Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன அழிப்புப் போரின் ஒரு அங்கமே இப்படுகொலை - தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்புப் போரின் ஒரு அங்கமே இப்படுகொலை - தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு

சனி, 30 ஆகஸ்ட் 2008 [பதிவு நிருபர்]

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு போரின் ஒரு அங்கமாகவே இக் கொடூரமும் அரங்கேற்றப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின் முழுவடிவமும் வருமாறு…

செ.கயேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

30-08-2008

பொது மக்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்.

கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்பு என்னும் இடத்தில் அகதிகளாக தங்கியிருந்த பொது மக்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா இராணுவத்தினர் மன்னார் பகுதியில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளால் தமது வீடுகள் சொத்துடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உயிரை பாதுகாப்பதற்காக இடம் பெயா்ந்து கிளிநொச்சி வரை வந்து தங்கியிருந்தவர்கள் மீதே மிலேச்சத்தனமான தாக்குதலை அரச படைகள் மேற்கொண்டு இரண்டு குழந்தைகள் ஒரு தாய் மேலும் இரண்டு பேருமாக மொத்தம் ஐந்து பேரை பலியெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு போரின் ஒரு அங்கமாகவே இக் கொடூரமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறி தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் வருமாறு சிங்கள அரசு துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்து வருகின்றது. எனினும் பொது மக்கள் தமக்கு பாதுகாப்பான இடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் மட்டும் தான் என்ற அடிப்படையில் அவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.

மக்கள் அங்கிருந்து வெளியேறாத நிலையில் தமது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று கருதும் சிங்கள அரசு மக்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே இடம் பெயா்ந்த மக்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகள் எதனையும் சென்றடைய விடாது அரசு தடை செய்துள்ளது. எனினும் மக்கள் வன்னியில் இருந்து வெளியேறி வவுனியாவிலுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசத்திற்குள் செல்லாத நிலையில் வன்னியில் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களது வாழ்விடங்கள் மீது இவ்வாறான எறிகணைத் தாக்குதல்களை நடாத்தி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இப் படுகொலை இடம் பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட காயமடைந்த பொது மக்களது விபரம் வருமாறு.

படுகொலை செய்யப்பட்டோர் பெயர் விபரங்கள்

01. கறுப்பையா ஆனந்தராசா (அகவை 28)

02. அழகேசன் நிலுகா பத்மகலா (அகவை 28)

03. விஸ்வராசா திலகேஸ் (அகவை 27)

04. விஸ்வராசா திலகேஸ் அவர்களின் ஒரு மாதக் கைக்குழந்தை

05. ஆனந்தராசா கௌதம் (அகவை 02)

படுகாயமடைந்தோர் பெயர் விபரங்கள்

01. பாலசுப்பிரமணியம் கல்யாணி (அகவை 42)

02. பாலசுப்பிரமணியம் ராஜேஸ்வரி (அகவை 17)

03. அழகேஸ்வரன் இயல்விழி (பத்துமாதக்குழந்தை)

இத்தக்குதல் சம்பவததினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சர்வதேச சமூகம் தொடர்ந்தும் பாராமுகமாக இருக்காது உடனடியாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து பொது மக்களை பாதுகாக்கவும் பொது மக்களுக்கான உணவு மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

இவ்வண்ணம்

செ.கயேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

http://www.pathivu.com/?p=3289

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.