Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் அரசு 1,75,000 ரூபா கடனாளியாக மாற்றியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கடனாளியாக்கியுள்ள அரசாங்கம், வரலாற்றிலேயே 30 வீத பண வீக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது.

சர்வதேச நாடுகள் நிதி உதவிகள் வழங்காமையினால் வர்த்தகப் பிணை முறிகளுக்கு கடனை வாங்கி நாட்டைப் பாதாளத்தில் அரசாங்கம் தள்ளி விட்டுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக இக்குற்றச்சாட்டை சுமத்தினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது, தேசிய வங்கிகளிலும் சர்வதேச வங்கிகளிலும் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வர்த்தக பிணை முறிவில் பெற்றுக்கொண்டுள்ளது. இதே ரீதியில் மேலும் பல மில்லியன் ரூபா கடனை பெற்றுக் கொள்ளவுள்ளது. இப்போதே எமது நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் ரூபா 1,75,000 கடனாளியாக்கியுள்ள அரசாங்கம் அத்தொகையை மேலும் அதிகரிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிஞ்சிய அரசாங்கத்தின் வீண் செலவுகளுக்காகவே வர்த்தக கடன்களை பெற்றுக் கொள்கின்றது. மக்களை கடனாளியாக்கி, பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் மனித உரிமைகள் மீறல் உட்பட பல்வேறு சுயாதீன குழுக்களை அமைக்காததால் வெளிநாடுகள் நிதியுதவிகளை வழங்குவதை குறைத்துள்ளன.

பண வீக்கம் நூற்றுக்கு 30 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான நிலையேற்பட்டது இதுவே முதன் முறையாகும். அபிவிருத்திக்கும் மக்கள் நலன்களுக்காகவும் கடன் வாங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் 110 அமைச்சர்களின் சுகபோகங்களுக்காக வர்த்தக கடன்களை வாங்கி மக்களை கடனாளியாக்குவதை ஐ.தே. கட்சி கடுமையாக எதிர்க்கின்றது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்வரை வயிற்றைக் கட்டிக் கொள்ளுங்கள் எனக்கூறும் அரசாங்கம் தமது ஏதாவது சிறப்புரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளதா? இல்லை. சரத் சந்திர ராஜகருணா எம்.பி.

தர்ம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தப் போவதாக அரசியலுக்கு வந்த ஜாதிக ஹெல உறுமய இன்று பௌத்த குருமாரை சிறையிலடைக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளது. அரசியலமைப்பிலேயே பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெல உறுமய கொண்டு வந்த ஒலி மாசடைதல் சட்டமூலத்தால் இன்று பௌத்த மத பாராயணத்தை ஒலிபரப்புச் செய்த பன்னல பஞ்ஞாலோக தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவா ஹெல உறுமயவின் தர்ம ராஜ்ஜியம். இது தொடர்பாக இவர்கள் பௌத்த மக்களுக்கு பதில் கூறவேண்டும் என்று இங்கு கருத்து தெரிவித்த சரத் சந்திர ராஜகருணா எம்.பி. தெரிவித்தார்.

tamilwin.com

இணையத்திலையும் கனவு கவிதைகளில் வாழும் ஈழத்துப் பிரசைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. செல்வம் கொளிக்க ஓகோ எண்டு இருக்கினம். உண்மையான நாடு எண்டா தானே அந்த நாட்டுக்கு பொருளாதாரம் வரி முறிகடன் எண்ட தேவைகள் பொறுப்புகள் இருக்கும். பிணங்களை எண்ணி விசிலடிச்சு பொழுது போக்கிற பிரசைகளுக்கு என்ன வெண்டு நாட்டின் பாதுகாப்புத் தேவையை நிறைவேற்றிற கடன்கள் எண்ட சுமைகள் எல்லாம் வரப்போகுது.

சிறீலங்காவின் பொருளாதாரம் புதைகுழிக்குள் அதளபாதாளத்துக்கை போகுது. புலம்பெயர்ந்த தமிழருக்கு மிஞ்சியிருக்கிற வேலை பாதாளத்துக்கு வெளியில நிண்டு மண்ணைத் தூவி தேவாரம் பாடுறது தான்.

சிறீலங்காவுக்கு எரிபொருள் விலை ஏறிவிட்டுத்து ஆனால் வன்னியில பச்சத்தண்ணியிலான் எல்லாம் ஓடுது.

Edited by kurukaalapoovan

இணையத்திலையும் கனவு கவிதைகளில் வாழும் ஈழத்துப் பிரசைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. செல்வம் கொளிக்க ஓகோ எண்டு இருக்கினம். உண்மையான நாடு எண்டா தானே அந்த நாட்டுக்கு பொருளாதாரம் வரி முறிகடன் எண்ட தேவைகள் பொறுப்புகள் இருக்கும். பிணங்களை எண்ணி விசிலடிச்சு பொழுது போக்கிற பிரசைகளுக்கு என்ன வெண்டு நாட்டின் பாதுகாப்புத் தேவையை நிறைவேற்றிற கடன்கள் எண்ட சுமைகள் எல்லாம் வரப்போகுது.

சிறீலங்காவின் பொருளாதாரம் புதைகுழிக்குள் அதளபாதாளத்துக்கை போகுது. புலம்பெயர்ந்த தமிழருக்கு மிஞ்சியிருக்கிற வேலை பாதாளத்துக்கு வெளியில நிண்டு மண்ணைத் தூவி தேவாரம் பாடுறது தான்.

சிறீலங்காவுக்கு எரிபொருள் விலை ஏறிவிட்டுத்து ஆனால் வன்னியில பச்சத்தண்ணியிலான் எல்லாம் ஓடுது.

அண்ணாத்தை நீங்கள் எங்கு இருக்கிறீகள்?

உங்களுக்கு கால் பிடிச்சே கை நோகுமே? அப்படி இருந்தும் யாழ்களத்தில் எழுதுறீங்களே முடியல்ல :mellow:

பிரஜைகளைத்தானே 175000 ரூபா கடனாளியாக்கியுள்ளது. அதனால்தான் சில அமெரிக்க பிரஜைகள் பெரும் சொத்துக்கு அதிபதியாகியுள்ளனர்.

ரட்ணசிரி விக்கிரமநாயக்கா சிங்கள மக்களை இனப்பெருக்கம் செய்யுமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளா அதன் முலமாக இலங்கை பிரஜைகளின் தலைக்கு சுமத்த பட்டிருக்கும் கடன் தொகையை புதிதாக பிறக்கும் குழந்தைக்கும் சுமத்தி குறைக்கலாம் என காரணம் கூறியுள்ளாராமே உண்மையா

ஈழவன் GDP GNP என்பது போல் இதுவும் கடனை அளவிட ஒப்பிட பாவிக்கும் முறைதான்.

சிங்களவர்கள் இனப்பெருக்கம் செய்வது உந்த அளவீட்டு முறையில் கடன் குறைந்த நாடுமாதிரி காட்டி நற்சான்றிதள் வாங்க அல்ல.

போரில் இறப்பவர்களை ஈடு செய்ய. நீண்ட கால நோக்கில் சனத்தொகை பெருகி வரும் சமூக விளைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றத்திற்கு ஏற்றவர்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

இஸ்ரேலில் இருக்கும் பலஸ்தீனத்தவர்கள் இனப்பெருக்கம் செய்வதும் எண்ணிக்கையில் பலமாகி யூதர்களை அவர்களது நாட்டுக்குள்ளேயே பலவீனப்படுத்தும் நோக்கில். அதனால் தான் இஸ்ரேல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து யூதர்களை ஊக்குவிப்புகள் கொடுத்து பெருமளவில் உள்வாங்கி வருகிறது.

தென்ஒசெட்டியா சண்டை முடிந்தும் முடியாததுமாக அதன் மற்றும் ருசிய ஊடகங்களில பரிமாறப்பட்ட கருத்தும் கிட்டத்தட்ட 75000 தொகையை உடையவர்களில் 2000 பேரை இழந்துவிட்டோம். இனபெருக்கம் தேவை என்று.

நாடு அதன் பலம் என்று வந்துவிட்டால் மனிதவளம் தான் எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் அதிசயமான விடமும் அல்ல. சிறீலங்காவின் யுத்த நடவடிக்கைகளை இது பாதிக்கப்ப போவதும் இல்லை. இதை விட பெரிய தொகைகள்.. பிரிட்டனின் மக்களின் தலையில் கிரடிட் காட் மூலம் கட்டப்பட்டுள்ளன..! அவை..???! :huh::mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.