூலம் தென்னிலங்கை மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் இலகுவாகச் சுருட்டிவிடலாம் என்று கருதும் அரசு, அதன்வழி தனது காய்கள் அனைத்தையுமே நகர்த்திச் செல்கின்றது.

போர் வெற்றிகளைப் பிரகடனப்படுத்திப் பொதுத் தேர்தல்களில் வென்று விடலாம் என்ற நம்பிக்கை கடந்த சனியன்று நடந்த மாகாணசபைகளுக்கான வாக்களிப்பின் முடிவுகளை அடுத்து அரசுத் தலைமைக்கு நன்கு ஏற்பட்டு விட்டது.

போர்வெற்றியை முன்னிறுத்தி பொதுத்தேர்தலில் வெல்லலாம் என்ற மிதப்பில், இப்போது பொதுத் தேர்தல் குறித்து வீம்பாகப் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள் அரசுத் தலைவர்கள்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கவும், ஜே.வி.பியும் சவால் விடுத்தால் அடுத்த மூன்று மாதங்களில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கும் அரசு தயார் என்று அரசுத் தலைவர்கள் பதில் சவால் விடுமளவுக்கு நிலைமை சென்றிருக்கின்றது.

ஆனால், அரசுத் தரப்பின் இந்தத் தேர்தல் அறைகூவலும், சவாலும், அரசுத் தரப்பிலேயே சில முக்கியஸ்தர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதும் இப்போது நோக்கத்தக்கதே.

ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவற்றிலிருந்து அரசுப் பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை ஏற்றவர்களுக்கே முன் கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தலாம் என்ற இந்தத் திட்ட அறிவிப்பு வயிற்றைக் கலக்குவதாக வந்து அமைந்திருக்கிறது.

தாய்க் கட்சிகளை விட்டுப் பிரிந்து அரசுத் தரப்பிலோ, அரசுத் தரப்புக் கட்சி ஒன்றிலோ இணைந்திருந்தாலும் அல்லது தனிக்குழுவாக இயங்கினாலும் இன்று திடீர்ப் பொதுத்தேர்தல் நடக்குமானால் தமக்கு அரசுப் பக்கத்திலும் முக்கியத்துவம் கிடைக்காது, தாய்க் கட்சியும் இடமளிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். பொதுத் தேர்தல் ஒன்று திடீரென வருமானால் தங்கள் கதி நட்டாற்றில் விட்ட மாதிரி ஆகிவிடும் என்பதுதான் அவர்களது கவலை.

கட்சி மாறி, அணி தாவி வந்த தங்களை அரசுத் தரப்பின் கட்சி ஆதரவாளர்களும் ஆதரிக்கப் போவதில்லை; தங்களது மூலக் கட்சியின் ஆதரவாளர்களும் ஏற்கப் போவதில்லை என்பதால் திடீர்த் தேர்தல் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தால் தங்களின் எம்.பி. பதவி அதனுடன் "அவுட்' என்ற கவலை அவர்களில் பெரும்பாலானோர்க்கு.

ஆறாண்டுகளும் முழுவதுமாக எம்.பி. பதவியுடன் அமைச்சர் பதவியையும் சேர்ந்து அனுபவிக்கலாம் என்ற நப்பாசையில் அரசுப் பக்கம் தாவினால், இப்போது அரசுத் தலைமையோ நேரத்துடன் முன்கூட்டியே அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி, நேரகாலத்துடனேயே தங்களை வீட்டுக்கு அனுப்ப வழி செய்கின்றதே என்ற ஆதங்கமும் கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேசமயம், அரசுடனும் அரசுப் படைகளுடனும் சேர்ந்தியங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கும் துணைப் படைகளுக்கும் திடீர்ப் பொதுத்தேர்தல் என்ற பேச்சு வாயில் சர்க்கரை போட்டமாதிரி தித்திப்பை ஏற்படுத்தியிருப்பதையும் மறுக்க முடியாது.

தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் கட்டவிழும் இந்தக் கொடூரமான சமயத்தில் தமிழ்த் தேசிய எழுச்சிச் சக்திகளின் குரல் வளையை அந்த அரச பயங்கரவாதக் கொடூரம் மூலம் நசுக்கி, இல்லாதொழித்துக் கொண்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பதவியைத் தாங்கள் பிடுங்கிக் கொள்ளலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர் ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள்.

இப்படி அதிகாரத் தரப்பில் பொதுத் தேர்தல் குறித்து ஆரவார எடுப்புகள் வெளிப்பட்டாலும்

பொதுத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு அரசுத் தலைமை சவால் விட்டாலும் கூட

அத்தகைய சவால் விடுகையும், போட்டியும் நியாயம், நீதியாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

இலங்கையில் நல்லாட்சி, நீதி, நியாயமான தேர்தல் ஆகியன உரிய நெறிமுறையில் நிலைநாட்டப்படல், வெளிப்படையான பொருளாதார நிர்வாக முறையும் கொள்கையும் பின்பற்றப்படல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் சேர்ந்து அரசமைப்புக்கு 17 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தன.

அந்தத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய அரசமைப்புக் கவுன்ஸிலை உருவாக்காமல் இழுத்தடிப்பதன் மூலம் இந்த நல்ல காரியங்கள் இடம்பெறாமல் முட்டுக்கட்டை போட்டு வருகின்றார் ஜனாதிபதி.

போர் வெற்றிகளை வைத்துத் தேர்தல் நேரத்தில் வெல்லலாம் என்று கனவு காணும் அரசுத் தரப்பு, முதலில் தேர்தல்களை நியாயமாக நீதியாக நெறிமுறையாக நடத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

அதைச் செய்துகொண்டு, பொதுத் தேர்தல் சவாலை அரசுத் தலைவர் விடுப்பாரானால் அதில் நீதி, நியாயம் இருக்கும்.

அதற்கு அரசும் அதன் தலைவரும் தயாரா?

http://www.sudaroli.com/editorial.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.