Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பட்டறிவு தரும் பாடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டறிவு தரும் பாடம்

30.08.2008

""எமது யுத்த நடவடிக்கைகள் நாம் வகுத்த திட்டங்களின்படி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் புலிகளை முற்றாகத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு காலவரையறை ஒன்றை விதிக்க முடியாது. அவ்வாறு விதிப்பது மகா முட்டாள்தனம்.''

இப்படித் தெரிவித்திருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், நாட்டின் ஜனாதிபதிக்கு அடுத்து பாதுகாப்புத் துறையில் அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான காலவரையறைகளை எதிர்க்கட்சியினரும் வேறு தரப்பினரும் இதுவரை காலமும் விதித்து வந்தனர் என்பது போலவும்

அது தவறு என்ற மாதிரியும்

இப்போது கதைவிடுகின்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.

புலிகளை முற்றாக அழித்து, யுத்தத்துக்கு முடிவு கட்டுவது பற்றிய வீர,தீரப் பிரதாபச் சூளுரைகளையும் சவால்களையும் அவ்வப்போது வெளியிட்டு, தென்னிலங்கை மக்களை உசுப் பேற்றி, சூடாக்கி வந்த தரப்பினர் எல்லோரும், ""அப்படிக் காலவரையறை விதிப்பது பெரும் முட்டாள்தனம்'' என்று இப்போது விமர்சிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பக்கத்தில்தான் இன்றும் இருக்கின்றனர்.

அடுத்த பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கமாட்டார் என்று அவரது வாழ்வுக்கும்

அதேபோல இந்த யுத்தத்தை அரசுப் படைகளுக்கு வெற்றியாக முடிப்பதற்கும்

காலவரையறை விதிக்கும் அறிவிப்புகள் அவ்வப்போது அவரது பக்கத்தில இருந்துதான் வந்தன என்பதை நாம் மறந்து விடவோ, மறைத்து விடவோ முடியாது.

அப்படிக் காலவரையறை விதிப்பது முட்டாள்தனமானது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் சூழல் இப்போதாவது ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமே.

பாதுகாப்பு விவகாரங்களில் தேர்ந்த விற்பன்னரான இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இலங்கை யுத்தத்தை ஒட்டி அண்மையில் கூறிய கருத்தை, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இன்னும் சரியாக உள்வாங்கியிருப்பார் என்றால் "யுத்தத்துக்குக் காலவரையறை விதிப்பது முட்டாள்தனம்' என்ற தமது தற்போதைய ஒப்புதல் வாக்குமூலத்தையும் தாண்டி வேறு விடயங்களையும் வெளியிட்டிருப்பார் என்று எதிர்பார்த்திருக்க முடியும்.

""இலங்கைப் படைகள் மோதல்களில் (battles) வெல்லலாம். ஆனால் இறுதி யுத்தத்தில் (war) வெல்வது கடினம்'' என்று இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தமது இலங்கை விஜயத்தின் பின் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றார்.

ஆனால் அதை ஏற்று, ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சோ, அதன் செயலாளரோ, இலங்கைப் பாதுகாப்பு உயர் வட்டாரங்களோ இல்லவே இல்லை என்பதும் தெளிவு.

என்றாலும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குக் காலக்கெடு விதிக்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு களநிலைப் பாடத்தை அவர்கள் கற்றுக்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமே.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கச் சிந்தனைப் போக்கில் சிக்கிக்கிடக்கும் கொழும்பு அரச ஆட்சிப்பீடம், ஈழத் தமிழருக்கு எதிரான யுத்தத்தில் வென்று, புலிகளை முற்றாக அழித்தொழித்து அடக்குவதன் மூலம், தாம் விரும்பும் திட்டம் ஒன்றைத் தமிழர்கள் தலையில் தீர்வு என்ற பெயரில் வல்வந்தமாகத் திணித்து, தமது பேரினவாத ஆதிக்கத்தை இலங்கைத் தீவில் நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நப்பாசையில் பகல் கனவில் ஆழ்ந்து கிடக்கின்றது.

அந்த அதீத நம்பிக்கைக் கோட்டையின் அத்திபாரமாகவும், பலம்மிக்க சுவராகவும் திகழ்வது புலிகளை நிரந்தரமாக அழித்து யுத்தத்தில் ஒரேயடியாக வென்றுவிடலாம் என்ற ஒரே உறுதிப்பாடுதான்.

அந்த உறுதிப்பாட்டுக்குக் காலக்கெடு விதிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்மூலம் தென்னிலங்கையில் போர் எழுச்சியைத் திட்டமிட்டு விஸ்வரூபம் எடுக்க வைக்க கொழும்பு அரசின் பாதுகாப்புத் தரப்பால் அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப்பட்டன.

எனினும் யதார்த்தக் கள நிலைமை, எதிர்பார்த்த காலக்கெடுக்களுக்குள் யுத்த விடயங்களை ஒப்பேற்ற முடியாது என்ற படிப்பினையை இப்போது தந்து நிற்பதால் அந்தக் காலக்கெடு விதித்த தனது தரப்புகளைப் பார்த்து "முட்டாள் தனமான கணிப்பீடு' என்று குறிப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது வந்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா லலித் அத்த>லத்முதலி , ஜனாதிபதி பிரேமதாஸா ரஞ்சன் விஜேரத்தினா, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அனுருத்த ரத்வத்தை என்று முன்னைய ஜோடிகள் பல இலங்கை யுத்தம் தொடர்பாகக் கற்றுக்கொண்ட பல பாடங்களை மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ சகோதரர்களும் படித்துக்கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும்.

அப்போது "யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர காலக்கெடு விதிக்க முடியாது!' என்ற ஞானத்தையும் தாண்டி மேலும் பல விடயங்கள் அந்த ஜோடிக்கு உணர்ந்துகொள்ளக் கிடைக்கும்.

http://www.sudaroli.com/editorial.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.