Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்! அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலுக்கு முன்பாக

ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்!

அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த

மஹிந்த ராஜபக்க்ஷ உத்தேசம்

திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்று குறித்து தென்னிலங்கை அரசியலில் பேச்சுகள் அதிகம் அடிபட்டாலும் பொதுத் தேர்தல் ஒன்றை இப்போதைக்கு நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தித் தனது பன்னிரெண்டு ஆண்டு கால அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே அடுத்த பொதுத்தேர்தல் குறித்துச் சிந்திப்பது என்ற முடிவில் இருக்கிறார் எனத் தெரியவருகின்றது.

இதற்கமைய, அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி தனது அடுத்த பதவிக் காலத்தை உறுதிப்படுத்திய பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அவர் உத்தேசித்திருக்கின்றார்.

ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இத்தகவலை வெளியிட்டன.

இலங்கை அரசமைப்பு ஏற்பாடுகளின்படி

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்று முதல் தடவையாக அதிகாரத்துக்கு வரும் ஒரு ஜனாதிபதி, தமது முதலாவது பதவிக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் எஞ்சிய இரு ஆண்டுப் பதவிக் காலத்துக்குள் தாம் விரும்பிய ஒரு வேளையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும்.

அத்தகைய தேர்தலில் அவரே மீண்டும் வெற்றிபெறுவாரானால், தமது முதலாவது பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்துக்கு அதிகாரத்தைப் பிரயோகித்த பின்னர், அதன் முடிவில் அடுத்த ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்துக்கான அதிகாரத்தை மீண்டும் பதவியேற்றுத்

தொடரமுடியும். இதன்மூலம் இரண்டாவது தேர்தலை முற்கூட்டியே நடத்திவிட்டு மொத்தம் பன்னிரண்டு ஆண்டுகாலம் அவர் ஆட்சியில் இருக்க முடியும்.

ஆனால் இரண்டாவது பதவிக் காலத்துக்கான தேர்தலில் அவர் தோற்பாராயின், வெற்றிபெற்ற வேட்பாளர் உடனடியாகவே அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிலைமை ஏற்பட்டுவிடும்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தமது இரண்டாவது பதவிக் காலத்துக்கான தேர்தலை ஓராண்டு முற்கூட்டியே நடத்தி வென்றார். எனினும், தமது முதலாவது பதவிக் காலத்தின் எஞ்சிய ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய முன்னரே, இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியை, இரண்டாவது தேர்தல் முடிந்த கையோடே பகிரங்க சத்தியப்பிரமாணம் மூலம் அவர் ஆரம்பித்து விட்டதால் முதலாவது பதவிக் காலத்தின் எஞ்சிய ஓராண்டு அதிகாரத்தை அவர் இழக்க வேண்டியவரானார். இதனால் மொத்தம் பதினொரு ஆண்டு காலமே அவர் அதிகாரத்தில் இருக்க முடிந்தது.

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வென்ற பின்னர், தமது முதலாவது பதவிக் காலத்தின் எஞ்சிய ஒருவருடம் முடியும் வரை காத்திருந்து, அதன் பின்னர் தமது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பை அவர் செய்திருப்பாராயின் மொத்தம் பன்னிரண்டு ஆண்டுகள் அவர் பதவியில் இருந்திருக்க முடியும்.

இந்தப் பின்புலத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அடுத்த பதவிக் காலத்தையும் நேரத்துடன் உறுதிப்படுத்த விரும்புகிறார் எனத் தெரிகின்றது.

2004 ஏப்ரலில் தெரிவான தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்காலம் 2010 ஏப்ரல் வரையாகும்.

இன்றைய நிலையில் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலை முற்கூட்டியே நடத்திக் குழப்பாமல் 2010 ஏப்ரலுக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்தித் தமது ஆட்சி அதிகாரத்தை நீடித்து, உறுதிப்படுத்துவது மேல் என்று ஜனாதிபதி மஹிந்த கருதுகின்றார்.

2005 நவம்பர் 17 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வென்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார். 2009 நவம்பர் 19 ஆம் திகதி அவரது ஆட்சி நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும். அதன்பின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுக்கமுடியும்.

2010 ஜனவரி,பெப்ரவரி மாதங்களில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அவர் விரும்பினால் நடத்தலாம்.

அப்படி ஒரு தேர்தலை நடத்தி, அதில் வென்று அதன் பின்னர் அதற்கு அடுத்த எட்டு ஆண்டுகளும் தாமே ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்தி,2017 நவம்பர் வரை தமது அதிகாரமே செல்லுபடியாகும் என்பதை நிலைநிறுத்தி, அதற்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தால், நாடாளுமன்றத் தேர்தலிலும் இலகுவாகப் பெரு வெற்றியீட்ட முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதுகின்றார் என்று கூறப்படுகின்றது.இதற்கான தேர்தல் திட்டங்களையும்,வியூகங்களையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.